Tuesday, 12 March 2013

கோணல் பார்க்கும் நேர்காணல் !!

கோணல் அமைப்பின் நிலை உலகினிலே !! 



அனைவருக்கும் வணக்கம்.  இன்றைய தினம் நான் 

உங்கள்அனைவரையும்எனது " எண்ணச் சிறகுகள்"

பக்கத்தில்சந்திப்பதில்பெரும்மகிழ்ச்சிஅடைகிறேன் 


பொதுவாக உலகத்தில் கோணலாக இருப்பதை 

பற்றி உலகியலில் என்ன சொல்லப் பட்டுள்ளது 

என்றால், முதல் கோணல் முற்றும் கோணல் என 

சொல்வது உண்டு.
  

அதாவது எந்த ஒரு காரியமும் 

ஆரம்ப நிலையில் தோல்வி பெற்றால் அந்தக் 

காரியம் முழுவதும் முழுக்க முழுக்க 

தோல்விதான் என்பதற்கு அந்த சொல்லை நாம் 

பயன்படுத்துவது உண்டு. 


சரி.அவ்வாறாயின் உலகிலே கோணலாகத் 

தோன்றிய எல்லாமே தோல்வி கண்டிடுமா 

அப்படி என்று சொன்னால் அதற்கு சிறப்பு என்பது 

கிடையாதா ? 
  

இது ஒரு நியாயமான கேள்விதான்.  ஆனால் எல்லா 

கோணல்களும் ஒரே நிலை பெறுவது இல்லை.

கோணலிலும் சில சிறப்புகள் உண்டு.முதலில் அது 

பற்றிய பாடலை நாம் பாப்போம்:-
  

"   அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ !

      இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் !!

       கரும்பு  கோணிடில் கட்டியும் பாகுமாம் !

       நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்!!


இந்த பாடல் தான் கோணல் பற்றிய சிறப்புகளை 

விளக்கும் உன்னதமான பாடல். இதன் பொருள் 

என்னவென்றால் :-


  கொடியில் மலரும் பூக்கள் இனத்தில் சிலநேரம் 

அதன் அடிபகுதி காம்பு என்று சொல்லுவார்கள் அது 

கோணலாக காணப்படும். அப்படி இருப்பதாலேயே

அதனுடைய வாசமோ இல்லை நறு மணமோ எந்த 

விதத்திலும் குறைவது  என்பது கிடையாது.


இரும்பு தடி வளைந்து கோணலாக இருப்பின் அது 

யானையை அடக்கி ஆளும் அங்குசமாக இருந்து 

அந்த மாபெரும் உருவத்தை வெல்லக்கூடிய ஒரு 

ஆயுதமாக இருந்து நல்லதொரு சிறப்பினைத்தான் 

தருமே ஒழிய குறைவது என்பது கிடையாது.


கரும்பு எப்போதுமே ஒரே நேர் சீராக வளர்வது 

கிடையாது.சில நேரங்களில் கோணலான வளைந்த 

கரும்புகளும்விளைவதுஉண்டு. அப்படிகோணலாக 

இருப்பதனாலேயே அதன் சுவை ஒருபொழுதும் 

 குறைவது  என்பது கிடையாது.அந்த கரும்பில் 

இருந்து சாறு பிழிந்து வெல்ல பாகு அல்லது கட்டி 

வெல்லம் நாம் எடுக்கலாம்.


ஆனால் மனித உடல்கூறில் மட்டுமே இதுபோன்ற 

சிறப்புகோணலுக்குகாணப்படுவதுஎன்பது இல்லை.

நரம்பு கோணி விட்டால் கையோ அல்லது காலோ 

ஒருபுறமாக இழுத்துகொள்ளும். அதனை சீர் படுத்த 

முடியாது என்பதனை அந்த பாடல் எவ்வளவு 

சரியாக சொல்லியுள்ளது பார்த்தீர்களா நேயர்களே.

அதுதான் தலை எழுத்து. அதனை மாற்றிட என்றும் 

முடியாது என்று கூறி மீண்டும் அடுத்த " எண்ணச் 

சிறகுகள் " பக்கத்தில் உங்கள் அனைவரையும் நான் 

சந்திக்கிறேன்.அதுவரை நன்றி கூறி விடைபெரும் 

உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment