மனங்கள் முறிவதற்கு காரணம் புருஷனா ?
இல்லை மனைவியா ?
அனைவருக்கும் வணக்கம். இன்று அங்கு இங்கு
என்று இல்லாமல் எங்கு பார்த்தாலும் புகைந்து
கொண்டு இருக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை
கையில் எடுத்துக்கொண்டு உங்கள் முன்பாக சில
விவாதங்கள்,விளக்கங்கள்,இறுதிக் கட்டமாக சில
அறிவுரைகள் முதலியன இன்றைய தினம் நான்
எனது " எண்ணச் சிறகுகள் " பக்கத்தில் உங்கள்
சீரிய சிந்தனைக்கு விருந்து அளிப்பதில் பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் இந்த தலைமுறை இடைவெளி படுத்தும்
பாடுகளால் தான் இந்த விவாகரத்து/மனமுறிவு
முதலியன ஏற்படுகிறது என்பதனை நாம் ஒப்புக்
கொள்ள வேண்டுகிறேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்நாட்டில்
திருமணங்கள் என்பது தாய் தந்தையர் பார்த்து
செய்து வைத்தவைகளாக மட்டுமே இருந்தது.
இந்த கண்டதும் காதல், கத்திரிக்காய் போன்ற
எவ்வித சிந்தனைகளும் நாங்கள் வாழ்ந்த காலங்
களில் கிடையவே கிடையாது. பெற்றோர்களுக்கு
கீழ்படிந்த குணங்கள் கொண்ட பிள்ளைகளாக
நாங்கள் இருந்தோம். அதனால் எந்த பிரச்னை
களும் எங்கள் வாழ்கையில் இல்லை.
ஆனால் இன்று நாட்டில் நிலைமை என்ன ?சற்று
சிந்தித்துப் பாருங்கள் உண்மை தெரியவரும்.
காதலால் ஆதி அந்தங்களை மறந்ததால் வந்த
வினை வாழ்வில் குழப்பம்,மனம் முடித்திட்ட
மூன்று மாதங்களுக்குள் நிம்மதி இழப்பு, தினமும்
பிரச்னை இதுவே நாளெங்கும் தொடர்கதை ஆகிப்
போன அம்சங்களாக ஆகி விட்டது.
ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் ஆக
மொத்தம் 9௦ நாள்கள். கதை முடிந்து விடுகிறது.
பிறகு வழக்கு நீதிமன்றம் இதுவே வாழ்க்கை.
பாவம் இவர்களுக்கு பிறந்து தொலைத்த இளம்
வாரிசுகளின் நிலைமை.
கொஞ்சம் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்
இப்படியொரு நிலைமை ஏன்,எதனால்,யாரால்
வந்தது என்று. நான் பதில் சொல்கிறேன்.
இவைஅனைத்தும்உங்களால்,உங்களுக்கு,உங்களு
க்காகவே நீங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு
சமுதாயப் பிரச்சினையாக இன்று ஆக்கப்பட்டு
விட்டது.
நீங்கள் மட்டும் கொஞ்சம் சிந்தித்து இருப்பீர்களே
ஆனால் முழுவதுமாக இந்தப் பிரச்சினையே
உங்களுக்கு வந்திருக்காது. நான் அடித்து ஆணித்த-
ரமாக சொல்வேன். எதற்கு இந்த காதல்
வலைதனில் நீங்கள் வீழ்ந்தீர்கள். அம்மா,அப்பா
மனக் கசப்பை சம்பாதித்தீர்கள். அதன் விளைவு.
இன்று நீங்கள் அனுபவிப்பது.
சரி அப்படியே காதல் திருமணங்களில் மட்டும்
தான இந்த மணமுறிவு --பெற்றோர்கள் நிச்சயம்
செய்து அதன் பின் நடந்த திருமனகளிலும் தானே
இந்த விவாகரத்து வருகிறது. உண்மை. வருகிறது.
நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால்
அளவுகள் குறைந்து காணப் படுகிறது அல்லவா.
அன்றைய தினம் பெரியவர்கள் சொன்னசொல்லை
நாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம். அதனால்
தான் இன்று அதற்கு விலை கொடுத்து கொண்டு
இருக்கிறோம். என்ன சொன்னார்கள் அவர்கள்:-
" தனக்கு இளையது தாரம்.-- தலை மீறினால்
வருவது கோரம்--இதற்கு இல்லை பரிகாரம்"
என்று சொன்னார்களே ஐயா. யார் கேட்டீர்கள்?
இன்று அனுபவியுங்கள். தனக்கு இளையது
என்றால் வயதில் மட்டும் அல்ல நண்பர்களே !
வனப்பில்,அழகில்,வருமானத்தில்,குடும்ப
கவுரவத்தில், அந்தஸ்து நிலைகளில். இவை
எல்லா வற்றிலும் ஆணுக்கு மனைவியாக
வருபவள் சற்று குறைவாக இருந்திடல் மிக
மிக அவசியம் நண்பர்களே. மேற்சொன்னவைகளில்
ஏதாவது ஒன்று கூட ஆணைவிட கூடி இருந்தால்
விவகாரம்தான்.குடும்பம்சரிப்பட்டு வரவே வராது
மொத்தத்தில் கணவன் மனைவி இருவருக்குள்
நாம் இருவரும் சமம் ஆனவர்கள். ஒற்றுமையுடன்
குடும்பம் நடத்த வேண்டும்.வீட்டுசப்தம் வெளியில்
கேட்க கூடாது என்பதில் இருவருக்கும் கருத்து
ஒற்றுமை இருக்க வேண்டும். நீ என்ன சொல்றது.
நான் என்ன கேட்கிறது அப்படின்னு இருந்தால் கதை
கந்தல்தான். குடும்பம்உருப்படாது.பாவம்யார் என்று
கேட்டால் உங்களுக்கு பிறந்த குழந்தைகள்தான்.
அதுக முகத்துக்காக வாவது சேர்ந்து
ஒற்றுமையுடன் வாழ்ந்தீர்கள் என்றால் பிள்ளைகள்
பிற்கால வாழ்கை நன்றாக அமையும். அவ்வளவு
தான் எங்களால் சொல்ல முடியும்.
இறுதியாக நாங்கள் சொல்வது விவாக ரத்து மற்றும்
மனமுறிவு இவைகளுக்கு ஆண்/பெண் இருவருமே
ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் என்றில்லாமல்
காரண கர்த்தர்கள் ஆக இருக்கிறார்கள் என்பது
மட்டுமே நிதர்சானமான உண்மை. இரண்டு கை
தட்டினால் மட்டுமே ஓசை வரும். இதனை நீங்க
மறந்து விடாதீர்கள். ஒருவர் ஓங்கிப் பேசினால்
அடுத்தவர் அடங்கிவிட்டால் எது ஐயா விவகாரம்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று
தமிழ் மூதாட்டி சொல்லி உள்ளதை மறந்து
விடாதீர்கள். மறந்து விட்டால் மனிதனாகப்
பிறந்தும் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க
முடியாமல் போய்விடுவீர்கள். பொறுமையுடன்
வாழ்ந்தால் என்றும் பெருமைதான் உங்கள்
வாழ்கையில்.
வருங்கால சமுதாயத்திற்காக வாவது நீங்கள்
பல விஷயங்களை சமரசம் செய்து கொள்ள
பழகிக் கொண்டு வாழுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே !!
தினமும் ஒருவரை ஒருவர் சண்டைபோட்டு
நிம்மதி இழந்து தவித்து கருத்து மாறுபாடுகளால்
நொந்து நூலாகப் போவதற்கு அல்ல வாழ்க்கை.
அனுபவியுங்கள்.முடிந்தவரை அனுபவியுங்கள்.
இன்பங்களை முகர்ந்து பாருங்கள். இதுபோன்ற
மனிதபிறவி இனிமேலா உங்களுக்கு கிடைக்கும்
என நீங்கள் எண்ணுகிறீர்கள்.
இன்று இருப்போர் நாளை இங்கே இருப்பது என்ன
உண்மை. இதை எண்ணிடாமல் சேர்த்து
அதைகாத்து என்ன நன்மை. இருக்கும்வரை
இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லை
என்றால் வாழ்வினிலே உனக்கு எது இனிமை.
என்னும் பழைய கால திரைப்பட பாடலிலஎவ்வளவு
கருத்து பொதிந்து உள்ளது.எண்ணிப் பாருங்கள்.
இனிமேல் வாழ்க்கை உங்கள் கையில்.
சொல்லுறதை சொல்லிபுட்டேன் செய்றதை
செஞ்சிக்குங்க நல்லதுன்னா கேட்டுக்கிங்க
கெட்டதுன்ன விட்டுடுங்க. என்ற J.B.சந்திரபாபு
பாடிய பாடலுடன் எனது கட்டுரைதனை நிறைவு
செய்கிறேன். இனியாவது நன்றாக வாழுங்கள்.
நன்றி.வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.