படித்ததில்
பிடித்தது !!
என் அழகிய இளம் காதல் தேவதையே!
உன்னுடைய குலவை ஒலி தனை கேட்பதர்காகத்தானோ என்னவோ மண் பானைகள்
உருவாக்கப்படுகின்றனவா? ஏன் கண்ணே எனக்கு
தெரியவில்லை
.
குறிப்பிட்ட விரலால் மட்டுமே குங்குமம் இடச் சொன்ன உன் தாயின் பேச்சை நீ
கொஞ்சம் மீறு கண்ணே!அதனால் தவறு ஏதும் நிகழ்ந்துவிடபோவதில்லை.
ஏன் என்றால் உன் கையில் உள்ள மற்ற விரல்களும் அந்த மகிழ்ச்சியை பெற
வேண்டாமா!பதில் சொல்லடி என் பைங்கிளியே!!
பலாப் பழத்தை நீ பார்த்தால் மட்டும் போதுமடி என் கண்ணே!
உரிக்க அவசியம் இல்லாமல் அது சுளையாகவே பழுத்து தொங்கும் இதில் சந்தேகம் ஏதும் எனக்கு இல்லையடி என் காதல் கனிரசமே!!
திருச்செந்தூருக்கு நீ பால்குடம் எடுத்தாயாமே! கேள்விப்பட்டேன் காதலியே!
எனக்காக ஆறுபடை வீடுகளுக்கும் காவடி எடுத்துவிடு. இது காவடிகளின்
விருப்பம்
.
(எனது ஆருயிர் அண்ணன் மதிப்பிற்குரிய தமிழ் கடல் நெல்லை கண்ணன்
அவர்கள் எழுதிய “காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்” என்ற கவிதை தொகுப்புகள்
புத்தகத்தில் நான் படித்ததில் எனக்கு பிடித்தது மேலே சொன்னவைகள். நீங்களும் வாங்கி
படியுங்கள் நேயர்களே பதிப்பாளர்:வேலு கண்ணன் பதிப்பகம்.69,அம்மன் சன்னதி
தெரு திருநெல்வேலி.)
No comments:
Post a Comment