Wednesday, 13 March 2013

கண்ணதாசனின் தொலைநோக்கு சிந்தனை!!

கண்ணதாசன் --ஒரு தொலைநோக்கு சிந்தனை மிகுந்த ஞானி !!



உலகெங்கும்அன்பினோடும்நல்அறிவுகொண்டும் 

வாழ்ந்து வரும் எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!.

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!!


இன்றைய தினம் மறைந்த கவியரசர் கண்ணதாசன் 

பற்றிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து 

கொள்வதில்நான்மிகவும் மன மகிழ்ச்சிபெறுகிறேன்


தமிழ் திரை உலகில் கவிஞராக அறிமுகம் அடைந்த

அவர் இடையிடையே நடிகராகவும் சிறப்புடன் 

தமது பணியினை  பல படங்களில் தொடர்ந்து

 செய்து வந்தார்.


முதன் முதலாக பராசக்தி திரைப்படத்தில் அவர் 

நீதிபதி வேடத்தில் நடித்தார்.


அதனைத்தொடர்ந்து1963ம்ஆண்டுவெளிவந்தஇரத்த 

திலகம் என்ற மாபெரும்வெற்றிபெற்ற  படத்தில் 

மேல்நாட்டு உடையான கோட் சூட் அணிந்து மேடை

பாடல் பாடும் காட்சி  ஒன்றில் அவர் எழுதிய ஒரு 

தத்துவப் பாடலுக்கு அவரே நடித்து சிறப்பாக 

அமைந்திட்ட பாடல் தான் 


 " ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு !

    ஒரு கோல  மயில் என் துணை இருப்பு!! 

    இசை பாடலிலே என் உயிர் துடிப்பு !

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிறப்பு !! "


என்ற பாடலில் அவர்ஒருதொலைநோக்கு சிந்தனை 

கவி என்பது நமக்கு புலப்பட தொடங்கியது.அந்த 

பாடலில் அடுத்த பாராவில் வரும் வரிகள்:-


     காவியத் தாயின் இளைய மகன் !!

      காதல் பெண்களின் பெரும்  தலைவன்-நான் 

    பாமர ஜாதியில் தனி மனிதன் -நான் 

      படைப்பதனால் என் பேர்  இறைவன் !!


என்று பாடிய கவியரசர் அடுத்த பாராவில்:-


 மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் -அவர் 

 மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன்-நான் 

நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த 

நிலையிலும் எனக்கு மரணம் இல்லை..


மேலே குறிப்பிட்ட இரண்டு பாராவிலும் அவர் 

எழுதியபடியே அவரது வாழ்கையும் அமைந்து 

விட்டது என்பதில் தான் அவர் ஒரு தொலைநோக்கு

சிந்தனை ஞானி என்பது நிரூபணம் ஆகிறது என்று 

சொன்னால் அது மிகையான சொல் அல்ல. 

இந்த பூமி அழியலாம் நல்ல கலைச் செல்வங்கள் 

அழியலாம்.  ஆனால் கவியரசர் என்ற மாபெரும் 

கவிஞர்தம் பெயரும் புகழும் எந்த நாளும் அழிவது 

இல்லை என்பது  கருங்கல்லில் வடித்த சொல் 

போன்றது.அது மட்டுமே நிரந்தரமானது.என்றும் 

கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழிய !வாழிய !!

வாழியவே !!

 மீண்டும் அடுத்த கவிஞரது பக்கத்தில் உங்களில் 

அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி!வணக்கம்!!

அன்புடன். மதுரை T.R.பாலு.


    






No comments:

Post a Comment