யாருக்குப் பிறந்தநாள் கொண்டாடலாம்?
சிந்திக்க வேண்டுகிறேன் !!
அனைவருக்கும் வணக்கம். இன்றையதினம் முற்போக்கு சிந்தனை கொண்டுள்ள அனைவரின் உள்ளத்திலும் எதிரொலித்துக் கொண்டுள்ள ஒரு கேள்விக்கு விடை காணும் எனது முயற்சிக்கு அனைத்துப் பகுத்தறிவுச் சிந்தனை சிங்கங்களும் தமது ஆதரவுகளை நல்கிடவேண்டு மாய் கேட்டுகொள்கிறேன்.
பொதுவாக பிறந்தநாள் என்பது யார் கொண்டாடிட வேண்டும்என்ற பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அதேநேரம் அந்த [பிறந்த நாள் என்பது உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே கொண்டாடிட முழு உரிமை உள்ளது என்ற எனதுகருத்திற்கு இருவேறு அபிப்பிராயம் இருக்காது என்றே நான் எண்ணுகிறேன்.
ஆனால் நம் தாய்த்திருநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது நான் என்ன சொல்வது. இறந்தவர்களுக்கும் பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி பகுத்தறிவுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதே நம் முன்னர் உள்ளகேள்வி அய்யா அவர்தான் செத்துப்போய் விட்டாரே அவர் எப்படி அய்யா பிறந்தநாள் கொண்டாடிட முடியும். அவர் இறந்த நாள் வேண்டுமானால் அவரது நினைவாக கொண்டாடிடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.எனவே இனிமுதல் கொண்டாவது இறந்தோருக்கு நினைவு நாளும் உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே பிறந்த நாளும் கொண்டாடிடும் வழக்கத்தை கடைபிடிப்போம் என்று நாம் உறுதி மேற்கொள்வோமாக.நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment