ஒரு சிறு சிந்தனை வெளிப்பாடு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் எனது உயிரினும்
மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கும் மேலாக
உங்களை சந்திக்காமல் நான் விலகி இருந்ததற்கு
என்ன காரணம் என்றால் எனது கண் பிறை அறுவை
சிகிச்சை நடைபெற்றதுதான், இன்னும் ஒரு பத்து
தினங்கள் நான் மடிக் கணினி பக்கம் கூட போகக்
கூடாதுஎன்பதுமருத்துவர்கள்கட்டளை. அதனையும்
மீறி இப்போது நான் உங்களை சந்தித்து
விஷயத்தை சொல்கிறேன்,
தயவுசெய்து ஒரு பத்து நாட்கள் மட்டும்
பொருத்திருங்கள்.அப்புறம் எப்பவும் நான்
உங்களோடுதான்.என்ன சரியா. இப்ப நாம்
தலைப்புக்கு வருவோம்,
நம்ம கிராமத்தைச் சேர்ந்த குப்பன் அவங்க ஊர்
கோவில் திருவிழாவில் ஒரு ஆன்மீக
சொற்பொழிவாளர் பேசுவதைக் கேட்டான்.
அவர்
என்ன சொன்னார்னா வள்ளுவர் வீதிஉலா சென்று
வந்துபின் வீட்டு வாயில்படியில் நின்றுகொண்டு
தன் மனைவி வாசுகியை சற்று சப்தமிட்டு அம்மா !!
வாசுகி என அழைப்பாராம்.
அதுபோது அந்த
அம்மையார் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டு
இருப்பாராம். கணவர் அழைத்துவிட்டாரே என்ற
அவசரத்தில் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு
வந்து கணவரை வரவேற்று வீட்டின் உள்ளே
அழைத்து செல்வது வாடிக்கை. ஆனால் கிணற்றில்
அந்த கயிறும் நீர் நிரம்பிய வாளியும் அப்படியே
நிற்குமாம். இது வாசுகி அம்மையாரின்
கற்புத்தன்மைக்கு ஓர் உவமை என்று அந்த
சொற்பொழிவாளர் கூறியதை மனதுக்குள்
அசைபோட்டுக்கொண்டு வந்த நம்ம கிராமத்து
குப்பன் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு
அவன் மனைவியை ஏய் அம்பிகா என்று அழைக்க
அவளும் வர அவளிடம் குப்பன் கோவிலில்
வள்ளுவன் வாசுகியை அழைத்த விஷயத்தை பற்றி
சொல்ல அவளது கற்பு வெளிப்பட்டது அது போல
நீயும்கிணற்றில்நீர்இறைத்துகொண்டிருக்கும்போது
பாதி வந்ததும் சொல்லு நான் உன்னை
கூப்பிடுகிறேன் என்று குப்பன் சொன்னான்.
எதற்கு
என்று மனைவி அம்பிகா கேட்க உனது கற்புக்கு
நான் வைக்கும் சத்திய சோதனை இது என்றான்.
சரி என்று சொல்லி மனைவி
அம்பிகாவும்போனாள்.கிணற்றில் நீர்
இறைத்தாள்,
பாதி வந்தவுடன் என்னங்க கயிறு பாதி
வந்துடுச்சு என்று சொன்னாள், உடனே குப்பனும்
அடியேஅம்பிகா என்று அழைத்தான்.இவள் கயிறை
விட்டு விட்டு வாசலுக்குவர, கிணற்றில் நீர் நிரம்பி
இருந்த வாளிஅதன் பாரம் தாங்காமல் டொட்
டொட்.டோர்ரேன கிணற்றின் ஆழத்திற்கு சென்று
வீழ்ந்தது. இது கண்ட குப்பன் தன மனைவியை
பார்த்து இல்லே இல்லே நீ கற்புக்கரசி இல்லே நீ
கற்புக்கரசி இல்லே என ஒரேயடியாக
ஓப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டான்.
உடனே அவன் மனைவி அம்பிகா சொன்னாள்,
யோவ் அங்கே கூப்பிட்டது திருவள்ளுவர் அய்யா.
அதனாலே அங்கே கயிறும் வாளியும் நின்னுச்சு
இங்கே கூப்பிட்டது நீ தானே அப்புறம் எப்படிய்யா
கயிறு நிக்கும். கற்பு என்பது பொம்பளைங்களுக்கு
மட்டும் உரித்தானது அல்ல. நான் சத்தியமா
சொல்றேன் ஆம்பிளைங்களுக்கும் சேர்ந்ததுதான்
என்று போட்டாளே ஒரு போடு.
அனைவருக்கும் வணக்கம்.மீண்டும் பத்து நாட்கள்
கழித்து நாம் சந்திப்போமா நேயர்களே !!
நன்றி !! வணக்கம் !!
மதுரை T.R.பாலு
No comments:
Post a Comment