Sunday, 10 March 2013

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்-ஒரு சிந்தனை!!


தமிழ்த்தாய் வாழ்த்து கடவுள் வாழ்த்துக்கு இணையாகுமா?
பொதுவாக இன்று ஒரு அரசு சம்பந்தப்பட்ட விழா என்றாலும் சரி அல்லது ஒரு பொது அமைப்புகள் ஏற்பாடு செய்யும் விழாவாகட்டும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்பது இன்று வழக்கமாகிவிட்டது. இது சரியா?இது முறையா?இது தர்மம் தானா?சற்றே நாம் யோசிப்போம்.

இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகில் எத்தனையோ ஜீவ ராசிகள் உள்ளன.அவற்றுள் மானுடமும் ஒன்று. அந்த மானுடர்கள் பற்பல கண்டங்களில் பற்பல நிறங்களில் பல்வேறு சமுதாய அமைப்புகளுடன்  வாழுகின்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தத்தமது உணர்வுகளை வெளிப்படுத்தபல மொழிகளை கண்டுபிடித்து உரையாடுகிறார்கள்.அப்படிப்பட்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று

. அந்த மொழிக்கு மனிதர்களால் வணங்குவதர்காக உருவகப்படுத்தப்பட்ட அன்னைதான் தமிழ்த்தாய். அப்படி மானுடனால் உருவகப்படுத்தப்பட்ட தமிழன்னையை வணங்குவது எப்படி சர்வ உலகத்தையும் காத்து இரட்சிக்கும் கடவுளை வணங்குதற்கு சமமாகும்?இதுதான் என்போன்ற சிந்தனையாளர்கள் எழுப்பும் கேள்வி. 

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் தமிழ்த்தாய் பாடல் பாடுங்கள்.வேண்டாம் என்று சொல்லவில்லை அனால் அந்த பாடலை கடவுள் வாழ்த்து பாடலுக்கு இணை வைத்து வணங்கவேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம். இறைவனுக்கு இணைவைப்பதும் பேசுவதும் நம்மில் ஒரு மதத்தார்கள் ஒருபோதும் எற்றுகொள்வதும் இல்லை. அந்த பாதகசெயலை மன்னிப்பதும் இல்லை
நீங்களும் கொஞ்சம் சிந்தியுங்களேன் நன்றி வணக்கம். மீண்டும் அடுத்த கருத்துவிவாதத்தில் சந்திப்போமா நேயர்களே அன்புடன் மதுரை T.R.பாலு.     

No comments:

Post a Comment