Sunday, 3 March 2013

தனி வங்கி தரணிக்கு தேவையா?

பெண்களுக்கு மட்டுமான வங்கிகள்!!

 
 
 அனைவருக்கும்  வணக்கம். கடந்த மாத இறுதியில்  பாராளுமன்றத்தில் 
 
நடைபெற்ற மாண்புமிகு நிதி அமைச்சரால் சமர்பிக்கப்பட்ட நிதிநிலை 
 
அறிக்கையின் போது திரு ப. சிதம்பரம் அவர்கள் தந்த பரபரப்பான ஒரு 
 
அறிவிப்பு தான் நான் தலைப்பில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. அதாவது 
 
ஆங்கிலத்திலே சொல்லுவார்கள். To the Women,For the Women, by the women என்று 
 
பெண்களால்,பெண்களுக்கு, பெண்களுக்காக மட்டுமே என கூறுவதுபோல.
 
நாம் சற்று விரிவாக விவாதிப்போம்.  ஆணுக்கு பெண்  சரிநிகர்   சமம் 
 
என்று அகிலமே ஆமோதித்து அந்த கருத்தை உறுதி செய்து ஏற்றுக்கொண்டு 
 
செயல்படுத்தி வரும்வேளையில் இது போன்ற மூன்றாம் தரமான 
 
அறிவிப்புகள் எல்லாம் தேவையா?  இந்த விஷயம் பற்றி எதுவும் அறியா 
 
ஒரு அந்நிய நாட்டுக்காரன் எப்படி புரிந்துகொள்வான்? என்னவோ இந்திய 
 
நாட்டில் வங்கிச் சேவைகள் என்பது ஆண்களுக்கு மட்டும் தான் உள்ளது 
 
போல ஒரு போலியான தோற்றத்தினை இந்த அறிவிப்பு தருகிறது என்றே 
 
நான் கருதுகிறேன்.  இன்றைக்கு நமது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் 
 
நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும் அதில் பணி புரிவோர்களில் 
 
பாதிக்கு பாதி என ஆண்களும் பெண்களும் இணைந்தே இருக்கிறார்கள்.
 
அதுபோலவே வாடிக்கையாளர்களும் சரிநிகர் சமமாகவே வந்து செல்வது 
 
உண்டு, எவ்வித பாகுபாடுகளோ வேற்றுமைகளோ ஏதுமின்றி.  அப்படி
 
நிலைமை ஒழுங்காக சென்றிடும்போது இது போன்ற அதிரடி அறிவிப்புகள் 
 
தேவை இல்லாதது என்றே நான் கருதுகிறேன். எதிர் வரும் நாடாளுமன்ற 
 
தேர்தலைமனதில்வைத்தேஇந்தஅறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது என்றுதான் 
 
நினைக்க தோன்றுகிறது. பெண்கள் வாக்கு வங்கியை ஈர்க்க வேண்டி 
 
அவர்களுக்கு தனி வங்கி அறிவிப்பு செய்திட்ட மத்திய நிதி அமைச்சர் 
 
அவர்களின் மதி நுட்பமான செயலுக்கு நாம் அனைவரும் தலை தாழ்ந்து 
 
வணங்கிடுவோம். வாழ்க அவரது பெண்கள் இனத்தின் மேல் உள்ள 
 
அக்கறை. வளர்க அவர்தம் பொதுநல தொண்டு ! ஜெய்ஹிந்த்!!  
 
நன்றி பல! வணக்கம் பல!! 


No comments:

Post a Comment