Saturday, 6 April 2013

பாலியல் வன்முறை தூண்டிடக் காரணம் ஆண்களா ?இல்லை பெண்கள் அணியும் ஆடைகளா ?

தமிழனாக இரு!!       தமிழர்களிடம் தமிழில் பேசுக !!

              இது இப்போது மிக அவசியம் !!


யார் உண்மைக் காரணம் ?


அன்புள்ள தமிழ் நெஞ்சங்களே !

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் ஒரு வித்தியாசமான சற்று விவகாரம் 

நிறைந்த தலைப்பில் உங்கள் அன்புச் சகோதரன் 

தன்னை பிணைத்துக் கொண்டு உள்ளேன்.

ஆண்டவன்தான் என்னை காப்பாற்ற வேண்டும்.

இந்த வழக்கு மன்றத்திற்கு நேயர்களாகிய நீங்களே 

நீதிபதிகள்.  


முதலில் வாதியாகிய நான் எனது வாதங்களை 

உங்கள் அனைவரின் முன்பாக சமர்ப்பிக்கிறேன்.


பாலியல் வன்முறை என்பது எப்போது நிகழ 

வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆராய்ந்து 

பார்த்தால் பெண் என்பவள் எப்போதும் இந்த 

சமுதாயத்தினால் ஒரு விலை மதிப்புமிக்க 

பொக்கிஷமாகவே கருதப்பட்டு வந்த காலம் 

என்று ஒன்று இருந்தது.  அப்போது எல்லாம் 

அவர்கள் தங்களது யவனம் மிக்க அங்க 

அவயவங்களை கணவர் ஒருவர் தவிர வேறு 

ஆடவர் எவரும் பார்க்கவோ அல்லது தன்னை 

பிற மனிதர்கள் இரசித்திடாமல் இருக்க வேண்டி 

அந்தக் கால பெண்டிர் தங்கள் உடலை நன்கு 

மறைத்து வைத்து  வாழ்ந்திருந்ததாகவே நமது 

வரலாற்று ஏடுகள் நமக்கு நன்கு புலப்படுத்துவதே 

உண்மையாகும்.  இதையே இஸ்லாமிய சமூகப் 

பெருமக்கள் சட்டதின் மூலமாக நிறைவேற்றி 

இருப்பது உலகம் அறிந்திட்ட உண்மை.  ஆம் 

மாண்பு மிகு நீதியரசர் அவர்களே. அவர்கள் 

வீட்டை விட்டு வெளியில் செல்வதென்றால் 

தனதுஉடல் முழுவதையும் மறைக்கும் ஆடையான

கருப்பு வண்ணத்திலான புருக்கா எனும் உடைதனை 

அணிந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக் 

கப்படுதல் இன்றும் உலகெங்கும் நாம் காணும் 

உண்மை நிகழ்வுகளே ஆகும்.  இதையே ஒரு 

இஸ்லாமிய பாடகர் என்ன கூறுகிறார் என்றால் 

கணவனின் கண்களிலே  நிறைந்து  வாழுவாள்.

பிறர் கண்களுக்கு என்றுமே மறைந்து வாழுவாள்.

என்று சொல்வதில் இருந்தே நாம் அறிய முடியும் 

பாலியல் வன்முறை தூண்டிடக் காரணம் என்பது 

பெண்கள் தங்களது உடல் வனப்பை வெளி உலகம் 

காண்பதுபோல உடை அணிந்திடல் மட்டுமே 

என்பது எனது முக்கிய வாதமே ஆகும்.  தவிரவும் 

இந்தக்காலபெண்டிர் எப்படி உடை உடுத்துகின்றனர் 

என்பதை உலகமே இன்று அறிந்து சிரிப்பாய் 

சிரிக்கின்றது நீதி அரசர் அவர்களே.  எப்படி 

வயதுக்கு வந்த பெண்கள் இன்று சேலை உடுத்து

வது என்பதே  அருகி விட்ட ஒன்று என்றாலும் கூட 

அணியும்நாட்களில் ஒழுங்காகவா அவர்கள் சேலை 

உடுத்துகின்றனர். தங்கள் வயிற்று பகுதி முழுவதும் 

வெளியே தெரியும்படி மிகமிக இறக்கி அணியும் 

போது பார்ப்போர் உள்ளம் பல உணர்சிகளை கிளப்பி 

விடுவதே உண்மை.  சரி சேலைதான் இப்படி எனில் 

மேல் சட்டை ஒழுங்காக அணிகிறார்களா என்றால் 

அதுவும் இல்லை.  முதுகுப் பகுதி முக்கால் பாகம் 

வேலையில் தெரியும்படித்தானே அணிகின்றனர்.

எதற்காக என்றால் அப்போதுதான் இவர்களது 

அழகினை பிற பெண்களும் பார்த்து பொறாமைப்பட 

வேண்டும் என.  ஆனால் பிற பெண்கள் மட்டுமா 

பார்கின்றனர். இல்லை நீதிபதி அவர்களே. எல்லா 

ஆண்களும் கூடவே பார்த்து இரசிப்பது பாவம் 

இவர்கள் அறிந்திலர் என்பதே உண்மை. இதன் 

விளைவு காத்திருக்கும் கயவர்கள் காலம் வரும் 

போது கச்சிதமாக கதைதனை முடித்து விட்டு 

பெண்களை கதையாக்கி விடுகின்றனர். இதுவே 

எனது வாதம் நீதி அரசர் அவர்களே.

நீதி அரசர் :-  இப்போது எதிர் தரப்பினர் தமது 

வாதங்களை கூறலாம்.

பிரதிவாதி :-  வாதி கூறிய அனைத்து விஷயங்கள்

மற்றும் குறிப்புகள் அனைத்தையும் நான் மறுத்து 

உரைக்கிறேன்.  ஆடை அணிவது என்பது பெண்டிர் 

சுய உரிமை.அதில் தலை இடுதல் பெண்கள் உரிமை 

தனை பறிப்பதற்கு சமமாகும்.ஆண்களை சட்டத்தின் 

மூலம்தடுத்தல்மற்றும்அவர்களுக்கு தண்டனை 

வழங்கிடும்போது மிகக் கடுமையானதாய் நீதிபதி 

அவர்களே வழங்கினால் இதுபோன்ற குற்றங்கள் 

முற்றிலும் மறையும் என்பதே எனது வாதம் நீதி 

அரசர் அவர்களே !

நீதியரசர்:-  இருதரப்பு வாதங்களையும் கேட்டு 

அறிந்தபின் நீதியுடனும் நேர்மையுடனும் நான் 

வழங்கிடும் தீர்ப்பு இதுதான்.

பாலியல் வன்முறை தூண்டிடக் காரணம் எது 

எனில் ஆண்களா அல்லது பெண்கள் அணியும் 

ஆடைகளா என்ற இருதரப்பு விஷயங்களில் 

மிகவும் அதிகமாக காரணம் கொண்டு உள்ளது 

பெண்கள் தங்களது உடல்வனப்பை வெளியில் 

தெரியும்படி ஆடை அணிந்து ஆண்களின் மனதை 

தூண்டுவது என்பதே உண்மை என்று இந்த 

நீதி மன்றம் தனது தீர்ப்பினை வழங்குகிறது.

எதையும் மூடிவைத்து மட்டுமே அந்தக் காலம் 

தொட்டு பெண்கள் வாழ்ந்து வந்ததால் எந்த 

பாலியல் வன்முறைகளும் அப்போது ஏற்பட 

வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. எப்போது 

உடல் வெளியில் தெரிய ஆடை அணிய துணிந்தன

ரோ பெண்கள், அப்போதே பாலியல் வன்முறைகள் 

உருவாக ஆரம்பித்துவிட்டது என்று இந்த 

நீதிமன்றம் முடிவெடுத்து அதனை தீர்ப்பாக இன்று 

அறிவிக்கப்படுகிறது. தெரிந்து தெளிவு பெருக.

நன்றி.வணக்கம்.











  
  

No comments:

Post a Comment