Wednesday, 13 March 2013

உருவம் பெரியதா?உண்மை பெரியதா>


உருவம் பெரியதா? அல்லது உண்மை பெரியதா?

உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் அன்புத் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வணக்கங்கள்.

இன்றைய தினம் நான் உங்கள் அனைவரின் சிந்தனைக்கு தரும் விருந்து யாதெனின் உருவத்தால் உயர்ந்தவை சிறந்ததா அல்லது உருவத்தில் சிறியதாக இருப்பினும் உண்மைச் செயலால்/பயனால் இது சிறந்ததா என்ற சிந்தனை வேழ்வியை நேயர்கள் பார்வைக்கு தருகிறேன்
.
முதலாவதாக  பாடலைப் பார்ப்போமா நேயர்களே:-
!
     தெள்ளிய ஆலின் சிறு பழத்தோர் விதை
     செம்மீன் சினையினும் நுண்ணிதே ஆயினும்
     அண்ணல் யானை ஆட்பெரும்படையுடன்
     மன்னருக்கிருக்க நிழலாகும்மே!!
     தேம்படு பனையின் திரள் பழுத்தோர் விதை
     வானுற ஓங்கி வளமுற வளரினும்
     ஒருவருக்கிருக்க நிழலாகும்மா?

மேற்சொன்ன சங்ககால பாடலின் பொருள் யாதெனின் ஆலம் பழத்தின் விதை (ஆலமரமாக  பிற்காலத்தில் வளர உள்ளது )  உருவத்தில் மீனின் சினை முட்டையை விட மிகமிக சிறியதாக இருந்தாலும்கூட அந்தவிதை மண்ணில் ஊன்றி பின்னர் வளமுற வளர்ந்துவிடின் மன்னரது காலாட்படை,குதிரைப்படை,யானைப்படை,போன்ற எண்ணற்ற நபர்களுக்கு நிழல் தந்து இளைப்பாற இடம் தரும் அளவிற்குமாபெரும் ஆலமரமாக வளர்ந்து  உதவிசெய்கிறது.

அதேநேரம்பனைமரத்தின் விதை உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட பனைமரமாக  வளர்ந்துவிடும்போது  அதன் நிழலில் ஒருவர்கூட இளைப்பாற முடியாத நிலைதான் ஏற்படுகிறது.

இந்தப் பாடலை நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது என்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய எனது அன்புத் தெய்வமாகிய என் பாசத்திற்குரிய தந்தையார் அவர்கள் அடிக்கடி கூறிட  நான் கேட்ட பாடல் இது.

எனவே இதனை எண்ணிப்பார்த்து நம்மில் எவரும் எவரையும் உருவத்தை வைத்து எடைபோட கூடாது எனும் சிந்தனைதனை நமது வாழ்வில் கடைபிடிப்போமாக.

அனைவருக்கும் நன்றி.வணக்கம்.

மீண்டும் நாளை சந்திப்போமா (பேராசிரியர் திரு
 

சாலமன் பாப்பையா அவர்கள் சொல்வதுபோல) 

வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு 

No comments:

Post a Comment