தமிழனாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
( தமிழர்களிடமாவது)
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது
உள்ளம் கவர்ந்த அன்புத் தமிழின் பால்
மாறாப்பற்றும் உண்மைக் காதலும்
கொண்டுள்ள எனது உயிரைவிட நான்
நேசித்து,பூசித்து,அந்த உணர்வுகளை
மட்டுமே சுவாசித்து வரும் தூய தமிழ்
உடன்பிறப்புகளே!!
முதலில்உங்கள்அனைவரையும்எனது
இதயம் என்னும் கோவிலில் வைத்துப்
பூஜித்து பின்வணங்கி,வாழ்த்திய பிறகு
மட்டுமே எனது "எண்ணச் சிறகுகள் "
வலைத்தளத்தில் கண்டு மானசீகமாக
உரையாடுவதில் நான் எதற்காக இந்த
பிறவி பெற்றேன் என்றதன் முழுப்
பலனையும்அடைகின்றேன் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இரண்டு தினங்களுக்கு முன்பாக நான்
உங்களுக்கு மேலே குறிப்பிட்ட அந்த
தலைப்பினில் உள்ள கட்டுரைதனில்
மூன்று கேள்விகளுக்கான பொருளை
உங்களது சிந்தனைக்கும் விழிகட்கும்
வைத்துக் காத்திருந்தேன்.உங்களது
பதில்தனை எனது மின்-அஞ்சல் மூலம்
நேற்றும் இன்றும் அந்த மின்முகவை
கடிதப் பகுதியில் சேர்ந்திருந்த சுமார்
53மெயில்களையும்நான் சரிபார்த்தேன்
3 தகவல் கடிதங்கள் மட்டுமே ஓரளவு
அதாவது ஒரேஒரு விடை மட்டுமே
சரியாக இருந்திருந்தது அன்பர்களே !!
ஆனால் எஞ்சிய அனைத்தும் தவறாக
பதில் இருந்தது அன்பர்களே.
சரி. இப்போதுவிடைபகுதிக்குநான்வரு
கிறேன்.முதலில்மூன்றுகேள்விகள்
அது என்னென்ன என்றால் :-
1) வடைகள் பல உண்டு. யாரும் இது-
வரை சாப்பிடாத வடை பெயர் என்ன?
2) எத்தனையோ பாட்டுக்கள் உண்டு.
இதுவரை யாரும் பாடாத பாட்டு எது?
3) சாப்பாட்டினில் எத்தனையோ ரசம்
உண்டு. சாப்பிடாத சாப்பிட முடியாத
ரசம் எது ?
மேலே சொன்ன அவைகள்தான் நமது
மூன்று கேள்விகள்.
அதற்கான பதில்கள் கீழே தரப்பட்டு
உள்ளது.
பதில் எண் 1):- நாம் வீட்டின் உள்ளே
இருக்கும் போது வெளியில் மிகவும்
அதிகமான ஓசை கேட்கும் போது நாம்
சொல்லுவோம்அல்லவாஅதுவேஇதன்
விடை. அதுதான்ஏம்மா!சரசுகொஞ்சம்
கத " வடை ".
பதில் எண் 2):- பாட்டு பற்றிய கேள்வி.
இதற்கான பதில் இதோ :-
கேட்கசகிக்காதபாட்டைஒருவர் பாடும்
போதுநாம்அவரைசொல்லுவதே
விடை:- கொஞ்சம் நிப் "பாட்டு"
பதில்எண் 3):ரசம்பற்றியகேள்விக்கான
விடை :- பாத "ரசம்".
எப்படி நேயர்களே ! உங்களில்
யாருக்காவது இது போல சிந்திக்க
முடிந்ததா? மதுரைக்காரன் என்றுமே
மதுரைக்காரன் தான். இது எப்படி
இருக்கு ?
நன்றி ! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment