Friday, 15 March 2013

மனைவி அமைவது இறைவன் செயல் !!


கொடியது என்பது எது?


அனைவருக்கும் வணக்கம்!!

சிவபெருமானிடமும் அன்னை பார்வதிதேவியிடமும்  முருகப்பெருமான்  ஞானப்பழம் தனக்கு கிடைக்காததனால் ஏற்பட்ட  கோபத்துடன் பழனி மலைமீது நின்றிருக்க 

அவ்வமயம் அங்கு வந்த தமிழ் மூதாட்டி ஔவை, முருகனிடம் சினம்   தணிக்க வேண்டி சில கருத்துச் செறிவான பாடல்களை பாடிடும் போது 
முருகன் தமிழ் மூதாட்டியிடம் சில கேள்விகள் கேட்கிறார்.

அப்போது உலகிலே இனியது எது,அரியது எது கொடியது எது பெரியது    என்ற கேள்விகளுக்கு பதில் அளித்திடும் போது ஔவை சொன்ன விளக்கங்களிலேயே எனக்குபிடித்த என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு """கொடியது என்ன "“ என்னும் தலைப்புதான்.

 அந்த கொடியது எது  என்ற முருகனின் கேள்விக்கு தமிழ் மூதாட்டி கீழ்க்கண்டவாறு விளக்கம் சொல்கிறாள்  அவை யாதெனின் :-

முதல் கொடுமை வறுமை.
அதைவிடகொடுமை இளமையில் வறுமை.
அதனினும்கொடுமை ஆற்றமுடியாத தொழுநோய்.
அதனினும்கொடுமை அன்பில்லாத பெண்கள்.-
அதனினும்கொடுமை அவர்கள் கையால் உணவு உண்பதுதானே!

என்று கொடுமையின் உச்சகட்டம் என்பது  அன்பு இல்லாத பெண்களிடம் உணவு வாங்கி உண்பதுதான் என ஆணித்தரமாக சொல்லியுள்ளார் தமிழ் மூதாட்டி.

அப்படி பார்த்தால் இன்றைய தினம் நாட்டில் பாதிக்குமேல் வாழ்ந்து வரும்  ஆண்கள் அப்படிப்பட்ட பெண்கள் கையால்தான்  சாப்பிட்டுக்கொண்டு உள்ளார்கள் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் சரி என்றுதான் நான் சொல்வேன்.

என்ன செய்வது.மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடல் எழுதிய கவியரசரின் நினைவு எனக்கு இந்த சமயம் வருகின்றது.  

ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சிகளின்படி நாம் செய்த பூர்வ புண்ணிய பலங்களின் அடிப்படையில் தான் மனைவி அமைகிறாள். அதனை மாற்றவோ மறுக்கவோ மறைக்கவோ நம்மில் எவருக்கும் உரிமை தருவது இல்லை ஆண்டவனின் சன்னதியில்.

முன் ஜென்மம் நாம் செய்திட்ட தீய வினைகள் மறுஜென்மத்தில் மனைவி உருவில்வந்து நம்மை பழி தீர்க்கும். அதில் சந்தேகமே இல்லை.

எனவே ஆண்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம்  போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணித் தொலைத்தீர்களோ  நீவீர்  அறிந்திருக்க நியாயம் இல்லை. அதனால் .தற்போது கஷ்டப்படுகிறீர்கள்..

அதனாலே  இந்தஜென்மத்திலாவது நாலு பேருக்கு நன்மை செய்திடுங்கள் அப்போதுதான் அடுத்த ஜென்மத்திலாவது குணம் உள்ள பொறுமை உள்ள கோபம் கொள்ளாத மனையாள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றி கூறி  பொறுமையுடன் இந்த கட்டுரைதனை படித்திட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி பாராட்டி விடை பெருகிறேன். நன்றி வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment