மூன்று
எழுத்தில் என் மூச்சு இருக்கும்.
அனைவருக்கும் வணக்கம் இது என்ன புது தலைப்பு என யாரும் என்ன வேண்டாம்.அந்த
கால தெய்வத்தாய் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும்.
மூன்று எழுத்தில் என்
மூச்சிருக்கும் அது முடிந்த
பின்னாலும் பேச்சு
இருக்கும்
. .. ..
என துவங்கி அந்த பாடல் கடைசியாக கடமை அது கடமை என முடிவுறும்.
நான் சற்று ஆழமாக
யோசித்துபார்கிறேன்.இறைவனால் படைக்கப்பட்ட மனித இனத்திற்கு மேற்சொன்ன தலைப்பில்
எந்த எந்த வகையில் மூன்று எழுத்துகளுடன்தொடர்புஉள்ளது.அவைகள் எந்த எந்த வகையில்
மனிதனை ஆட்டிப்படைகிறது.அவனை வெறி கொள்ளவைக்கிறது.அவனது சிந்தனையை சிதறடிகிறது
நாம் சற்று யோசிப்போமா நேயர்களே!
மனிதனுக்கு என்றுமே மூன்று எழுத்து உள்ள
பொருட்களின்மேல் தீராத ஆசை,மோகம் எப்போதுமே உண்டு.அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ
முடியாது.ஏன் எனில் அவன் இந்த பூமிக்கு வந்ததே தாய்மை என்ற மூன்று
எழுத்தால்தான்.குழந்தையாக இருந்த அவன் வளர வளர அவன்மனதில்இந்தமூன்றுஎழுத்துமோகமும்வளர்ந்துகொண்டுதான்
வருகிறது.
அவையாதெனின்பணம்,பதவி சொத்து,சுகம்,மனைவி ,இது
போல இன்னும் பற்பல உண்டு.இவைகளின் மேல் அவன் எவ்வளவு சேர்த்தாலும் சரி எவ்வளவு
சம்பாதித்தாலும் சரி எத்தனை பெண்களை
பார்த்தாலும் சரி,அவர்களுடன் பழகினாலும் சரி போதும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு வருவதே
கிடையாது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தவிர.
புத்தர் பெருமான் சொன்ன
வாசகம்தான் என் நினைவுக்கு வருகிறது.ஆசையே துன்பத்திற்கு காரணமென்று சொன்னார்
அல்லவா. எனவே நாமும் நமது வாழ்கையில் இனிமேலாவது
கூடுமானவரை மேல்சொன்ன மூன்று எழுத்துகளில் அதிகம் ஆசைப்படாமல் அளவுடன் ஆசைப்பட்டு
வளமுடன் வாழ்வோம் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,இது ஆன்றோர்கள் சொன்ன
வாக்கு.நாமும்இனியாகிலும்அதனைகடைபிடித்துவாழ்வோமா?நன்றி!வணக்கம்!! அன்புடன் மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment