Tuesday, 26 March 2013

பழி ஓரிடம் !! பாவம் ஓரிடம் !!


பழி ஓரிடம்!! பாவம் ஓரிடம் !!


..               
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 

உயிரினும் மேலான 

அன்புத்தமிழ்நெஞ்சங்களுக்கு எனது அன்பு 

நிறைந்த வணக்கம். 

மேலே சொன்ன கருத்து பொதுவாக ஒருவர்

தீங்கு இழைத்துவிட்டுச்சென்று விடுவார். 

ஆனால் அந்த தீங்கு வேறுஒருவர் தலையில் 

விழும். அந்தநிலையைத்தான் மேற்சொன்ன 

பழி ஓரிடம் பாவம்ஓரிடம்எனகூறுவார்.இதற்கு  

நாம் வேறு எங்கும் உதாரணம் தேடி 

செல்ல  வேண்டிய அவசியம் இல்லை. 


அது நம் முகத்திலேயே உள்ளது.நமது 

எதிரியை நமக்கு பிடிக்காதவரை பார்த்து 

வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அவருக்கு 

கோபத்தை உண்டாக்கி விட்டு நாக்கு அது 

சுகமாக உள்ளே சென்று அமர்ந்துவிடுகிறது.

ஆனால்பாதிக்கப்படும் அந்த நபர் விடுகின்ற 

அடியில் கொடுக்கின்ற குத்தில்,உதையில்,

உடைவது என்னவோ ஒன்றும் அறியாத 

பல்தான். 

அதனால் தான் வள்ளுவன் சொன்னது:-
     
அதிகாரம் :-அடக்கமுடைமை 

குறள் எண் :- 127 


       யாகாவார்ஆயினும்நாகாக்ககாவாக்கால்

 சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.. 
                
.. .. ..
அதாவது நீ உனது வாழ்கையில் எதை 

காப்பாற்றாமல் இருந்தாலும் 

பரவாயில்லை.உனக்கு கேடு இல்லை.உனது 

நாக்கை காப்பாற்றாமல்இருந்தால் உனக்கு 

வாழ்வில் மிகபெரும் இழுக்கு உன்னை தேடி 

வரும்.நீ இதனை  உணர்ந்து கொள்.என்று 

வான் புகழ் வள்ளுவன் சொன்னதை 

நாம் இனியாகிலும் நமது  வாழ்வில் கடைப்பிடிப்போமா நேயர்களே.


நன்றி !வணக்கம்.!! 

அன்புடன் 
மதுரை T.R.பாலு.

Monday, 25 March 2013

கற்பினில் சிறந்தவர் யார் ? கண்ணகியா ? வாசுகியா?

ஒரு சிறு சிந்தனை வெளிப்பாடு !!


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் எனது உயிரினும் 

மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கும் மேலாக 

உங்களை சந்திக்காமல் நான் விலகி இருந்ததற்கு 

என்ன காரணம் என்றால் எனது கண் பிறை அறுவை 

சிகிச்சை நடைபெற்றதுதான்,  இன்னும் ஒரு பத்து 

தினங்கள் நான் மடிக் கணினி பக்கம் கூட போகக் 

கூடாதுஎன்பதுமருத்துவர்கள்கட்டளை. அதனையும் 

மீறி இப்போது நான் உங்களை சந்தித்து 

விஷயத்தை சொல்கிறேன்,


தயவுசெய்து ஒரு பத்து நாட்கள் மட்டும் 

பொருத்திருங்கள்.அப்புறம் எப்பவும் நான் 

உங்களோடுதான்.என்ன சரியா. இப்ப நாம் 

தலைப்புக்கு வருவோம்,


நம்ம கிராமத்தைச் சேர்ந்த குப்பன் அவங்க ஊர் 

கோவில் திருவிழாவில் ஒரு ஆன்மீக 

சொற்பொழிவாளர் பேசுவதைக் கேட்டான். 


 அவர் 

என்ன சொன்னார்னா வள்ளுவர் வீதிஉலா சென்று 

வந்துபின் வீட்டு வாயில்படியில் நின்றுகொண்டு 

தன் மனைவி வாசுகியை சற்று சப்தமிட்டு அம்மா !!

வாசுகி என அழைப்பாராம். 


 அதுபோது அந்த 

அம்மையார் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டு 

இருப்பாராம். கணவர் அழைத்துவிட்டாரே என்ற 

அவசரத்தில் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு 

வந்து கணவரை வரவேற்று வீட்டின் உள்ளே 

அழைத்து செல்வது வாடிக்கை. ஆனால் கிணற்றில் 

அந்த கயிறும் நீர் நிரம்பிய வாளியும் அப்படியே 

நிற்குமாம். இது வாசுகி அம்மையாரின் 

கற்புத்தன்மைக்கு ஓர் உவமை என்று அந்த 

சொற்பொழிவாளர் கூறியதை மனதுக்குள் 

அசைபோட்டுக்கொண்டு வந்த நம்ம கிராமத்து 

குப்பன் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு 

அவன் மனைவியை ஏய் அம்பிகா என்று அழைக்க 

அவளும் வர அவளிடம் குப்பன் கோவிலில் 

வள்ளுவன் வாசுகியை அழைத்த விஷயத்தை பற்றி 

சொல்ல அவளது கற்பு வெளிப்பட்டது அது போல 

நீயும்கிணற்றில்நீர்இறைத்துகொண்டிருக்கும்போது

பாதி வந்ததும் சொல்லு நான் உன்னை 

கூப்பிடுகிறேன் என்று குப்பன் சொன்னான். 


எதற்கு 

என்று மனைவி அம்பிகா கேட்க உனது கற்புக்கு 

நான் வைக்கும் சத்திய சோதனை இது என்றான்.

சரி என்று சொல்லி மனைவி 

அம்பிகாவும்போனாள்.கிணற்றில் நீர் 

இறைத்தாள்,

பாதி வந்தவுடன் என்னங்க கயிறு பாதி 

வந்துடுச்சு என்று சொன்னாள், உடனே குப்பனும் 

அடியேஅம்பிகா என்று அழைத்தான்.இவள் கயிறை

விட்டு விட்டு வாசலுக்குவர, கிணற்றில் நீர் நிரம்பி 

இருந்த வாளிஅதன் பாரம் தாங்காமல் டொட் 

டொட்.டோர்ரேன கிணற்றின் ஆழத்திற்கு சென்று 

வீழ்ந்தது. இது கண்ட குப்பன் தன மனைவியை 

பார்த்து இல்லே இல்லே நீ கற்புக்கரசி இல்லே நீ 

கற்புக்கரசி இல்லே என ஒரேயடியாக 

ஓப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டான்.


உடனே அவன் மனைவி அம்பிகா சொன்னாள், 

யோவ் அங்கே கூப்பிட்டது திருவள்ளுவர் அய்யா. 

அதனாலே அங்கே கயிறும் வாளியும் நின்னுச்சு 



இங்கே கூப்பிட்டது நீ தானே அப்புறம் எப்படிய்யா 

கயிறு நிக்கும். கற்பு என்பது பொம்பளைங்களுக்கு 

மட்டும் உரித்தானது அல்ல. நான் சத்தியமா 

சொல்றேன்  ஆம்பிளைங்களுக்கும் சேர்ந்ததுதான் 

என்று போட்டாளே ஒரு போடு. 


அனைவருக்கும் வணக்கம்.மீண்டும் பத்து நாட்கள் 

கழித்து நாம் சந்திப்போமா நேயர்களே !!

நன்றி !! வணக்கம் !! 

மதுரை T.R.பாலு 



Tuesday, 19 March 2013

இன்னுமா மவுனம் இலங்கை அநியாயம் கண்டு ?


என்ன செய்யப்  போகிறது மத்திய அரசு

இலங்கை தமிழர்கள் விஷயத்தில்?



இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நடைபெற்ற உச்சகட்ட போரிலே லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மகிந்திரா ராஜபக்ஷே கொக்கரித்துக்கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கையாலாகாத மத்திய அரசு அந்த கொடும் செயலுக்கு தன்னால் ஆனா எல்லா உதவிகளையும் இரகசியமாக செய்து அக்கிரம இலங்கை அரசை ஆதரித்த மத்திய காங்கிரஸ் ஏகாதிபத்திய அராசங்கம் இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறது.

 ஒரேஒரு ஜீவன் கொல்லப்பட்டான் (ராஜீவ்காந்தி)என்ற காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழ் இனத்தயே அழிப்பதற்கு துணை நின்ற மத்திய அரசு இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறது?

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மூன்று கருமாதிகள் முடுவுற்ற நிலையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறது? 

கொடுங்கோலன் நம் தமிழ் இனத்தை கொன்று குவித்து அவர்கள் சிந்திய இரத்த பெருக்கை அள்ளி பால் பாயாசம் சாப்பிட்ட ராஜபக்சேவுக்கு இன்னும் இந்த நாட்டில் எத்தனை கோவில்களில் அவர் தரிசனம் செய்ய சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க போகிறது? 

சூடு சொரணை மானம் வெட்கம் கடுகு அளவு கூட இல்லாத மத்திய அரசே வரலாற்றை சற்று பின்னோக்கித் திரும்பி பார்.

கிழக்கு பாகிஸ்தானில் இதே போல இன படுகொலைகள் நடந்த அந்தநாளில் அன்றைய பாரத பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் எப்படி செயல்பட்டார்.எண்ணி பார்க்க வேண்டாமா?

நம் நாட்டு ராணுவத்தை அங்கே அனுப்பி அவர்களுக்கு தனி நாடு பெற்று தந்த அந்த அன்னை இந்திராகாந்தி அவர்களின் செயல்பாடு எங்கே?

இங்கே தமது கணவன் ஒருவன் புலிகளால் கொல்லப்பட்டான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக நம் ராணுவத்தின் அனைத்து உதவிகளையும் இலங்கை அரசாங்கத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  செய்து தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுத்த சோனியா காந்தி எங்கே?

மன்னிக்க வேண்டும் எனக்கு அவர்களை அந்த புண்ணிய அடை மொழியாம் அன்னை என்று அழைக்க மனம் வர வில்லை. 

இதற்கு மேலும் மத்திய அரசு இன்னும் மௌனம் காத்து வருமேயானால் நான் சத்தியமாக சொல்கிறேன் தமிழ் நாட்டில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலாகட்டும் அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் ஒருஒட்டு கூட விழாது மட்டுமல்ல எந்த காங்கிரஸ்காரனும் தமிழ் நாட்டு வீதியில்  நடமாடக்கூட முடியாத நிலைதான் ஏற்படும் என்பதனை ஒரு தமிழன் என்ற முறையில் மத்திய காங்கிரஸ் அரசை  நான் எச்சரிக்க கடமைபட்டுள்ளேன். 

என்தலைவர் கூட இந்த விஷயத்தில் அன்றையதினம் மௌனம் காத்தது என்னைபோன்ற தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சில் இன்னும் ஆறாத ரணமாகத்தான் உள்ளது.அன்று அவர்மட்டும் 

அண்ணா சொன்னதுபோல் பதவி எங்களை பொறுத்தவரை மேலேபோடும் துண்டு போன்றது.கொள்கை நாங்கள் உடுத்தும் மானம் காக்கும் வேஷ்ட்டியை போன்றது என்று தீவிரமாக செயல் பட்டிருப்பாரேயானால் அந்த லட்சக்கணக்கான படு கொலைகளை தடுதிருக்க முடியும்.

என்ன செய்வது நாம் அந்த அளவு கொடுத்து வைத்திருக்கவில்லையே. இப்போது டெசோ என் ரெல்லாம் போராடுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற சொல்லைத்தான் நினைவு படுத்துகிறது. 

மத்திய அரசு உடனே இப்போதாவது தனது கடந்த கால தவறுகளை உணர்ந்து தமிழர்கள் நலனை எண்ணிப்பார்த்து செயல் பட்டால் தான் தமிழகம் இந்தியாவோடு இணைந்திருக்க முடியும் என தமிழ் ஆர்வலர்கள் கூறுவதை என்னால் மறுக்க முடியவில்லை என்பதை மட்டும் நான் மத்திய அரசுக்கு கூற கடமைபட்டுள்ளேன்.பாப்போம் இனி என்ன நடக்க போகிறது.  

திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியில் வந்த பின்பும் முலாயம்சிங் மற்றும் மாயாவதியை தாஜா செய்து பதவி நாற்காலி தனில் ஒட்டிக்கொண்டு எஞ்சிய ஓராண்டுதனை அனுபவிக்கபோகிறதா அல்லது இப்போதாவது சோத்தில் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிட்டவனுக்கு வரும் உணர்ச்சி கொந்தளிப்பதுபோல இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மகாநாட்டில் அமெரிக்க அரசாங்ககத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள மனிதஉரிமைகள் மீறல் தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் ராஜபக்சே ஒரு மனிதஇனத்தின் மன்னிக்கமுடியாத கொடுங்   கொலையாளி என்று குறிப்பிடும் திருத்த தீர்மானங்களோடு கூடிய வாக்கெடுப்பில் உண்மைக்கு நேர்மைக்கு சத்தியத்திற்கஆதரவாக தமிழ் இனத்திற்கு ஆதரவாக அந்த தீர்மானத்தை தாமே முன்மொழிந்து ஆதரித்து வாக்கு அளிக்கப்போகிறதா அல்லது . நம் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வெறும் கண்டன தீர்மானம் மட்டுமே நிறைவேற்றி கடனைக் கழிப்பதினாலே எந்த பிரயோஜனமும் இல்லை திரு மன்மோகன் சிங் அவர்களே. அங்கே ஜெனிவாவில் மேற்சொன்ன திருத்தங்களோடு கூடிய கண்டன தீர்மானத்தை இந்திய அரசு  முன்மொழிந்து நிறைவேற்றினால் மட்டுமே நீங்கள் செய்த பாவத்திருக்கு ஓரளவு பரிகாரம் தேடுகிற முயற்சியாக அது உதவுகிறதா என்று பாப்போம். எது நடக்கப் போகிறது என்று.

நீங்கள் உண்மையான ஆண்மை நிறைந்த அரசாங்கமா என்று.பார்ப்போம். நன்றி வணக்கம்.

Monday, 18 March 2013

விவாகரத்துக்கு யார் கரணம்? ஒரு ஆராய்ச்சி !




மனங்கள் முறிவதற்கு காரணம் புருஷனா ?

இல்லை மனைவியா ?  



அனைவருக்கும் வணக்கம். இன்று அங்கு இங்கு  

என்று இல்லாமல் எங்கு பார்த்தாலும் புகைந்து 

கொண்டு இருக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை 

கையில் எடுத்துக்கொண்டு உங்கள் முன்பாக சில 

விவாதங்கள்,விளக்கங்கள்,இறுதிக் கட்டமாக சில 

அறிவுரைகள் முதலியன இன்றைய தினம் நான் 

எனது " எண்ணச் சிறகுகள் " பக்கத்தில் உங்கள் 

சீரிய சிந்தனைக்கு விருந்து அளிப்பதில் பெரும் 

மகிழ்ச்சி அடைகிறேன்.


முதலில் இந்த தலைமுறை இடைவெளி படுத்தும் 

பாடுகளால் தான் இந்த விவாகரத்து/மனமுறிவு 

முதலியன ஏற்படுகிறது என்பதனை நாம் ஒப்புக் 

கொள்ள வேண்டுகிறேன்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்நாட்டில் 

திருமணங்கள் என்பது தாய் தந்தையர் பார்த்து 

செய்து வைத்தவைகளாக மட்டுமே இருந்தது.


இந்த கண்டதும் காதல், கத்திரிக்காய் போன்ற 

எவ்வித சிந்தனைகளும் நாங்கள் வாழ்ந்த காலங் 

களில் கிடையவே கிடையாது. பெற்றோர்களுக்கு 

கீழ்படிந்த குணங்கள் கொண்ட பிள்ளைகளாக 

நாங்கள் இருந்தோம்.  அதனால் எந்த பிரச்னை

களும் எங்கள் வாழ்கையில் இல்லை.


ஆனால் இன்று நாட்டில் நிலைமை என்ன ?சற்று 

சிந்தித்துப் பாருங்கள் உண்மை தெரியவரும்.

காதலால் ஆதி அந்தங்களை மறந்ததால் வந்த 

வினை வாழ்வில் குழப்பம்,மனம் முடித்திட்ட 

மூன்று மாதங்களுக்குள் நிம்மதி இழப்பு, தினமும்

பிரச்னை இதுவே நாளெங்கும் தொடர்கதை ஆகிப் 

போன அம்சங்களாக ஆகி விட்டது. 


ஆசை அறுபது நாள்,மோகம்  முப்பது நாள் ஆக

மொத்தம் 9௦ நாள்கள். கதை முடிந்து விடுகிறது.

பிறகு வழக்கு நீதிமன்றம் இதுவே வாழ்க்கை.  

பாவம் இவர்களுக்கு பிறந்து தொலைத்த இளம் 

வாரிசுகளின் நிலைமை. 


கொஞ்சம் நீங்களே சிந்தித்துப் பாருங்கள் 

இப்படியொரு நிலைமை ஏன்,எதனால்,யாரால் 

வந்தது என்று.  நான் பதில் சொல்கிறேன்.  


இவைஅனைத்தும்உங்களால்,உங்களுக்கு,உங்களு

க்காகவே நீங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு 

சமுதாயப் பிரச்சினையாக இன்று ஆக்கப்பட்டு 

விட்டது. 


நீங்கள் மட்டும் கொஞ்சம் சிந்தித்து இருப்பீர்களே 

ஆனால் முழுவதுமாக இந்தப் பிரச்சினையே 

உங்களுக்கு வந்திருக்காது. நான் அடித்து ஆணித்த-

ரமாக சொல்வேன். எதற்கு இந்த காதல் 

வலைதனில் நீங்கள் வீழ்ந்தீர்கள். அம்மா,அப்பா 

மனக் கசப்பை சம்பாதித்தீர்கள். அதன் விளைவு.

இன்று நீங்கள் அனுபவிப்பது.

சரி அப்படியே காதல் திருமணங்களில் மட்டும்

தான இந்த மணமுறிவு --பெற்றோர்கள் நிச்சயம் 

செய்து அதன்  பின் நடந்த திருமனகளிலும் தானே 

இந்த விவாகரத்து வருகிறது. உண்மை. வருகிறது.

நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் 

அளவுகள் குறைந்து காணப் படுகிறது அல்லவா.


அன்றைய தினம்  பெரியவர்கள் சொன்னசொல்லை 

நாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம். அதனால்

தான் இன்று அதற்கு விலை கொடுத்து கொண்டு 

இருக்கிறோம். என்ன சொன்னார்கள் அவர்கள்:-


 " தனக்கு இளையது தாரம்.-- தலை மீறினால் 

   வருவது கோரம்--இதற்கு இல்லை பரிகாரம்"


என்று சொன்னார்களே ஐயா. யார் கேட்டீர்கள்?

இன்று அனுபவியுங்கள்.  தனக்கு இளையது 

என்றால் வயதில் மட்டும் அல்ல நண்பர்களே !

வனப்பில்,அழகில்,வருமானத்தில்,குடும்ப 

கவுரவத்தில், அந்தஸ்து நிலைகளில்.  இவை 

எல்லா வற்றிலும் ஆணுக்கு மனைவியாக 

வருபவள் சற்று குறைவாக இருந்திடல் மிக 

மிக அவசியம் நண்பர்களே. மேற்சொன்னவைகளில் 

ஏதாவது ஒன்று கூட ஆணைவிட கூடி இருந்தால் 

விவகாரம்தான்.குடும்பம்சரிப்பட்டு வரவே வராது 


மொத்தத்தில் கணவன் மனைவி இருவருக்குள் 

நாம் இருவரும் சமம் ஆனவர்கள். ஒற்றுமையுடன் 

குடும்பம் நடத்த வேண்டும்.வீட்டுசப்தம் வெளியில் 

கேட்க கூடாது என்பதில் இருவருக்கும் கருத்து 

ஒற்றுமை இருக்க வேண்டும்.  நீ என்ன சொல்றது.

நான் என்ன கேட்கிறது அப்படின்னு இருந்தால் கதை 

கந்தல்தான். குடும்பம்உருப்படாது.பாவம்யார் என்று  

கேட்டால் உங்களுக்கு பிறந்த குழந்தைகள்தான்.


அதுக முகத்துக்காக வாவது சேர்ந்து

ஒற்றுமையுடன் வாழ்ந்தீர்கள் என்றால் பிள்ளைகள் 

பிற்கால வாழ்கை நன்றாக அமையும். அவ்வளவு

தான் எங்களால் சொல்ல முடியும்.  


இறுதியாக நாங்கள் சொல்வது விவாக ரத்து மற்றும்  

மனமுறிவு இவைகளுக்கு ஆண்/பெண் இருவருமே 

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் என்றில்லாமல் 

காரண கர்த்தர்கள் ஆக இருக்கிறார்கள் என்பது 

மட்டுமே நிதர்சானமான  உண்மை.  இரண்டு கை 

தட்டினால் மட்டுமே ஓசை வரும். இதனை நீங்க 

மறந்து விடாதீர்கள். ஒருவர் ஓங்கிப் பேசினால் 

அடுத்தவர் அடங்கிவிட்டால் எது ஐயா விவகாரம்.


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று 

தமிழ் மூதாட்டி சொல்லி உள்ளதை மறந்து 

விடாதீர்கள்.  மறந்து விட்டால் மனிதனாகப்

பிறந்தும் அதன் பலனை  நீங்கள் அனுபவிக்க 

முடியாமல் போய்விடுவீர்கள்.  பொறுமையுடன் 

வாழ்ந்தால் என்றும் பெருமைதான் உங்கள் 

வாழ்கையில். 


வருங்கால சமுதாயத்திற்காக வாவது நீங்கள் 

பல விஷயங்களை சமரசம் செய்து கொள்ள 

பழகிக் கொண்டு வாழுங்கள்.


வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே !!

தினமும் ஒருவரை ஒருவர் சண்டைபோட்டு 

நிம்மதி இழந்து தவித்து கருத்து மாறுபாடுகளால் 

நொந்து நூலாகப் போவதற்கு அல்ல வாழ்க்கை.


அனுபவியுங்கள்.முடிந்தவரை அனுபவியுங்கள்.

இன்பங்களை முகர்ந்து பாருங்கள். இதுபோன்ற 

மனிதபிறவி இனிமேலா உங்களுக்கு கிடைக்கும் 

என நீங்கள் எண்ணுகிறீர்கள்.


இன்று இருப்போர் நாளை இங்கே இருப்பது என்ன 

உண்மை. இதை எண்ணிடாமல் சேர்த்து 

அதைகாத்து என்ன நன்மை. இருக்கும்வரை 

இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லை 

என்றால் வாழ்வினிலே உனக்கு எது இனிமை.


என்னும் பழைய கால திரைப்பட பாடலிலஎவ்வளவு 

கருத்து பொதிந்து உள்ளது.எண்ணிப் பாருங்கள்.

இனிமேல் வாழ்க்கை உங்கள் கையில்.

சொல்லுறதை சொல்லிபுட்டேன்  செய்றதை 

செஞ்சிக்குங்க  நல்லதுன்னா கேட்டுக்கிங்க 

கெட்டதுன்ன விட்டுடுங்க. என்ற J.B.சந்திரபாபு 

பாடிய பாடலுடன் எனது கட்டுரைதனை நிறைவு 

செய்கிறேன். இனியாவது நன்றாக வாழுங்கள்.


நன்றி.வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.







Sunday, 17 March 2013

ஆறுபடைவீடுகளில் எந்தவீட்டுக்கு தனிச்சிறப்பு ?

தனிச் சிறப்பு எந்த வீட்டுக்கு ?



 உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் உயிரினும் 

மேலாக நான் மதித்து  வணங்கிடும் எனதுஅன்புத் 

தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் அனைவருக்கும் 

எனது காலை வணக்கங்கள் !!


இன்றையதினம் ஆன்மிகம் சார்ந்த ஒரு தலைப்பில் 

னது எண்ணச் சிறகுகளை விரித்து வானமதில் 

வட்டமிட விழைகிறேன்.


எம்பெருமான் திருமுருகனுக்கு படைவீடுகள் ஆறு 

இந்த அவனியில் இருந்தாலும் கூடஅவற்றுள்தலை 

சிறந்த வீடு எது? என்பது பற்றிய ஆராய்ச்சிதான் 

இன்றைய எனது கட்டுரையின் மூல வித்து.


ஆறு படை வீடுகளில் முதல்படை  வீடு  என்பது 

திருப்பரங்குன்றம்,அதன் பிறகு திருச்செந்தூர்,

பிறகு பழனி, பிறகு திருத்தணி,அதன் பிறகு 

சுவாமிமலை,கடைசியாக ஆறாவது படை வீடாக 

வருவது பழமுதிர்ச்சோலை என்று பக்தர்களால் 

அழைக்கப்படும் அழகர்கோயில் ஆகும்.


இவைகளில் ஐந்து படை வீடுகள் மலைமீது 

அமைந்துள்ளது.  எஞ்சிய ஆறாவது படைவீடுதான் 

கடல் மட்டத்திற்கு கீழாக அமைந்து இருப்பதுடன் 

பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை வாரி 

வழங்குவதில் முதன்மை இடம் வகிப்பது என்பது 

திருச்செந்தூர் மட்டுமே. 


பொதுவாக பூகோள  ரீதியாக எடுத்துகொண்டால் 

உலகத்தில் நிலப்பரப்பு என்பது 25 விழுக்காடுகள் 

என்றும் நீர்பரப்பு என்பது எஞ்சிய 75 விழுக்காடுகள் 

என்பதனை அறிவியல் ஆர்வலர்கள் ஏற்றுகொண்ட 

ஒரு கருத்து. 


அந்த அடிப்படையில் நாம் பார்த்தால்  நிலத்தில் 

அமைந்து இருக்கும் மலைதனை விட 

கடல் நீருக்கு அடியில் உள்ள தெய்வம்தான்  அதிக 

சக்தி படைத்தது என்பது மறுக்க முடியாத மற்றும் 

மறைக்க முடியாத ஒரு கருத்து என்றே நான் எனது

சிற்றறிவுக்கு எட்டிய வரை சிந்தித்தேன். அந்த ஒரு 

சிந்தனையை உங்களிடம் பகிர்ந்தும் கொண்டேன்.


ஆனால் ஒன்று மட்டும் உறுதி.  வாழ்வில் மிகவும் 

நொந்து நூலாகப் போனவர்கள் அனைவரும் 

தவறாமல் வந்து வணங்கிடும் தெய்வம் 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதான் 

என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது.


திரைப் படைத்துறை சார்ந்த எத்தனையோ நலிவு 

அடைந்த கலைஞர்கள் இந்த திருத்தலத்திற்கு 

வந்துவணங்கி அவனது அருள் பெற்றுச் சென்றதால்

இன்றைய தினம் சீரோடும் சிறப்போடும் இதுவரை 

நன்குவாழ்ந்தும்வளர்ந்தும் வந்துஉள்ளனர்.


மறைந்த சாண்டோM.M.A.சின்னப்பத்தேவர்அவர்கள் 

இந்த திருத்தலத்தின் தீவிர பக்தர் என்பது  உலகம்

அறிந்திட்ட உண்மை.


என்னைப் பொருத்தவரை திசைமாறிச் சென்று 

கொண்டிருந்த எனது வாழ்க்கைப் பாதைதனை 

சரியான திசை நோக்கி திருப்பியது அந்த 

செந்தூரான்தான் என்றால் அது மிகையான சொல் 

அல்ல.  அந்த முருகப் பெருமான் தான் இன்றுவரை  

என்னையும் எனது குடும்பத்தையும் வாழ 

வைத்துக்கொண்டிருகிறான்.


முருகன் புகழ் வாழ்க ! வளர்க !!


நன்றி !வணக்கம் !! அன்புடன்.மதுரை T.R.பாலு.






அறிஞர் அண்ணாவின் வாழ்வினிலே!!


பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்வினிலே 

எத்தனை எத்தனையோ 

நிகழ்வுகள் அவைகளை நாம் பட்டியல் 

போடவேண்டும் என்றால் அதற்கு 

இந்தஒருபிறவி நமக்குபோதாது.இருப்பினும் 

அவற்றுள் ஒருசிலவற்றை நான் 

உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள 

ஆசைப்படுகிறேன்
.

ஒருசமயம் அண்ணா அவர்கள் பிரபல திரைப்பட 

நடிகை பானுமதி அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு 

வசனம் எழுதும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 

இருந்தார். அப்போது அடிக்கடி திருமதி பானுமதி 

அவர்களை சந்திக்கும் வாய்ப்பு தானாகவே 

அண்ணா அவர்களுக்கு கிடைத்தது.இருவரும் 

கருத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டு  

பேசிக்கொள்ளும்  வாய்ப்பினை பெற்றார்கள் 


வழக்கம்போல பத்திரிக்கையாளர்கள் மத்தியில் 

இந்த விஷயம் கிசு கிசு என பேசப்பட்டது. அப்போது 

தைரியம்/துணிச்சல் நிறைந்த  பத்திரிக்கையாளர் 

ஒருவர் அறிஞர் அண்ணாவிடம் நேரிடையாகவே 

கேட்டார்.அண்ணா அவர்களே! நாங்கள் தங்களை 

பற்றியும் நடிகை திருமதி பானுமதி அவர்களை 

பற்றியும் சில விஷயங்கள் கேள்விப்படுகிறோமே 

அது உண்மையா? என்று வினவினார்.


அதற்கு பேரறிஞர் பெருந்தகையாளர் அவர்கள் 

தற்போது நடைபெறுவதுபோல என்னடா இது என்ன 

தைரியம் இந்த பத்திரிக்கையாளருக்கு! இதுபோல 

தம்மிடமே  ஆத்திரமூட்டுவதுபோகேட்டுவிட்டாரே

 என்பதற்காக  அந்த பத்திரிக்கை அலுவலகத்தினை 

முற்றுகை இடவும் இல்லை அந்தபத்திரிக்கையை 

தீ இட்டுக்  கொளுத்தவுமில்லை. மாறாக என்ன 

சொன்னார் தெரியுமா நேயர்களே! 

அங்கு தான் அண்ணா அவர்கள் நிலைத்து நிற்கிறார். 

அண்ணா சொன்னார்:-


          எனது அன்புள்ள நிருபர் அவர்களே! நான் 

உங்களுக்கு

          ஒன்றை மிகத்தெளிவாக கூறக்கடமை 

பட்டுள்ளேன். 

                          அது            என்னவென்றால்

          நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும்

 அல்ல!!

          நடிகை பானுமதி அவர்களும் படிதாண்டா 

பத்தினியும் அல்ல!!


என்று சொன்னார்.என்னே ஒரு யதார்த்தமான 

சிந்தனை.தன்னை தாக்குகிற கருத்துக்கள் எதுவாக 

இருந்தாலும் அதை நேரடியாக மனதில் ஆத்திரம் 

என்பது கிஞ்சித்தும் கொள்ளாமல் அதை சந்தித்து 

வந்தார்.எல்லோரையும் சிந்திக்கவைத்தார். 

அவர்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


நமது போதாத நேரம். காலம் அன்னாரை நம்மிடம்

இருந்து பிரித்துவிட்டது,வாழ்க அவர்புகழ் 

என்றென்றும் வாழிய! வாழியவே!!

 நன்றி வணக்கம்