Friday, 26 April 2013

எய்தவன் ஒருவன் !! பாய்வது வேறு ஒருவரிடமா ? என்ன நியாயம் ??



பொதுமக்களே எச்சரிக்கை தேவை 

இங்கே !!


அனைவருக்கும்  வணக்கம்.  நேற்று

காலை மணி 9.3௦ அளவில் கோவை 

புறவழிச்சாலைசந்திப்பினில்உள்ள 

மூன்று அடுக்கு மாடி வணிக வளாகம்

அதில் உள்ள இரண்டு தனியார் வங்கி 

கிளைகள்அதனில்பணிபுரியும்பெண் 

உதவியாளர்கள் மூவர் உட்படநால்வர்

திடீரென்றுஏற்பட்ட தீவிபத்தில் அங்கே 

கட்டிடத்தின் உள்ளே மாட்டிகொண்டு 

வெளிவரத் தெரியாது தீயினில் கருகி 

கரிக்கட்டையாக இறந்து போய் இருக்-

-கிறார்கள் அன்பர்களே. அவர்களது 

ஆன்மா சாந்தி அடைந்திட நாம் நமது 

முகப்புத்தகக்குழுவினர் அனைவரும்

இரண்டு நிமிட மௌன அஞ்சலிதனை 

செலுத்திடுவோம்.   சுவர்கத்தினில் 

அந்த நால்வரது ஆன்மாக்களும் 

சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவன் 

அருள் பரிபாலிப்பாராக!!


இன்றைய தினம் அந்த தீ விபத்து பற்றி

விசாரணைநடத்துகின்றகாவல்துறை

அலுவலர்கள் கட்டிடஉரிமையாளர்கள் 

மூவரில் இருவரைக் கைதுசெய்து 

அவர்கள் மேல்கொலைக்குற்ற வழக்கு

பதிவு செய்திருக்கிறார்களாம்.எதற்கு?.

அனுமதிக்கப்பட்ட ஒரேஒருமேல் தள

கட்டுமான உத்திரவை மீறி மேலும் 

இரண்டு தளங்கள் கட்டியதற்காக. இது  

எப்படி இருக்கு நியாயம் ? முழு பூசணி

-க்காயசோத்திலேமறைக்கும்வேலை 

என்பது இதுதானோ?  யாரிடம் கதை 

விடுகிறீர்கள். அங்கே கோவை மாநக-

ராட்சி கட்டிடக் கட்டுமானப் பிரிவு 

சோதனை அலுவலர்கள், அதற்கு மேல் 

ஆணை தரும் உயர் அலுவலர்கள், 

இவர்களில் யாருக்குமே  விழிப்

பார்வை என்பதே இல்லாத குருடர் 

இனத்தினைச் சேர்ந்தவர்களா?


என்னடா இது நாட்டிலே எங்கு பார்த்-

-தாலும் லஞ்சப்பேய்கள் தலைவிரித்து

ஆடிடும் உங்களது கொடுமைகளுக்கு 

பலி ஆவது சாதாரண பச்சிளம் 

பெண்கள்தானா? பதில் சொல்லுங்கள் 

அய்யா?பதவியில் உள்ளவர்களே.


எங்களுக்கு தெரியும் உங்களால் பதில்

சொல்லிட இயலாது என்று.கடவுள் 

என்று ஒருவர் இருக்கிறார். தகுந்த 

நேரம் வரும்.பதிலும் கிடைக்கும்.அது 

வரை:-

அந்தக் கால திரைப்பட பாடல் ஒன்று 

நமது காதுகளில் ஒலித்துக் கொண்டு

இருக்கட்டும்.

""இன்னும் எத்தனை காலம்தான் 

    ஏமாற்றுவார் இந்த நாட்டிலே--நம் 

    நாட்டிலே ""!

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே 

   நடிப்பார் !!சமயம் பார்த்து பலவகை-

   -யிலும் கொள்ளை அடிப்பார்.

   பக்தனைப் போலவே பகல்வேஷம்   

   கொண்டு பாமர மக்களை மாய 

வலைதனில் வீழ்த்தி அதுபோல் 

இன்னும் எத்தனைகாலம் தான் 

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!இந்த 

நாட்டிலே !நம் நாட்டிலே !!


முண்டாசுக்கவி பாரதியார் என் முன் 

வந்து நின்று பாடுகிறான் அய்யா :-


நெஞ்சு பொறுக்குது இல்லையே. இந்த 

நிலைகெட்ட மனிதனை நினைந்து 

விட்டால் ! நெஞ்சு பொறுக்குது 

இல்லையே !!அஞ்சிஅஞ்சிசாவார். 

இவர்அஞ்சாதபொருள்இல்லைஅவனி

யிலே!! வஞ்சனைப் பேய்கள் என்பார் 

இந்த மரத்திலேன்பார் ! அந்தக் குளத்-

-திலேன்பார்.துஞ்சி மடிகின்றாரே.


நன்றி.வணக்கம்.மதுரை T.R.பாலு.

    













No comments:

Post a Comment