Thursday, 14 March 2013

கசந்திடுமோ கல்கண்டின் சுவை?

விருந்தோம்பலின் வெளிப்பாடு !! 


 உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது அன்புத்தமிழ்  

நெஞ்சங்களே!  முதற்கண் உங்கள் அனைவருக்கும் 

எனது இனிய மாலை வணக்கங்கள் பல !!


கசக்குமோ கல்கண்டின் சுவை இதுதான் இன்றைய 

தலைப்பு.  

உங்களில் பலருக்கும் உண்மையில் ஏன் என்ன !

என்ன ஆச்சு மதுரை பாலு சாருக்கு? என்று கேள்வி 

எழுவதில் ஆச்சரியம் இல்லை. 

ஏன் என்றால் விஷயம் அப்படி.  விருந்துக்கு என்று 

வந்துள்ளவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று 

சங்க கால பாடல் நமக்கு சொல்லி உள்ளதை 

இப்போது பார்ப்போமா நேயர்களே:-


ஒப்புடன் முகம் மலர்ந்து 
                           
 உபசரித்து உவமை பேசி 

 உப்பில்லா கூழ் இட்டாலும் 

 உண்பதே அமிர்த்மாகுமாம்!

 கப்பிய கரிமுகத்துடன் கடு 

 கடுத்திடுவாறே ஆயின் 

 கல்கண்டு சாதமும் கசந்திடுமே !!


இது தாங்க பாட்டு.

இதுக்கு என்ன அர்த்தம் அப்படி

என்று கேட்டீங்கன்னா இப்ப நாம ஒரு  நண்பர் 

வீட்டுக்கு போய் இருக்கோம் அப்படின்னு நினைத்து 

கொள்ளுங்கள். அவர் முகம் முகம் மலர்ந்து டேய் 

பாலு எப்பப்பா வந்தே! உம்!ஊர்லே எல்லாரும்

எப்படிஇருக்காங்கய்யாவீட்டிலேமனைவி பிள்ளைக 

அப்புறம் அம்மா அப்பா எல்லோரும் நலமா. நம்ம 

வீட்லே இருக்கிற பசுமாடு அதோட கன்னுக்குட்டி 

நம்ம வீட்டு நாய் ராஜா எப்படிடா இருக்கு. எப்ப நீ 

இங்க சென்னைக்கு கிளம்பினே என்ன சாப்பிட்டே 

அப்படி இப்படின்னு விசாரிச்சுட்டு மனசார நம்மை 

உபசரிச்சுட்டு டேய் ஒன்னும் தப்ப நினைத்து 

விடாதே இப்ப சாப்பிட கம்பங்கூழ் தாண்டா 

இருக்கு சாப்பிடுவியாப்பா என கேட்டு நமக்கு தரும் 

கூழ் உண்மையில் கல்கண்டு சாதமே!


ஆனால் இதற்கு நேர்மாறாக லேவாதேவி தொழில் 

செய்யும் லட்சுமணன் வீட்டுக்கு போறோம்னு 

வச்சுக் கிடுங்க. ஊஞ்சலில் அமர்ந்து உள்ள அவர் 

தனது உள்மனதில் வந்துட்டாங்க ஐயா ஓசி சோறு 

துண்ண இவங்களுக்கு இதே பொழைப்பா போச்சு 

என எண்ணிப்பார்த்து பிறகு முகத்தை இருக்கமா 

வச்சுகிட்டு உம்  !அப்புறம் !! என்ன விசேஷம். உம்  !!

தனது பணியாளை கூப்பிடுவதுபோல நம்ம கிட்டே 

டேய் மணி எங்க தொலைஞ்சு போன உம் எவன் 

வீட்லே போய் ஓசி சோறு திங்க போயிட்டியா உம் 

உனக்கு இதே வேலையா போச்சு இல்லை.

உருப்பட்டுருவடா பிச்சை எடுப்ப பிச்சை நம்மகிட்ட 

தம்பி நீங்க ஒன்னும் நினையாதீக உள்ள கல்கண்டு 

சாதம்இருக்குசாப்பிடுங்கஅப்டின்னு சொன்னா அது 

எப்படி இருக்கும் கசந்திடும்.

அதுதாங்கஇங்கஉள்ளநிலைவிருந்தோம்பல்

அப்படின்னா  சும்மா சாதாரணம் இல்லைங்க. 

யாரும் சோத்துக்கு வழி

இல்லாமல் நம்ம  வீட்டுக்கு வருவது என்பது 

கிடையாதுங்க. வள்ளுவர் என்ன சொல்லி

இருக்கார்:-

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பார் 

     நல விருந்து வானத்தவர்க்கு .. .. 

என வள்ளுவர் சொல்லியதை இங்கே நான் நினைவு 

படுத்துகிறேன். 

யாரோ  அவர் எவரோ நம்ம வீடு தேடி 

வந்தவங்களை சிரிச்ச முகத்தோட வரவேற்று நம்ம

வீட்லே இருக்கிறதை கொடுத்து நாமும் அவருடன் 

அமர்ந்துஉண்ணுதல்  விருந்தோம்பலோட 

இலக்கணம் என்பதை நாம மறக்காம இருந்து 

வாழ்ந்தா நமக்கு உண்மையில் சொர்க்கம்

கிடைக்கும். இதை யாரும் மறக்காமல் வாழ்வில்

கடைப்பிடித்து இருப்போம். 

வாழ்வோம் நாம் வளமுடன்.

 அன்புடன் மதுரை T.R.பாலு.



No comments:

Post a Comment