Friday, 15 March 2013

ஆறில் இரண்டு போனால் வரும் வியாதி!!


என்றும் உண்மையானவை !!


பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை மட்டும் அல்ல.என்றுமே உண்மையாக இருக்ககூடிய அருகதை படைத்த  விஷயங்கள் சில மட்டுமே.அவை;-


1)      இறைவன் ஒருவனே!
2)      இனம் என்பது இரண்டுதான் (ஆண்,பெண்)
3)      காலம் மூன்று.(கடந்த,நிகழ்,எதிர்!
4)      திசைகள் நான்கு (வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு)
5)      காப்பியங்கள்ஐந்து(மணிமேகலை,வளையாபதி,
குண்டலகேசி,சீவகசிந்தாமணி,சிலப்பதிகாரம்)
6)      சுவை என்பது ஆறு (உப்பு,உரைப்பு,இனிப்பு,புளிப்பு,கசப்பு,துவர்ப்பு )
7)      ஸ்வரங்கள் என்பது ஏழு(ச,ரி,க,ம,ப,தா,நி,ச)
8)      திக்குகள் எட்டு
9)      ரசங்கள் என்பது ஒன்பது
10)   மனித உணர்வுகள் என்பது பத்து(அதனால் தான் பசிவந்திட பத்தும் பறந்துபோம் என முன்னோர்கள் சொன்னார்கள்.

 
இதில் ஆறாவது குறிபிட்டுள்ள சுவைகளை மனிதன் சரிவர பயன் படுத்தாதனால்தான் அவனுக்கு வியாதிகள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை நாம் மறுப்பதற்கு இல்லை. 

எப்படி எனில் இனிப்பு,உப்பு,உரைப்பு புளிப்பு ஆகிய இந்த நான்கு சுவைகளைமட்டுமே மனிதன் அன்றாடம் தமது உணவில் சேர்த்து வாழ்கிறான். 

கசப்பு மற்றும் துவர்ப்பு இவைகளை அறவே சேரப்பது என்பது கிடையவே  கிடையாது. கசப்புக்கு பாவைக்காய் மற்றும் துவர்ப்புக்கு வாழைப்பூ நம்மில் எத்தனை பேர் பயன் படுத்துகிறோம்.இல்லை இல்லவேஇல்லை.

அதனால்தான்நமக்குவியாதிகள்.எனவேஇனிமுதல்கொண்டாவது நாம் நமது உணவில் கசப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய சுவைகளை சேர்த்து நோய் நொடி இல்லாமல் நூறாண்டுகள்  வாழ்வோமாக!! நன்றி வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு   

No comments:

Post a Comment