Sunday, 17 March 2013


அறிஞர் அண்ணாவின் வாழ்வினிலே!!


பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்வினிலே 

எத்தனை எத்தனையோ 

நிகழ்வுகள் அவைகளை நாம் பட்டியல் 

போடவேண்டும் என்றால் அதற்கு 

இந்தஒருபிறவி நமக்குபோதாது.இருப்பினும் 

அவற்றுள் ஒருசிலவற்றை நான் 

உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள 

ஆசைப்படுகிறேன்
.

ஒருசமயம் அண்ணா அவர்கள் பிரபல திரைப்பட 

நடிகை பானுமதி அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு 

வசனம் எழுதும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 

இருந்தார். அப்போது அடிக்கடி திருமதி பானுமதி 

அவர்களை சந்திக்கும் வாய்ப்பு தானாகவே 

அண்ணா அவர்களுக்கு கிடைத்தது.இருவரும் 

கருத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டு  

பேசிக்கொள்ளும்  வாய்ப்பினை பெற்றார்கள் 


வழக்கம்போல பத்திரிக்கையாளர்கள் மத்தியில் 

இந்த விஷயம் கிசு கிசு என பேசப்பட்டது. அப்போது 

தைரியம்/துணிச்சல் நிறைந்த  பத்திரிக்கையாளர் 

ஒருவர் அறிஞர் அண்ணாவிடம் நேரிடையாகவே 

கேட்டார்.அண்ணா அவர்களே! நாங்கள் தங்களை 

பற்றியும் நடிகை திருமதி பானுமதி அவர்களை 

பற்றியும் சில விஷயங்கள் கேள்விப்படுகிறோமே 

அது உண்மையா? என்று வினவினார்.


அதற்கு பேரறிஞர் பெருந்தகையாளர் அவர்கள் 

தற்போது நடைபெறுவதுபோல என்னடா இது என்ன 

தைரியம் இந்த பத்திரிக்கையாளருக்கு! இதுபோல 

தம்மிடமே  ஆத்திரமூட்டுவதுபோகேட்டுவிட்டாரே

 என்பதற்காக  அந்த பத்திரிக்கை அலுவலகத்தினை 

முற்றுகை இடவும் இல்லை அந்தபத்திரிக்கையை 

தீ இட்டுக்  கொளுத்தவுமில்லை. மாறாக என்ன 

சொன்னார் தெரியுமா நேயர்களே! 

அங்கு தான் அண்ணா அவர்கள் நிலைத்து நிற்கிறார். 

அண்ணா சொன்னார்:-


          எனது அன்புள்ள நிருபர் அவர்களே! நான் 

உங்களுக்கு

          ஒன்றை மிகத்தெளிவாக கூறக்கடமை 

பட்டுள்ளேன். 

                          அது            என்னவென்றால்

          நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும்

 அல்ல!!

          நடிகை பானுமதி அவர்களும் படிதாண்டா 

பத்தினியும் அல்ல!!


என்று சொன்னார்.என்னே ஒரு யதார்த்தமான 

சிந்தனை.தன்னை தாக்குகிற கருத்துக்கள் எதுவாக 

இருந்தாலும் அதை நேரடியாக மனதில் ஆத்திரம் 

என்பது கிஞ்சித்தும் கொள்ளாமல் அதை சந்தித்து 

வந்தார்.எல்லோரையும் சிந்திக்கவைத்தார். 

அவர்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


நமது போதாத நேரம். காலம் அன்னாரை நம்மிடம்

இருந்து பிரித்துவிட்டது,வாழ்க அவர்புகழ் 

என்றென்றும் வாழிய! வாழியவே!!

 நன்றி வணக்கம் 

No comments:

Post a Comment