Sunday, 10 March 2013

அழகாக இருப்பது ஆணா? பெண்ணா?


அதிகம் அழகாக இருப்பது ஆண் இனமா? பெண் இனமா?



ஒரு புதிதான புதிரான கருத்துக்  கேள்வியுடன் உங்களைசந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நீங்கள் யாரிடம் மேற்சொன்ன கேள்வியை கேட்டாலும் பெரும்பாலான அன்பர்கள் தரும் பதில் பெண்கள் தான் என்று சொல்வார்கள்.
ஆனால் நமது கேள்வி அதுவன்று.
அதிகம் பெருன்பான்மையான அழகு இருப்பது எங்கே? ஆண் இனமா?அல்லது பெண் இனமா என்பதே இன்று நம் உள்ள கேள்வி.
இறைவன் பல ஜீவ இராசிகளை படைத்துள்ளான். அவற்றுள் மனித இனத்தில் வேண்டுமானால் பெண் என்பவள் அழகுற காட்சி அளிப்பவளாக இருக்கலாம் பல்வேறு அழகு சாதனங்களை உபயோகிப்பதன் மூலமாக. ஆனால் நீங்கள் பாருங்கள் பறவைகள் இனக்திலும் சரி விலங்கு இனத்திலும் சரி அதிகம் அழகாக காட்சி அழிப்பது ஆண் இனம் மட்டுமே.உதாரணத்திற்கு இங்கு பலவற்றை நான் குறிப்பிடுகிறேன்.
1)      காட்டு இராஜா என்று அழைக்கப்படும் சிங்க இனத்தில் ஆண் சிங்கம் மட்டுமே பிடரி மயிர்களுடன் காண்பதற்கு அழகுற உள்ளது !.!
2)      நடனமாடி மகிழ்ச்சி  தரும் மயில் இனத்தில் ஆண் மயிலுக்கு மட்டுமே தோகைபடைத்து இறைவன் அழகுற செய்துள்ளான்.
3)      மயிர் நீப்பின் வாழா  கவரி மான் என்று சொல்லப்படும் அந்த மான் இனத்திலும் ஆண் மானுக்கு மட்டுமே கலைநயம் மிக்க அழகான கொம்பினை படைத்துள்ளான் இறைவன்.
4)      யானை இனத்திலும்கூட ஆண் யானைக்கு மட்டும்தான் இறைவன் நீண்ட தந்தங்கள் படைத்தது அழகு பார்த்துள்ளான்
5)      கோழி இனத்திலகூட ஆண் இனமான சேவலுக்கு மட்டும் தான் அழகான கொண்டை தனை இறைவன் படைத்துள்ளான்.
இதுபோல இன்னும் பற்பல உதாரணங்கள் உள்ளன. அவைகளை குறிப்பிட நேரம் இல்லாத காரணத்தால் அதிகம் அழகாக இருப்பது ஆண் இனம் மட்டுமே என்பதனை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று சொல்லி இந்த அளவில் விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம். மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment