Sunday, 7 April 2013

ஏன் "அந்த "பெயர் வந்தது ? காரணம் தெரியுமா ?



தமிழனாக இரு !!தமிழர்களிடம்தமிழிலேயேபேசுக!!

              இது இப்போது மிகவும் அவசியம் !!



" அந்த " பெயர் வந்ததற்கு என்ன காரணம் !!



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது அன்புத்தமிழ் 

நெஞ்சங்களே !!


முதலில் உங்கள் அனைவர்க்கும் எனது பணிவான 

வணக்கங்கள் பல.


மீண்டும்உங்கள்அன்புச் சகோதரன் ஒருவித்தியாசம் 

நிறைந்த தலைப்பினில் உங்கள் அனைவரையும் 

சந்திக்கவந்துள்ளதில்மிகவும்மகிழ்ச்சி அடைகிறான்


பொதுவாக இந்த ஆண் மக்கள் இருக்கிறார்களே 

அவர்கள் மனிதகுலம் தோன்றிமறையும் நாள் வரை 

ஆண் அதிக்க உணர்வு பெற்றவர்களாக மட்டுமே 

வாழ்கிறார்கள் என்றால் அதுபெண்குலம் தலையில் 

எழுதிய எழுத்து என்று சொல்வதைத் தவிர எனக்கு 

வேறு கருத்து தெரியவில்லை.இதற்கு மூலமான 

காரணம் என்னவென்றால் அது அவரவர்களது 

இரத்தத்தின் ஜீன் என்று சொல்லப்படும் பாரம்பரியம்

சம்பந்தப் பட்ட ஒரு விஷயம் தவிர வேறு ஒன்றும் 

இல்லை.  அவர்களது பாட்டன், முப்பாட்டன் அதன் 

மூத்த தலைமுறையினர் எந்த எண்ணத்துடன் 

எந்த சிந்தனையுடன் வாழ்ந்திருந்தார்களோ அதே 

சிந்தனை,எண்ணம் இவர்களுக்கும் மாற்றப்பட்டு

உள்ளது அவ்வளவே.


சரி இப்போது நாம் தலைப்பு சம்பத்தப்பட்ட விஷயம் 

என்னவென்று பார்த்தால் இந்த ஆண் வர்கத்திற்கு 

திருமணம் ஆகிறது.  கண்ணுக்கும் கருத்துக்கும் 

இணையான அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த 

பெண் ஒருத்தி மனைவி எனும் திருநாமத்துடன் 

புருஷன் வீட்டுக்கு வந்து சேர்கிறாள். எல்லா ஆண் 

குலமும் திருமணம் ஆன புதிதில் மனைவியை 

எப்படி எப்படியெல்லாம் கொஞ்சி அழகு பார்க்கும் 

அதே ஆண் இனம் அவள் ஒன்று இரண்டு வாரிசுகள் 

பெற்று எடுத்தவுடன் என்ன இருந்தாலும் மணம் 

ஆன புதிதில் இருந்த மாதிரியா பெண் அவள் உடல் 

இருக்கும்.  இந்த இடத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு 

தமிழ் முதுசொல் ஒன்று எனது நினைவின்பால் 

வருகிறது நேயர்களே.  அது என்னவென்றால் :-


 கோடி வேட்டி ஒரு வெள்ளையோடு !!

குமரிப் பொண்ணு ஒரு பிள்ளையோடு !!


என்று ஒரு சொல்வழக்கு இன்றும்கூட நம்மிடையே 

உண்டு.  அதே நேரம் இன்னுமொரு பழமொழியும் 

கூட உண்டு.  

என்னதான் கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் 

குரங்கு மாதிரு ஒரு வைப்பாட்டி இருப்பாள்.


என்றும் ஒரு சொல் உண்டு.  ஆக இந்த ஆண்மகன் 

கெட்ட நேரம் வந்துவிட்டால் இன்னொரு பெண்

மகள் தொடர்பு இவனுக்கு ஏற்பட்டு விடுகிறது.  

நான் இங்கே எல்லா ஆண்மகன்களையும் பற்றிச் 

சொல்லவில்லை அன்பர்களே.  என்னைப்போல 

உங்களில்ஒருசிலரைப்போலகட்டைவேகும்வரை 

அடுத்த பெண்டிரைப் பார்ப்பதில்லை எனும் உத்தம 

புத்திரர்கள் இருப்பதனால் மட்டுமே இன்னும் 

ஓரளவாவது பூமியில் மழை பெய்து வருகிறது 

என்று நல்லவர்கள் கூறிடும் கருத்தினை என்னால் 

மறுக்க முடியவில்லை நேயர்களே.  ஆக  அந்த 

என்பது விழுக்காடு ஆண்மகன்கள் மனைவியை 

துறந்து அவர்கள் செய்திட்ட தியாகங்களைத்தான் 

மறந்து இன்னொருத்தியுடன் ஏற்படுத்திகொள்ளும் 

உறவினால் வருபவள் சமூகத்தில் எல்லோராலும் 

எவ்வாறு அழைக்கப்படுகிறாள் என்பதே இன்றைய 

கட்டுரையின் தலைப்பு.  

  " ஏன் ""அந்த"" பெயர் வந்தது ?  காரணம் தெரியுமா ?

அவளை அப்படிப்பட்ட பெண்ணை இந்த சமுதாயம் 

வைப்பாட்டி என்றுதான் அழைக்கிறது அன்பர்களே.

என்னடா இது முன்னுக்குப்பின் முரண்பாடாக 

உள்ளதே என்று மூளை குழம்பி விடாதீர்கள்  ஏன்

சின்னப் பெண் அவளுக்குப்போய் பாட்டி என்று பேர் 

வைத்துஉள்ளனர்என்றுநீங்கள்உங்கள்புருவங்களை 

உயர்த்துவது எனக்குப் புரியாமல் இல்லை. இங்கே 

தான் அன்பர்களே நமது மூதாதையர்களது 

நுண்ணறிவு திறம்பட வெளிப்படுகிறது. எவ்வாறு 

என்றால் நமது சமூக வீர்மகனது வேகம், வீராப்பு ,

கோபம் எல்லாம் முதன் முதலாக வாக்கப்பட்டு 

வருபவளிடம் மட்டுமே செல்லுபடியாகிறது 

இரண்டாவது வருபவளிடம் ஒன்றும் செல்லுபடி 

ஆவது கிடையாது. ஏன் என்றால் இவளது வேகம் 

அப்படி.  அவள்தான் அவள் மட்டுமே இந்த வீராப்பு 

இழந்த ஆண்மகனை தனது அழகினால் தனது 

இளமை உணர்வினால் ஆட்டி வைக்கிறாள்.

அதாவது அவள் இவனை எப்போதுமே ஆட்டி 

வைக்கிறாள். ஆட்டி வைப்பா. ஆட்டி வைப்பா.

இந்த வாசகத்தினையே திரும்ப திரும்ப சொல்லிப் 

பாருங்கள் அன்பர்களே. அப்போது உங்களுக்கு 

வருவது வைப் பாட்டி என்றதொரு சொல்மட்டுமே.

எனவேதான் அந்த பெண்ணிற்கு இரண்டாவதாக 

வரும் அவளுக்கு "" அந்த ""பெயர்வந்தது.  இப்போது 

உங்களுக்கு பெயர்காரணம் புரிந்ததா நேயர்களே.


மீண்டும் நாளை மற்றும் ஒரு புதிய தலைப்பினில் 

உங்கள் அனைவரையும்  சந்திக்கிறேன்.  அதுவரை 

அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் 

அன்பன் மதுரை T.R.பாலு










No comments:

Post a Comment