Saturday, 2 March 2013

பணம் மட்டுமே பெரியது !!




 உலகினில் உயர்வானது எது? பணமா!! இல்லை 

குணமா!!

   உலகம் முழுதும் வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் 

எனது இதயம்கனிந்தநல்வாழ்த்துக்கள்.பணம்பந்தியிலே!குணம் குப்பையிலே  

என்ற அந்த கால திரைப்பட பாடல் எனது நினைவின்பால் எழுகின்றது. சங்க 

கால பாடல்களில் கூட பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து உள்ளது .
அது என்ன பாடல் என்றால் :-


                              இல்லானை இல்லாளும் வேண்டாள் !!

                               ஈன்றெடுத்த தாய் வேண்டாள் !!

                               செல்லாது அவன் வாயில் சொல் !!

இதற்கு பொருள் என்னவென்றால் பணம் இல்லாத கணவனை தாலி 

கட்டப்பட்ட மனைவி மதிக்க மாட்டாள். அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற 

அவனது தாய் ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது. அவனது கருத்துக்களுக்கு 

எங்கும் என்றும் மதிப்பு இருக்காது என்று ஆணித்தரமாக இந்த பாடலில் 

குறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் பணம் மட்டுமே வாழ்வின் இலட்சியமா?

அது இல்லாதவர் நிலை என்ன? உங்கள் கேள்வி நியாயமானதுதான். நான் 

அதனை வாதத்திற்கு மட்டும் ஏற்று கொள்கிறேன். மற்றும் ஒரு பாடலில் 

அந்த நாட்டு அரசனையும் நன்கு கற்று அறிந்த பெரியோரையும் ஒப்பிட்டு 

எழுதப்பட்ட பாடல் என்ன சொல்கிறது? பார்ப்போமா:-

           
                       மன்னரும் மாசறக் கற்றோரும் சீர்தூக்கில் 

                       மன்னரில் மாசறக் கற்றோனே சிறந்தோன்!!

                       மன்னருக்குத் தன் தேசம்  அல்லால் \

                       வேறு எங்கும் சிறப்பில்லை கற்றோர்க்கும் 

                       சான்றோர்கும் சென்றவிடமெல்லாம் சிறப்பு!!


அதாவது ஒரு தராசின் இரண்டு தட்டுக்களில் ஒன்றில் அந்த நாட்டை ஆளும் 

மன்னரையும் மற்றொன்றில் படித்த அறிஞர் ஒருவரையும் வைத்து எடை 

பார்த்தோமேயானால் படித்த அறிஞரின் தட்டுத்தான் அதிக எடைகொண்டதாக 

இருக்குமாம். ஏன் என்றால் மன்னருக்கு அவரது நாட்டில் மட்டுமே மதிப்பு 

செல்வாக்கு புகழ்ச்சி இவைகள் கிடைக்குமாம். வேறு எங்கு சென்றாலும் 

அவருக்கு அந்த சிறப்பு கிடையாது.ஆனால் அதேவேளையில் நல்ல குணம் 

படைத்தஅறிஞருக்கும் நற்பண்புடையசான்றோர் பெருமக்களுக்கும் அவர்கள் 

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்கள் செல்லும் இடமெல்லாம் 

சிறப்பு என்று அந்த பாடல் பொருள் கூறுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து 

கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கை நடத்த பணம் மிக 

மிக அவசியமானதுதான் இல்லை என்று மறுப்பார் எவரும் இங்கு இல்லை.

ஆனால் அதேசமயம்அந்த பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடவும்  முடியாது.

ஆகி விட வும் கூடாது.பணம் இன்று இருக்கும் நாளை வேறு ஒருவர் கைக்கு 

போய்விடும். ஆனால் நல்ல குணம் ஒருவரிடம் இருக்குமேயானால் அவர் 

உயிர் உள்ளவரை அந்த குணம் அவரை விட்டு விலகுவது கிடையாது.இதனை 

மனதில் நிலை நிறுத்தி பணத்தை மதிப்போம் ஆனால் அதற்காக நல்ல 

குணம் உள்ளோரை உதாசீனம் செய்திடவும் கூடாது,அவரிடம் பணம் இல்லை 

என்ற ஒரே காரணத்திற்க்காக என்று அனைவரயும் வேண்டி விரும்பி கேட்டு 

இந்த அறிவு சார்ந்த கட்டுரையை நான் நிறைவு செய்கிறேன்.பொறுமையுடன் 

படித்த அன்பு உள்ளங்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!! வாழ்வோம் 

வளமுடன். அன்பன் மதுரை T.R.பாலு.





No comments:

Post a Comment