Tuesday, 30 April 2013

( 8 ) எட்டு எண் என்றால் அது அதிர்ஷ்டக் கட்டையா ? ( 9 ) எண் ஒன்பது என்றால் அது கேவலமா ??




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!

( தமிழர்களிடமாவது )


               

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் 


உரிய அகில உலகமெங்கும் வாழ்ந்து  


வருகின்ற எனது உயிரினும் மேலாக 


 நான்எப்பொழுதும் போற்றிவணங்கி                  


வரும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும் 


எனது மனம்கனிந்த இதயம் கவர்ந்த 


"உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்" 


பலபலவற்றைஉங்களது பொற்கமல 


பாதங்களுக்கு காணிக்கையாக்கி 


அனைவரையும் வணங்குகிறேன். 


என்னைப்பொறுத்தவரை உலகினில்  


உள்ளஎல்லோருமே தொழிலாளிகள்


 தான். நம்மை எல்லாம் படைத்தது  


இங்கே அனுப்பிவைத்து அனுபவி  


ராஜா அனுபவி  என்று சொன்னானே 


அந்த இறைவன்மட்டுமே முதலாளி 


அன்பர்களே. அந்த இறைவன் எந்த 


மதத்தின் பிரிவாக இருக்கட்டும். 


நான் அதைப்பற்றி இங்கே கட்டுரை 


எழுத வரவில்லை.  ஆனால் இங்கே 


 முதலாளி என்ற சொல்லுக்கு முழு 


சொந்தக்காரன் இறைவன் ஒருவன் 


மட்டுமே ! இந்தக் கருத்தை நீங்களும் 


ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான் 


கருதுகிறேன்.கவியரசுகண்ணதாசன்


புரட்சி நடிகர் மறைந்த M.G.R.நடித்த 


"தொழிலாளி" என்றபடத்திற்குஅவர்


 ஒரு பாடல் புனைந்து இருப்பார் அது 


என்ன பாடல் என்றால்:-  


                ஆண்டவன் உலகத்தின் முதலாளி!! அவனுக்கு நானொரு தொழிலாளி!! அன்னை உலகின் மடியின் மீதே  அனைவரும் எனது கூட்டாளி!!   இருப்பதைக்கொண்டு சிறப்புடன்  வாழும் இலக்கணம் படித்தவன்   தொழிலாளி !! உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்பவன்  தொழிலாளி !!                                             கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி !! கவனம் ஒருநாள் திரும்பும்!! அது நல்லவர் வாழும் இனிய சமுதாயம்!!நிச்சயம் ஒருநாள்  அரும்பும்!! வாழ்க்கை என்றொரு  பயணத்திலே பலர்வருவார் போவார்  பூமியிலே !! வானத்து நிலவு போல் சிலர் இருப்பார்!!.அந்த வரிசையில்  முதல்வன் தொழிலாளி !!      


எப்படி ஓர் கருத்து ஆழம் நிறைந்த 


பாடல் பார்த்தீர்களா அன்பர்களே!! 


இன்று உழைக்கும் வர்கத்தின் 


உரிமைகள் அவர்களுக்கு கிடைத்த 


நன்னாள். ஆகவே மேலேசொன்ன 


கவிஞர் கண்ணதாசனின் பாடலோடு 


நான் எனதுகட்டுரைதனை 


துவக்குகிறேன் அன்பர்களே !! 


இப்போது நான் மேலே குறிப்பிட்ட 


கட்டுரை தலைப்பிற்கு வருகிறேன் 


நண்பர்களே !! பொதுவாக 


நம்நாட்டினில் இதுவரை எத்தனை 


எத்தனையோ பகுத்தறிவுப் பகலவன் 


தோன்றினாலும்நம்நாட்டு மக்களின் 


மூட நம்பிக்கைகளை முற்றிலும் 


இதுவரை மாற்றவே முடியவில்லை


 அன்பர்களே அது மட்டுமே உண்மை. 


தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா, 


முத்தமிழ் அறிஞர்,நான் கண்ட நல்ல 


தொரு முதுபெரும் அரசியல்வாதி, 


அறிஞருள் அறிஞர் போற்றும் அறிவு 


உலகமேதைசீர்திருத்தசெம்மல்,தூய


 நல்சிந்தனைகளை வாரிவழங்கும் 


வள்ளல்,தமிழ் இனத்தின் இன்று 


உள்ள ஒரேஒரு பாதுகாவலர் அவரே 


நம்நாடுபோற்றும் தூய்மை நிறைந்த


 பகுத்தறிவுச் சந்திரன் கலைஞர் திரு. 


முத்துவேலர் கருணாநிதி அவர்கள் 


மற்றும் இதுபோலஎன்னும் எத்தனை


எத்தனையோ உதாரணங்களை


நாம் அடுக்கிக் கொண்டேநாம் 


போகலாம்அதற்குஒருஎல்லைஎங்கு


ம் இல்லை  என்றே சொல்லலாம். 


ஆக அப்படி அந்த முன்னாள்,இந்நாள் 


அறிஞர் 


கலைஞர்பலர்எத்தனைதான் புளி 


போட்டு விளக்கினாலும் இன்னும் 


நமது மக்கள் மனமதில் இந்த மூட 


அறிவு,பின்பற்றுதல் போன்ற கெட்ட 


குணங்கள் நம்மவர்களை விட்டு 


இன்னமும் முழுமையாக செல்ல 


மறுக்கிறது அன்பர்களே.  காரணம் 


1967 தொடங்கி இன்று 2௦13 வரை நம் 


நாட்டினை திராவிடக் கட்சிகள் 


மட்டுமே தனது கரத்திற்குள்ளாகவே 


வைத்து இருந்தாலும் கூட இடை 


இடையே " அந்த அவாளின் "ஆட்சி 


அப்போதைக்கு அப்போது நமது 


நாட்டினில் மாறி மாறி நடை பெற்ற 


அதனது விளைவோ எனக்கு 


தெரியவில்லை அன்பர்களே!!மேலே  


நான் குறிப்பிட்டபடி நம்நாட்டு தமிழ் 


இனத்தின்பிரதிநிதிகளை முற்றிலும் 


மாற்றிடஇயலவேஇல்லைஎன்பதே 


எனது தாழ்மையான கருத்து எனது 


அன்புமிகு தமிழ் நெஞ்சங்களே.சரி 


கட்டுரையும் அனுமார்வால் போல 


நீண்டுகொண்டே போகிறது எனது 


அன்பர்களே மன்னிக்க வேண்டுவது 


என்னையே.  ஆக 8 என்ற எண் சரி 


இல்லை அது கெட்ட அதிருஷ்டக் 


கட்டையானது என்றெல்லாம் கூவி 


வரும் பிரகஸ்பதிகளைப் பார்த்துக் 


கேட்கிறேன் அன்பர்களே! அப்படி 


என்றால் ௦ முதல் 9 வரை இங்கே 


உள்ள அனைத்து எங்களையும் ஒரு 


முறை நீங்களே உற்று நோக்குங்கள். 


இந்த 8 என்கின்ற எண்ணைத்தவிர 


வேறு எந்த எண்ணையாவது நீங்கள்


 நெட்டுவசமாமாகநடுவினில் 


வெட்டி பாருங்கள் ஏதாவது எண் 


வருகிறதா 


அதேபோலகுறுக்குவசமாகவெட்டிப்


பாருங்கள் ஏதாவது எண் வருகிறதா 


என்றால் வராது. அந்தப் பெருமை 


இந்த 8 என்கின்ற என்னுக்குமட்டுமே 


உண்டு அன்பர்களே. நீங்களே செய்து  


பாருங்கள். எட்டாம் எண்ணைநெட்டு 


வசம்நடுவினில்வெட்டிப்பார்த்தால் 


நமக்கு இரண்டு 3 என்கின்ற எண் 


நமக்கு கிடைத்திடும். அதே சமயம் 


குருக்குவசமாக வெட்டிப்பார்த்தால் 


நமக்கு இரண்டு ௦ என்கின்ற எண்கள் 


நமக்கு கிடைத்திடும் அன்பர்களே !


தவிரவும் பம்பாய் மில் வேட்டிகள் 


என்பதுஎட்டுமுழத்தில்தான் இன்றும் 


விற்பனை செய்யப்படுவது இந்த 8 


என்கின்ற எண்ணிற்கே உள்ள தனிச் 


சிறப்பு.  மேலும் தசாவதாரம் ஸ்ரீ 


பெருமாளின் எட்டாவது அவதாரம் 


தான் கிருஷ்ண பகவான் என்பது மிக 


குறிப்பிடற்குரியது. தவிரவும் இவை 


எல்லாவற்றுற்கும் மேலாக இந்த 


கட்டுரை ஆசிரியர் மதுரை T.R.பாலு 


அவர்வீட்டிற்குஎட்டாவது செல்லப்- 


--பிள்ளை என்பது மிகமிக முக்கியம் 


நிறைந்த ஒரு அம்சம் நேயர்களே.


அடுத்து எண் 9க்கு நாம் வருவோமா 


எனது அன்பு நேயர்களே!!(தொடரும்)


No comments:

Post a Comment