சுவரு வைச்சு காத்தாலும் செல்வமெல்லாம்
சேத்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன்
யாரு?
நீ துணிவிருந்தாக் கூறு !! இங்க எளியவரும்
வலியவரும்
எங்கே போனார் பாரு. அவரும் வந்தார்.ஐவரும்
வந்தார். ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமல் ஓடினார்
.
மிக இளம் வயதில் இயற்கை எய்திய புரட்சி
கவிஞர் பட்டுகோட்டை
கல்யாணசுந்தரம் தனது திரைப்பட வரலாற்றில் முதல்முதலாக கால்
பதித்து அந்த முதல் படமே இமாலய வெற்றி
பெற்ற “பாச வலை”என்னும் அந்த நாள் வந்த
திரை காவியத்தில்
இடம்பெற்ற பாடலின் வரிகள்தான்
நான் மேலேகுறிப்பிட்டது. இசைச் சித்தர்சிதம்பரம்
ஜெயராமன் அவர்களது வெண்கலக்குரலில்
கணீரென்று ஓலித்த பாடலில் நிலையாமையின் சிறப்பு மிகத்தெளிவாக பதிவு செய்யப் பட்டது.
தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும்போது
எதையும் நாம் கொண்டு
வருவதில்லை.
அதுபோல மரணமடையும் போதும் நாம் எதையும் எடுத்து செல்வதும் இல்லை.
உயிர் வாழும் காலங்களில் மட்டுமே நாம்
சேர்க்கும் பணம்,சொத்து,இவைகளை நாம் அனுபவிக்கமுடியும்.
அதற்கு பிறகு?அதாவது நம் உயிர் நம்மைவிட்டுப் பிரிந்த பிறகு .
இதையே தான் தமிழ் மூதாட்டி ஒரு பாடலில் மிகத் தெளிவாககூறுகிறார். பாடல் இதோ:-
பாடுபட்டுத் தேடித் பணத்தைப் புதைத்துவைத்த
கேடுகெட்ட மானிடர்காள் கேளுங்கள் !!
கூடுவிட்டாங்கு ஆவிதான் போனபின்
யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அப்பணத்தை!!
ஆகவே
நாம் நேர்வழியில் சேர்க்கும் பணத்தை நாமும் அனுபவித்து
நம்மால் முடிந்தவரை
இல்லாதவர்களுக்கும் உதவி செய்து
வாழ்ந்தோம் என்றால் இந்த பிறவி பயனுள்ள பிறவியாக அமைவதுடன்
அடுத்தபிறவிக்கும் சேர்த்து புண்ணியம் சேர்க்கின்றோம்.
இந்தக் கருத்தினை மனதில் நிறுத்தி வாழ
முயற்சி செய்வோமாக!
இருப்பது பொய்! இறப்பது மெய்!! நினைவில்
கொள் மானிடா !!
நன்றி.வணக்கம்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment