என்ன
செய்யப் போகிறது மத்திய அரசு
இலங்கை
தமிழர்கள் விஷயத்தில்?
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நடைபெற்ற
உச்சகட்ட போரிலே லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மகிந்திரா
ராஜபக்ஷே கொக்கரித்துக்கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கையாலாகாத மத்திய
அரசு அந்த கொடும் செயலுக்கு தன்னால் ஆனா எல்லா உதவிகளையும் இரகசியமாக செய்து
அக்கிரம இலங்கை அரசை ஆதரித்த மத்திய காங்கிரஸ் ஏகாதிபத்திய அராசங்கம் இன்னும் என்ன
செய்ய காத்திருக்கிறது.
ஒரேஒரு ஜீவன் கொல்லப்பட்டான் (ராஜீவ்காந்தி)என்ற
காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழ் இனத்தயே அழிப்பதற்கு துணை நின்ற மத்திய அரசு
இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறது?
ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மூன்று கருமாதிகள்
முடுவுற்ற நிலையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறது?
கொடுங்கோலன்
நம் தமிழ் இனத்தை கொன்று குவித்து அவர்கள் சிந்திய இரத்த பெருக்கை அள்ளி பால்
பாயாசம் சாப்பிட்ட ராஜபக்சேவுக்கு இன்னும் இந்த நாட்டில் எத்தனை கோவில்களில் அவர்
தரிசனம் செய்ய சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க போகிறது?
சூடு சொரணை மானம்
வெட்கம் கடுகு அளவு கூட இல்லாத மத்திய அரசே வரலாற்றை சற்று பின்னோக்கித் திரும்பி பார்.
கிழக்கு பாகிஸ்தானில் இதே போல இன படுகொலைகள் நடந்த அந்தநாளில் அன்றைய பாரத பிரதமர்
அன்னை இந்திரா அவர்கள் எப்படி செயல்பட்டார்.எண்ணி பார்க்க வேண்டாமா?
நம் நாட்டு
ராணுவத்தை அங்கே அனுப்பி அவர்களுக்கு தனி நாடு பெற்று தந்த அந்த அன்னை
இந்திராகாந்தி அவர்களின் செயல்பாடு எங்கே?
இங்கே தமது கணவன் ஒருவன் புலிகளால்
கொல்லப்பட்டான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக நம் ராணுவத்தின் அனைத்து உதவிகளையும் இலங்கை அரசாங்கத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுத்த சோனியா காந்தி எங்கே?
மன்னிக்க வேண்டும்
எனக்கு அவர்களை அந்த புண்ணிய அடை மொழியாம் அன்னை என்று அழைக்க மனம் வர வில்லை.
இதற்கு மேலும் மத்திய அரசு இன்னும் மௌனம் காத்து வருமேயானால் நான் சத்தியமாக
சொல்கிறேன் தமிழ் நாட்டில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலாகட்டும் அதன் பின் வரும்
சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் ஒருஒட்டு கூட விழாது மட்டுமல்ல எந்த காங்கிரஸ்காரனும் தமிழ்
நாட்டு வீதியில் நடமாடக்கூட முடியாத
நிலைதான் ஏற்படும் என்பதனை ஒரு தமிழன் என்ற முறையில் மத்திய காங்கிரஸ் அரசை நான் எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்.
என்தலைவர் கூட
இந்த விஷயத்தில் அன்றையதினம் மௌனம் காத்தது என்னைபோன்ற தமிழ் ஆர்வலர்களின்
நெஞ்சில் இன்னும் ஆறாத ரணமாகத்தான் உள்ளது.அன்று அவர்மட்டும்
அண்ணா சொன்னதுபோல்
பதவி எங்களை பொறுத்தவரை மேலேபோடும் துண்டு போன்றது.கொள்கை நாங்கள் உடுத்தும் மானம்
காக்கும் வேஷ்ட்டியை போன்றது என்று தீவிரமாக செயல் பட்டிருப்பாரேயானால் அந்த லட்சக்கணக்கான
படு கொலைகளை தடுதிருக்க முடியும்.
என்ன செய்வது நாம் அந்த அளவு கொடுத்து வைத்திருக்கவில்லையே.
இப்போது டெசோ என் ரெல்லாம் போராடுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற சொல்லைத்தான்
நினைவு படுத்துகிறது.
மத்திய அரசு உடனே இப்போதாவது தனது கடந்த கால தவறுகளை
உணர்ந்து தமிழர்கள் நலனை எண்ணிப்பார்த்து செயல் பட்டால் தான் தமிழகம் இந்தியாவோடு
இணைந்திருக்க முடியும் என தமிழ் ஆர்வலர்கள் கூறுவதை என்னால் மறுக்க முடியவில்லை
என்பதை மட்டும் நான் மத்திய அரசுக்கு கூற கடமைபட்டுள்ளேன்.பாப்போம் இனி என்ன நடக்க
போகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியில் வந்த பின்பும் முலாயம்சிங் மற்றும் மாயாவதியை தாஜா செய்து பதவி நாற்காலி தனில் ஒட்டிக்கொண்டு எஞ்சிய ஓராண்டுதனை அனுபவிக்கபோகிறதா அல்லது இப்போதாவது சோத்தில் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிட்டவனுக்கு வரும் உணர்ச்சி கொந்தளிப்பதுபோல இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மகாநாட்டில் அமெரிக்க அரசாங்ககத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள மனிதஉரிமைகள் மீறல் தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் ராஜபக்சே ஒரு மனிதஇனத்தின் மன்னிக்கமுடியாத கொடுங் கொலையாளி என்று குறிப்பிடும் திருத்த தீர்மானங்களோடு கூடிய வாக்கெடுப்பில் உண்மைக்கு நேர்மைக்கு சத்தியத்திற்கஆதரவாக தமிழ் இனத்திற்கு ஆதரவாக அந்த தீர்மானத்தை தாமே முன்மொழிந்து ஆதரித்து வாக்கு அளிக்கப்போகிறதா அல்லது . நம் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வெறும் கண்டன தீர்மானம் மட்டுமே நிறைவேற்றி கடனைக் கழிப்பதினாலே எந்த பிரயோஜனமும் இல்லை திரு மன்மோகன் சிங் அவர்களே. அங்கே ஜெனிவாவில் மேற்சொன்ன திருத்தங்களோடு கூடிய கண்டன தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து நிறைவேற்றினால் மட்டுமே நீங்கள் செய்த பாவத்திருக்கு ஓரளவு பரிகாரம் தேடுகிற முயற்சியாக அது உதவுகிறதா என்று பாப்போம். எது நடக்கப் போகிறது என்று.
நீங்கள் உண்மையான ஆண்மை நிறைந்த அரசாங்கமா என்று.பார்ப்போம். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment