மரணம்
என்பது சம்பவமா அல்லது விதியின் சாபமா?
பொதுவாக ஒருவர் திடீர் என்று மரணம் அடைகிறார்
என்று வைத்துகொள்வோம்.அந்த சமயத்தில் நாம் எண்ணுவதெல்லாம் இப்படி இளம்வயதில்
இறந்துவிட்டாரே இவருக்கு இப்படி கோரமான மரணமா என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம்
ஆனால் அது சரியல்ல என்பதே ஜோதிடர்களின் எண்ணம்.
ஒரு சிசு அதன் தாயின் கருவறையில்உருவாகும்போதேஅதன்பிறப்பு,வாழ்க்கை,திருமணம்,மூப்பு,பிணி,மற்றும்,மரணம்
இவைகள்எல்லாம்நிச்சயிக்கப்படுகிறது. அதற்குமேல் ஒரு வினாடி கூட அந்த உயிர் இந்த
பூமியில் வாழ வழியும் இல்லை.வாழ வகையும் இல்லை என்பதே ஜோதிடசாஸ்திர வித்தகர்களின்
கணக்கு. வாழ்வும் சாவும் பூர்வபுண்ணிய பலன்களின்
அடிப்படையில் மட்டுமே மனித உயிர்களுக்கு கிட்டுகிறது.இதனை கூட்டவோ
குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை. நன்றி.வணக்கம். மதுரை T.R.பாலு.மீண்டும் அடுத்த
விளக்கத்தில் சந்திப்போம்
No comments:
Post a Comment