வாழ்வியலில் நாம் முன்னேற பெரிதும் துணை புரிவது போதும் என்ற மனமே!பொறாமை நிறை குணமே!!
உலகெங்கணும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே!உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தலை தாழ்ந்த வணக்கங்கள்.
என்ன இது நமது மதுரை T.R.பாலு ஐயா அவர்கள் இன்றையதினம் சற்று வித்தி-
யாசமான பட்டிமன்ற தலைப்பினை தேர்ந்து எடுத்து இருக்கிறாரே!அன்னார்
ஏதாவது பட்டிமண்டபம் நடத்தப் போகிறாரா என்ற உங்கள் ஐயப்பாட் டினால் எழுந்த கேள்விக்கணையால் பார்ப்போர் படிப்போர் அனைவரது புருவங்களும் சற்று உயர்ந்து காணப்படுவது என்னால் இங்கு இருந்தே அறிய முடிகிறது.
பொதுவாக நமது முன்னோர்கள் எதிர்கால சமூகத்தினர் அவர்கள் வாழப்போகும் காலங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே நமக்கு பல்வேறு அறிய நூல்கள் பலவற்றை அருளிச்சென்றுள்ளனர்.அப்படி அமைந்த நூல்கள் தான் சங்ககால இலக்கியங்கள் எனில் அது மிகையல்ல.
அப்படி விட்டுசென்ற சங்க கால இலக்கிய நூல்களில் நான் படித்தவற்றுள் சிலவற்றை உங்களிடையே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.முதலில் நாம்
பாடலை பாப்போம்.
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை !!
அம்மா ! பெரிதென்று அகமகிழ்க !!
தம்மின் கற்றாரை நோக்கிக் கருத்துஒழிக!!
எற்றே இவர்க்கு நாம் என்று !!
அதாவது பாடலின் பொருள் என்னவெனில் என்னை இப்பூவுலகில் அருள்தந்து வளம்தந்து நலம் தந்து நம்மையெல்லாம் வாழ வைத்துகொண்டிருக்கும் சக்தி வடிவாகிய தாயே! நம்மைவிட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை
பார்த்து நமது நிலைமை வளமாக செல்வ சிறப்புடன் இருக்கிறோம் தாயே என்று போதும் எனும் மனதுடன் வாழ்ந்திடல் வேண்டும்.
ஆனால் அதே சமயம் நம்மைவிட கற்று அறிந்த ஆன்றோர் பெருமக்கள் படித்த அறிஞர்கள் இவர்களை பார்த்து பொறாமை குணத்துடன் வாழ பழகுக. நாமும் முயன்றால் இவர்களைவிட சிறப்பாக சிறந்த அறிஞராக ஆக முடியும் எனநினைத்து படித்து உழைத்து முன்னேறு என்று அந்த நூல்களில் நமது முன்னோர்கள் அருளிச்சென்ற அறிவுரைதனை நாமும் நமதுவாழ்வில் கடை பிடித்து முன்னேற உறுதி மேற்கொள்வோமா நேயர்களே!
வாழ்வியலில் நாம் முன்னேற பெரிதும் துணை நிற்பது போதும் என்ற மனமும் இடம் அறிந்த செயல் படுத்தும் பொறாமைக் குணமுமே எனும் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.
No comments:
Post a Comment