Tuesday, 12 March 2013

மாத்தி யோசிப்பீர்களா நண்பர்களே !!


மூடத்தனம்/மாற்றி யோசிப்போமா?

எல்லோருக்கும் வணக்கம்!!
அறிஞர் சாக்ரடீஸ் மக்களிடம் உரையாற்றும் போது எப்போதும் ஒரு கருத்தை வலியுறுத்தியே பேசுவார்கள். அது என்னவென்றால்

“அவர்சொன்னார் இவர்சொன்னர் என்று அறிவிழந்து தடுமாற்றம் அடையாமல் எவர்சொன்ன சொல்லானாலும் அதனை உனக்கே இயல்பான பகுத்தறிவினால் நீ  சிந்தித்துப்பார் அப்படி சிந்தித்ததால்தான் சிலை வடிக்கும் இந்த சிற்பி சிந்தனை சிற்பியாக மாறினான்” என்று பேசுவார்.

எத்தனைபேர் அதை கேட்டு தெளிவுபெற்றனர்?அப்படி அவர்கள் தெளிவு பெற்றனர் என்றால் ஏன்  இன்றும் சில மூடபழக்கவழக்கங்கள் நம்மை விட்டுச்செல்ல மறுகிறது. அதைப் பற்றி இப்போது  நாம் பார்ப்போமா நேயர்களே!
1)நமது தெருவின் வழியாக  ஒரு இறந்த சடலத்தை தூக்கி சென்ற பிறகு வீட்டு  வாசலில் தண்ணீர் தெளிப்பதை பார்கிறோம் இது  எதற்காக? புரியவில்லை.
2) அதுபோல நெருக்குதலான பேருந்து பயணத்தில் தெரியாமல் நமது கால் சக பயணிமேல் பட்டு விட்டால் உடனே தொட்டு கும்பிடுவது எதற்காக?புரியவில்லை
3) பொருள்கள் வாங்கும்போது கடைகாரர் புத்தம்புதிய ருபாய் நோட்டு தருகிறார் என்று வைத்துகொள்வோம்.மனசார அதை மற்றவருக்கு தருவதுகிடையது (2௦ம் தேதிவரை). அப்புறம் நெருக்கடி வரும்போது கொடுத்துதானே தருகிறோம்.இதுபோல இன்னும் எத்தனையோ!
4)   செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் நாம் யாருக்கும் பணம் தருவது இல்லை. ஆனால் நாம் யாராவது அசந்து இருந்தால் வாங்கிகொள்வது. இதுவும் எதற்காக புரியவில்லை.
5)     ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது பூனை குறுக்கே போனால் மனம் வேதனை படுவது.எதற்காக புரியவில்லை.
6)      அதேபோல ஒற்றை அந்தணர் வந்தால் நல்ல சகுனம் அல்ல என்று எண்ணுவது எதற்காக  புரியவில்லை.
7)    அதேபோல ஒரு கணவனை இழந்த பெண் நாம் வெளியே கிளம்பும்போது எதிரே வந்தால் நல்ல சகுனம் இல்லை என எண்ணுவது  எதற்காக புரியவில்லை. பாவம்! அவள் என்ன பாவம் செய்தனளோ கணவனை இழந்து மனக் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறாள் அவள் வருவதை சகுனம் பார்ப்பது ஒரு பிரியாத புதிராக எனக்கு படுகிறது.
8)    நாம் அனைவரும் குடும்பத்துடன் வெளிஊர் வாகனத்தில் செல்கிறோம் என்று வைத்துகொள்வோம்.அப்போது நான்கு டயர்களுக்கும் அடியில் எலுமிச்-சம்பழத்தை வைத்து நசுக்கிவிட்டு பிறகு வாகனத்தினை எடுப்பது எதற்காக புரிய வில்லை.
9)   நெருக்கடி மிகுந்த நகரப் பேருந்து ஒன்றினில் பலர் அவர்களது   மனைவியுடன் பயணிக்கும்போது வேறு யாரும் அவளை இடித்துவிடவோ/அல்லது தொட்டு விடவோ கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டிடும் அவரது  மனம் அவர்  மட்டும் தனியாக நகரப் பேருந்தினில் பயணிக்கும்போது எதாவது "அது" போன்ற சம்பவங்கள் தமக்கு கிடைத்திடாதா என்று ஏங்குபவர்களை பார்க்கும் போது ஏன் இது எதற்காக என்பது புரியவில்லை.
இதுபோல நமது வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் புரியாமல்தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவைகளை நாம் சீர்தூக்கி பகுத்தறிவின் துணைகொண்டு தூய மனிதர்களாக வாழ்ந்திட முயற்சிகள் மேற்கொள்வோம் என உறுதி எடுத்திடுவோம்.
நாம் சற்று மாற்றி யோசித்து சீர்திருந்துவோம்.மற்றவர்களையும் சீற்படுத்துவோம்  நன்றி.வணக்கம்.மதுரை T.R.பாலு மீண்டும் சந்திப்போமா?

No comments:

Post a Comment