தனிச் சிறப்பு எந்த வீட்டுக்கு ?
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் உயிரினும்
மேலாக நான் மதித்து வணங்கிடும் எனதுஅன்புத்
தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் அனைவருக்கும்
எனது காலை வணக்கங்கள் !!
இன்றையதினம் ஆன்மிகம் சார்ந்த ஒரு தலைப்பில்
எனது எண்ணச் சிறகுகளை விரித்து வானமதில்
வட்டமிட விழைகிறேன்.
எம்பெருமான் திருமுருகனுக்கு படைவீடுகள் ஆறு
இந்த அவனியில் இருந்தாலும் கூடஅவற்றுள்தலை
சிறந்த வீடு எது? என்பது பற்றிய ஆராய்ச்சிதான்
இன்றைய எனது கட்டுரையின் மூல வித்து.
ஆறு படை வீடுகளில் முதல்படை வீடு என்பது
திருப்பரங்குன்றம்,அதன் பிறகு திருச்செந்தூர்,
பிறகு பழனி, பிறகு திருத்தணி,அதன் பிறகு
சுவாமிமலை,கடைசியாக ஆறாவது படை வீடாக
வருவது பழமுதிர்ச்சோலை என்று பக்தர்களால்
அழைக்கப்படும் அழகர்கோயில் ஆகும்.
இவைகளில் ஐந்து படை வீடுகள் மலைமீது
அமைந்துள்ளது. எஞ்சிய ஆறாவது படைவீடுதான்
கடல் மட்டத்திற்கு கீழாக அமைந்து இருப்பதுடன்
பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை வாரி
வழங்குவதில் முதன்மை இடம் வகிப்பது என்பது
திருச்செந்தூர் மட்டுமே.
பொதுவாக பூகோள ரீதியாக எடுத்துகொண்டால்
உலகத்தில் நிலப்பரப்பு என்பது 25 விழுக்காடுகள்
என்றும் நீர்பரப்பு என்பது எஞ்சிய 75 விழுக்காடுகள்
என்பதனை அறிவியல் ஆர்வலர்கள் ஏற்றுகொண்ட
ஒரு கருத்து.
அந்த அடிப்படையில் நாம் பார்த்தால் நிலத்தில்
அமைந்து இருக்கும் மலைதனை விட
கடல் நீருக்கு அடியில் உள்ள தெய்வம்தான் அதிக
சக்தி படைத்தது என்பது மறுக்க முடியாத மற்றும்
மறைக்க முடியாத ஒரு கருத்து என்றே நான் எனது
சிற்றறிவுக்கு எட்டிய வரை சிந்தித்தேன். அந்த ஒரு
சிந்தனையை உங்களிடம் பகிர்ந்தும் கொண்டேன்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. வாழ்வில் மிகவும்
நொந்து நூலாகப் போனவர்கள் அனைவரும்
தவறாமல் வந்து வணங்கிடும் தெய்வம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதான்
என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது.
திரைப் படைத்துறை சார்ந்த எத்தனையோ நலிவு
அடைந்த கலைஞர்கள் இந்த திருத்தலத்திற்கு
வந்துவணங்கி அவனது அருள் பெற்றுச் சென்றதால்
இன்றைய தினம் சீரோடும் சிறப்போடும் இதுவரை
நன்குவாழ்ந்தும்வளர்ந்தும் வந்துஉள்ளனர்.
மறைந்த சாண்டோM.M.A.சின்னப்பத்தேவர்அவர்கள்
இந்த திருத்தலத்தின் தீவிர பக்தர் என்பது உலகம்
அறிந்திட்ட உண்மை.
என்னைப் பொருத்தவரை திசைமாறிச் சென்று
கொண்டிருந்த எனது வாழ்க்கைப் பாதைதனை
சரியான திசை நோக்கி திருப்பியது அந்த
செந்தூரான்தான் என்றால் அது மிகையான சொல்
அல்ல. அந்த முருகப் பெருமான் தான் இன்றுவரை
என்னையும் எனது குடும்பத்தையும் வாழ
வைத்துக்கொண்டிருகிறான்.
முருகன் புகழ் வாழ்க ! வளர்க !!
நன்றி !வணக்கம் !! அன்புடன்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment