முதலாளி முதலாளிதான் !!
சிறுகதை !!
அனைவருக்கும் வணக்கம். ஒரு பெரிய முதலாளி. அவரிடம் ஒரு
ஊழியர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் தட்டச்-
-சர் பணி செய்துவந்தார். முதலாளி சொன்ன வேலைகள் அனைத்தையும்
மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் பொறுமையுடனும் செவ்வனே
செய்து வந்தார். அப்படி தன் பணியை முதலாளி விரும்பும்படி அவர்
தரும் கடித வரைவுகளை எவ்வித பிழையும் இன்றி தட்டச்சு இயந்திர-
-மதில் பதித்து கையெழுத்து பெற அவரிடம் தரும்போது அவர் அந்த
கடிதத்தில் ஏதாவது ஒரு கோடுஇடுதல் அல்லது அம்புகுறி இட்டு புதிய
வார்த்தை எதையாவது சேர்த்து அதன்பிறகே கையெழுத்து இடுவதை
தனது வழக்கமாக கொண்டிருந்தார். ஊழியருக்கு வயது அறுபது ஆன
உடன் அவரை பணி ஓய்வு பெற உத்தரவு தந்தார் முதலாளி அவர்கள்.
தனக்கு சேர வேண்டிய அனைத்து வரவுகளையும் பெற்றுக்கொண்டு
விடைபெரும் முன்பாக முதலாளி அவர்களை சந்தித்து என்னை இது
வரை வேலைக்கு அமர்த்தியதற்கு நன்றி ஐயா. ஆனால் எனது மனதில்
ஒரு சிறு நெருடல் உள்ளது முதலாளி.அதை உங்களிடம் சொல்லி
அதற்கு விளக்கம் பெறவில்லை என்றால் நான் இத்தனை ஆண்டுகள்
தங்களிடம் வேலை பார்த்ததில் எவ்வித பயனும் இல்லையாதலால்
தயவுசெய்து என் சந்தேகத்தை தீர்த்திட வேண்டும் அய்யா என்று
கேட்டார். முதலாளியும் என்னப்பா உன் சந்தேகம் சொல்லு என்றார்,
தாங்கள் சொல்லியபடிதான் நான் கடிதங்களை தட்டச்சு செய்து
தந்தேன்.இருந்தாலும் நீங்கள் ஏன் ஐயா அதில் கீழ்கோடு இட்டும்
புது வார்த்தைகளை அம்பு குறி இட்டு கையால் எழுதியும் செய்தீர்கள்
எனக்கேட்க அதற்கு முதலாளி பதில் சொன்னார். அட பைத்தியமே
நீ சரியாகத்தான் வேலை செய்தாய்.நான் அதை இல்லை என்று சொல்ல
வில்லை.ஆனாலும் நான் ஏன் அப்படி செய்தேன் என்றால் இந்த கடிதம்
படிப்பவர்கள் நான் எந்தகுறி ஈடும் செய்திடவில்லை என்றால் நான் , நீ
கொடுத்த கடிதத்தில் படித்து பாராமல் கையொப்பம் இடுபவன் என்று
என்னைநினைத்துவிடுவான்அல்லவா?அதற்குதான் தம்பி நான் அவ்வாறு
குறியீடுகள்இட்டேன்எனசொல்லவேலையாள் முகத்தில்அசடுவழிந்தது
என்ன இருந்தாலும் முதலாளி முதலாளிதான் என்று பாராட்டிவிட்டு
பணியில்இருந்துவிடைபெற்றான். ஆகவேபெரியவர்கள்எதுசெய்தாலும்
பெருமாள் செய்தது போல் ஆகும். எனவே நாம் அனைவரும் மூத்தவர்
சொல்கேட்டு வாழ்கையில் முன்னேறுவோமா நேயர்களே.நன்றி
வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment