பயன் இல்லாத ஏழு
விஷயங்கள்.
பொதுவாக இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் பயன்
தருபவைகளாக அமைவது இல்லை. சில
பயனற்றவைகளாகவும் அமைவது உண்டு, அப்படிப்பட்ட பயன் இல்லாத ஏழு விஷயங்கள் :-
1) ஆபத்திற்கு உதவா
பிள்ளை
2) அரும்பசிக்கு
உதவா அன்னம்
3) தாகத்தை தீர்க்கா
தீர்த்தம்.
4) தரித்திரம் அறியா
பெண்டிர்.
5) கோபத்தை அடக்கா
வேந்தன்
6) குரு மொழி கொள்ளா
சீடன்
7) பாவத்தை போக்கா
பயணம்
மேலே சொன்ன ஏழு
விஷயங்களும் பயன் இல்லாதவை என்று நம் முன்னோர்கள் கூறிசென்றுள்ளர்கள்.
அதாவது நமது
மகன் என்றல் அவன் நமக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக மகன் (பிள்ளை) நமக்கு உதவ
வேண்டும்.
அதுபோல கடும் பசி ஏற்படும்போது அன்னம் (சாதம்) இருக்கவேண்டும்.
தாகம்
ஏற்படும் பொது தண்ணீர் அந்த தாகத்தை தீர்க்கவேண்டும்
.
குடும்பத்தில் வறுமை
இருந்தால் வரவுக்குள் செலவுகளை கொண்டு
செல்லும் திறன் படைத்த மனைவி இருத்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் மன்னன் என்று
சொன்னால் அவன் கோபத்தை அடக்கும் திறன் பெற்றவனாக இருத்தல் மிக முக்கியம். இல்லை
என்றல் நீதி இல்லா அரசாணைகள் மட்டுமே ஆட்சிபுரியும..
சீடன் என்றால் அவன் குருவின்
போதனைகளை ஏற்றுக்கொள்ளும் சீடனாக இருப்பது மிக மிக முக்கியம்.
ஷேத்ராடனம் என்று
சொல்லப்படும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் நாம் செய்த பாவங்களை
தீர்ப்பதாக அந்த பயணம் அமைந்திருக்கவேண்டும்.
மேலே சொன்ன ஏழு விஷயங்களும்
குறிப்பிட்டதைப்போல அமையவில்லை என்று சொன்னால் அவை அனைத்தும் பயன் இல்லாதவை என்றே
நமது முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளர்கள். நாமும் நமது வாழ்க்கையில் இவற்ற்றை
கடைபிடிப்போமாக! நன்றி வணக்கம்.மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment