சம்சாரம்
அது மின்சாரம்.
என்ன இது சினிமா பட தலைப்பை பற்றி எல்லாம் நம்ம மதுரை T.R.பாலு சார்
பேச ஆரம்பிச்சுட்டார் என என்னை தப்பா எண்ணாதீர்கள். நான் அப்படி பட்ட ஆளு இல்லை.
சினிமா இந்தியாவில் குறிப்பா தென் இந்தியாவில் வளர ஆரம்பிச்ச காலத்திலே பகுத்தறிவு
பகலவன் தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால் இந்த சினிமா வருங்கால சமுதாயத்தை
சீரழிக்க போகிறது எனவே இதை தீயிட்டு கொளுத்தவேண்டும் என சொன்னார்.நான் அந்த
இடத்துக்கு வர வில்லை.
மனைவி அவள் எங்கோ பிறந்தவள்.எங்கோ வளர்ந்தவள்.எனக்கு சட்டபூர்வ
வாரிசுகளை பத்துமாதம் சுமந்து பெற்றுஎடுத்த தெய்வம் எனக்கு வாழும் கலைதனை நான்
கற்றுக்கொள்ள பெரிதும் துணை நின்றவள் அவள் இன்றி நான் இல்லை. நான் இன்றி அவள்
இல்லை. இப்படி எல்லாம் மனசார நினைக்கும் சிலரில் நானும் ஒருவன். பொதுவா நம்
வீட்டில் மின்சாரம் போய்விட்டது என்றால் உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு போயிருச்சா
என பார்க்கும் குணம் நமக்கு. மின்சாரம் இருக்கும் வரை அதன் முக்கியத்துவம் நமக்கு
தெரிவது இல்லை.அது போன பிறகே விசிறி எடு மெழுகுவர்த்தி எடு என்றெல்லாம் நாம் உணர
ஆரம்பிப்போம். அது போலத்தான் சம்சாரம் உயிருடன் இருக்கும் வரை அவளது
முக்கியத்துவம் நமக்கு புரிவது இல்லை. அவள் போன பிறகுதான் உணர்கிறோம்.அந்த கருத்தை
மையமாக வைத்துதான் மேலே சொன்ன சம்சாரம் அது மின்சாரம் என்று சொன்னார்களே ஒழிய
தொட்டால் நமக்கு ஷாக் அடிக்கும் என்ற கருத்தில் அதை சொல்லவில்லை.அதை நாம் முதலில்
புரிந்துகொண்டு இனி முதற் கொண்டாவது மனைவியை மனசார நேசித்து அவளை இதய கோவிலில்
வைத்து பூஜிப்போம் என அனைவரும் சபதம் எடுப்போம். பாடல் என்ன சொல்கிறது என்றால் :-
பெற்ற தாயோடு அன்பு
போம்-வளர்
தந்தையோடு நல் அறிவு
போம்-நல்
மனைவியுடன் மற்றதெல்லாம் போம்..
இதற்கு என்ன பொருள் என்ன என்றால் தாய் மறைந்து விட்டால் நம் மீது
உண்மையான அன்பு செலுத்தும் ஆத்மா போய்விடுகிறது. தந்தை மறைந்து போனால் அவருடன்
நமக்கு நல்ல அறிவுரைகள் கூறும் ஆத்மா போய் விடுகிறது. மனைவி மறைந்துவிட்டால் வாழ்வில்
நமக்கு எல்லாமே போய் விடுகிறது.இதுதான்
உண்மை சத்தியம் வாழ்க்கை நெறிமுறை. முதலில் வருபவள் மட்டுமே தாரம் எனப்படுபவள்.
எனவே மனைவியை நேசிப்போம் என்று கூறி வணக்கத்துடன் நன்றி பாராட்டி விடை
பெறுகிறேன்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment