அந்தக்கால
பெண்கள் -- -- இந்தக்கால பெண்கள்
ஒரு ஒப்பிட்டு பார்த்தல்
(JUST A COMPARISON)
.
பொதுவா ஐம்பது வருஷங்களுக்கு முன்பு இருந்த பெண்களையும்
தற்கால பெண்களையும் நான் இப்ப ஒப்பிட்டு பார்கிறேன்.
அக்கால பெண்கள் பார்க்க
நல்லா சிக்னு அழகாக இருந்தாங்க.
எந்த பெண்ணும் குண்டாகவோ இல்லை தொந்தியும் தொப்பையுமாகவோ இல்லை.
ஆனால் இப்ப
உள்ள பெண்கள் பெரும்பான்மையோர் ஏன் தொத புதன்னு குண்டாக இருக்காங்க. என்று ஆராய்ச்சி செஞ்சு
பார்த்தா எனக்கு கிடைச்ச விடை இதுதாங்க.
ஐம்பது வருஷத்துக்கு முந்தி எல்லாம் பெண்கள் அதிகாலையில் ஐந்து
மணிக்கு முன்பாகவே எழுந்து குனிஞ்சு வீட்டு வாசலைக் கூட்டிப் பெருக்கி மாக்கோலம் போட்டு பிறகு
கிணற்றில் நீர் இறைத்து தானே துணி துவைச்சு குளிச்சுட்டு பிறகு சமையல்வேலை பார்க்கும்போது அம்மியில்
அரைச்சு இட்லி மாவுக்கும் தானே கல் உரலில் அரைச்சு பிறகு உரலில் பொடி செய்ய உலக்கை
வைத்து வேலை செஞ்சு இப்படியாக உடம்பு
முழுக்க நல்ல வேலைகொடுத்து உழைச்சு வியர்க்க விறுவிறுக்க வாழ்ந்தாங்க.கொழுப்பு எதுவும் உடம்பில் ஏற வில்லை.முக்கியமா மதிய தூக்கம் கிடையவே கிடையாது.இரவு படுக்கபோவதற்குமுன் அனைத்து வீட்டு வேலையும் முடிச்சு படுக்க மணி அப்படி இப்படின்னு பார்த்தாலும் பன்னிரெண்டு ஆகிவிடும்.
ஆனால் இந்தக்கால பெண்கள் எழுந்திரிப்பதே எட்டு மணிக்கு மேலதான் எழுந்து பல்கூட
தேய்க்காமல் பெட் காபி குடிச்சுட்டு வீட்டு வேலை
எதுவும் செய்றது இல்லாம சுவிச்சு
போட்டு மோட்டார் மூலம் தண்ணீர்
டாங்கில் ஏற குளிச்சு அப்புறம் கிரைண்டர் மிக்சி வாஷிங் மிஷின் போன்ற மின்சாதங்களால் வேலை செய்வதாலும் உடல் உழைப்பு என்பது ஏதும் ஒரு பத்து பைசாவிற்கு கூட இல்லாததால் உடம்பு முழுசும் கொழுப்பு ஏறி குண்டாகவும் தொத புதவாகவும் காட்சி தர்றாங்க என
நினைக்கிறன்.இதே நிலைமை தொடர்ந்தா அப்புறம் என்னங்க டாக்டர் மற்றும் மருந்துக்கடை வியாபாரம் கண ஜோர்தான் போங்க !!
என்னங்க நான் சொல்றது சரியா.
உங்க கருத்தை எதிர் பார்கிறேன்.நன்றி
வணக்கம்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment