பழமொழிகளா அல்லது பிழைமொழிகளா?
அன்பு நேயர்கள்அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
வணக்கம்!. நான் ஏற்கனவே மேற்சொன்ன தலைப்பில் வெளிவந்த பல செய்திகளை நீங்கள்
படித்துபார்த்துஇன்புற்று
இருப்பீர்கள் என்று கருதுகிறேன். இன்று மேலும் ஒரு விளக்கம்:-
.
“ நாயைக்கண்டால்
கல்லை காணோம்.
கல்லை கண்டால்
நாயைக்காணோம்”
இந்த பழமொழிக்கு நம்மில்
பெரும்பான்மையோர் அறிந்த கருத்து யாதெனின்:-
நமக்கு முன்னால்
நாய் நிற்கின்றபோது அதன்மேல் எறிவதற்கு கல்லை தேடினோம் அதை காணோம். ஆனால் கல் இருக்கின்ற இடத்தை கண்டோம் நாயை அங்கே காணோம்.
இப்படித்தான்
இதுவரை பொருள் கண்டோம். அனால் உண்மை பொருள் அதுவன்று.
ஒரு திறமை
மிகுந்த சிலைவடிக்கும் சிற்பி தனது முழுத்திறமையையும் செலுத்தி கல்லில் ஒரு நாய்
சிலை ஒன்றினை வடிக்கின்றான்.
உயிரோட்டமாக அந்த சிலை காணப்படுகிறது
.
அந்த சிலையை நாய்
என்று பார்த்தால் அங்கு கல் இருப்பது காணமல் போய் விடுகிறது.. நாய் என்பதை மறந்து கல் என்று
பார்த்தல் நாய் அங்கு காணோம்,
என்றுதான் அதற்கு
நாம் பொருள் கொள்ளவேண்டும் என அன்பர்களை கேட்டு விடைபெறுகிறேன்.
நன்றி.வணக்கம்
வாழ்வோம் வளமுடன்.
அன்பன் மதுரை T.R.பாலு.மீண்டும்
சந்திப்போம்.
No comments:
Post a Comment