சொந்த
வீடு!
அனைவருக்கும் வணக்கம்! பொதுவாக நம்மில் பெரும்பாலோனோர்கள் புதுசா
யாரையாச்சும் பார்த்தா கேட்கிற முதல்கேள்வி என்னான்னு கேட் -டீங்கனா “ ஆமா
உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?” முதல்லே நான் சொல்றது இது ஒரு நாகரீகம் இல்லாத
கேள்வி. என் கருத்து என்னன்னா யாருக்கும் எதுவும் சொந்தம் கிடையாது. வீடு வேணும்னா
சொந்தமா இருக்கலாம் சுத்து சுவர்,நிலை,ஜன்னல்,கதவு,மின்சாதனப்பொருட்கள் குழாய்கள்
இது சொந்தம் ஆகலாம்.ஆனா நிலம் பூமி அரசாங்கத்துக்கு சொந்தம்.அதனாலேதான் வரி
கட்டுகிறோம்.
பட்டுக்கோட்டை மறைந்த கல்யாணசுந்தரம் பொது உடமை கவிஞர் தான் எழுதிய
முதல் சினிமா பாடலில் சொல்றார்:-
குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம்.
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்.
தட்டுக்கெட்ட மனிதன் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்.
சட்டப்படி பார்க்கபோனா எட்டடிதான் சொந்தம்.
அதாவது எட்டடிமண் தான் சொந்தம் என அவர்சொன்ன கருத்து என்னை
கவர்ந்தது ஆனால் என்னைபொருத்தவரை உடல்
என்னும் இந்த கூட்டிலே உயிரே வாடகைகுத்தானே குடி இருக்குது அப்புறம் என்ன பேச்சு
வேண்டிகிடக்கு? என்னடா மதுரை பாலு வாடகைக்கு குடி இருப்போர் சங்கத்துக்கு
வக்காலத்து வாங்கி பேசுறார்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.என்ன
சரியா!
நன்றி!வணக்கம்!! மதுரை T.R.பாலு. மீண்டும்நாளை சந்திப்போமா?(பேராசிரியர்
திரு சாலமன் பாப்பையா அவர்கள் பாணியில்)
No comments:
Post a Comment