தமிழர்களாக இருங்கள் !!
தமிழிலேயே பேசுங்கள் !!
(தமிழர்களிடமாவது)
உலகம்எங்கிலும்அன்புடனும்அறிவுடனும் வாழ்ந்து
வரும் எனது உயிரினும் மேலாக நான் போற்றி
வணங்கிவரும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த
வணக்கங்கள்!! இனிய தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்
நல்வாழ்த்துக்களையும் ஒரு சேரத் தெரிவித்துக்
கொள்வதில் மிகவும் மன மகிழ்ச்சி பெறுகிறேன் !!
இன்றைய தினம் நான் உங்களிடம் விரிவாகவும்
விளக்கமாகவும் விவரிக்க உள்ள கட்டுரையின்
தலைப்பு " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு
மட்டும்" /" STRICTLY FOR ADULTS ONLY. "
இதைப்பார்த்தவுடன் இன்று ஏதோ "அந்த மாதிரி "
விஷயம் வரப்போகுது என்று எண்ணி யாரும்
ஏமாற்றம் அடைந்திடவேண்டாம் என்று பணிவோடு
உங்கள் அனைவரையும் முதலிலேயே கேட்டுக்
கொள்கிறேன்.
ஏன் என்றால் என்னைப் பொறுத்தவரை நான் எனது
இந்த இணையதள பதிப்புகள் அனைத்தையும் இந்த
உலகில் அறிவுப்பசி உள்ளோருக்கு அவர்களது
சிந்தனைக்கு விருந்து தரும் நல்ல ஆரோக்கியமான
ஒரு சீர்திருத்த கருத்துக்களை வாரி வழங்கிடும்
"உணவகமாகவே" எண்ணி செயல் பட்டுக்கொண்டு
இருப்பதினால் என்னிடம் தயவு செய்து உங்களில்
யாரும் "அந்த மாதிரி" விஷயங்களைஎதிர்பார்த்திட
வேண்டாம்என்றுமீண்டும்மீண்டும்வேண்டிவிரும்பி
கேட்டுக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் அன்பர்களே
அப்படி என்றால் எதற்காக இப்படி ஓர் தலைப்பு
என்று நீங்கள் கேட்பதிலும் ஒரு பொருள் உள்ளது.
பொதுவாக உலகில் சில விஷயங்கள் உள்ளது.
அதை எங்கேயும் எப்படியும் சப்தம்போட்டு பேசிட
இயலும். ஆனால் சிலவிஷயங்களில்சப்தம்தனை
குறைத்து மட்டுமே பேசவேண்டி உள்ளது. அதில்
இன்றுநான் உங்கள் அனைவரிடமும் சொல்லஉள்ள
கருத்து இரண்டாவது இரகத்தைசேர்ந்தது அதனால்
தான் இந்த எனது கட்டுரைக்கு " கண்டிப்பாக வயது
வந்தவர்களுக்கு மட்டும்" என்று தலைப்பு தர முடிவு
செய்தேன். சரி நாம் இப்பொழுது தலைப்பினுள்
செல்வோமா நேயர்களே !!
பொதுவாக பருவ வயதினை அடைந்திட்ட எவரும்
அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக
இருந்தாலும் அவரவர்களுக்கு என்று காம உணர்வு
தானாகவந்துசேர்ந்திடும்.ஆங்கிலத்தினில்இதையே
SEXUAL FEELINGS என்று சொல்வார்கள். அந்த இன
உணர்வுகள் ஆண்களுக்கு எவ்வளவு இருக்கும் அது
போல பெண்களுக்கு எவ்வளவு இருக்கும் இதனைப்
புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய இளைய
தலைமுறையினர் கடமை என்றுகூட நான் சொல்ல
மாட்டேன் அன்பர்களே அது அவர்களது கடப்பாடு.
அப்படிஎன்றால்என்னஅர்த்தம்சொல்லிதொலையும்
என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குப் புரிகிறது.
கடப்பாடு என்பது கட்டாயம் என்பதன் தூய தமிழ்
சொல் அய்யா இளைய தலைமுறையே!!
ஆக வாழ்வினில் அவசியமான /முக்கியத்துவம்
நிறைந்த ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள
வேண்டும்என்று சொல்ல வந்த என்னைசொல்லித்
தொலையுங்கள்அப்படிஇப்படிஎன்கிறீர்கள்.
அதனால் பரவாயில்லை.சொல்வது யார் . எனது
அன்புத்தமிழ் நேயர்கள்தானே. சொல்லிவிட்டுப்
போங்கள். நான் அதற்காக கவலைப்படமாட்டேன்.
அதனால் என்னை கடலில் போட்டுவிடாதீர்கள். ஏன்
என்றால் எனக்கு கட்டு மரமாக மிதக்க தெரியாது.
அது மட்டுமல்ல எனக்கு நீச்சலே முதலில்
தெரியாதுங்க. சரி நாம இப்ப விஷயத்திற்கு
வருவோமா நேயர்களே !!
நான் ஏற்கனவே சொன்னபடி காம உணர்வுகள்
பெண்களுக்கு 4 பங்கும் ஆண்களுக்கு 2 பங்கும்
இயற்கையில்அமைந்துஉள்ளது என பண்டையகால
உடல்கூறுகள் பற்றிய ஆராய்ச்சிநூல்கள் குறித்து
உள்ளது என்று எனது ஆசான் நான் இருபது வயதில்
இருந்தபோது கூறிய கருத்துக்கள் இன்றும் எனது
நெஞ்சினில் பசுமரத்து ஆணி பதிந்ததுபோல
பதிந்து உள்ளது நேயர்களே. அப்போது நான் எனது
ஆசானிடம் ஒரு கேள்வி கேட்டேன். தங்கள் கூற்று
உண்மை என்றால் இரண்டு பங்கு பலம் உள்ள
ஆண்கள் எப்படி ஆசானே இந்த நான்கு பங்கு பலம்
உள்ள பெண்களை வாழ்க்கை என்னும் களத்தில்
நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றிட முடியும்
என கேட்டேன். புன்முறுவல் பூத்திட எனது ஆசான்
கூறியது இன்று நினைத்தாலும் நெஞ்சம் பூரிக்கிறது
எப்படி இந்த உலகில் தோன்றிய வியாதிகள்
அனைத்திற்கும் மருந்து தந்து உதவிய மகேசன்
இதற்கும் ஆண் இனத்திற்கு உதவி செய்துள்ளான்
சீடனே என்று சொன்னார். உடனே நான் ஆசானே
தங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றால்
அந்த மகேசன், ஆண் இனத்திற்கு செய்த அந்த
உதவி என்ன என்று நான் அறிந்துகொள்ளலாமா
என் கேட்டவுடன் மகிழ்வு பெற்ற அவர் பதில்
சொன்னார்.பெண்களின் நான்குபங்கு உணர்வுகளை
ஒரு பங்காக குறைத்திட்ட அந்த குமரனின் பெருமை
என்ன சொல்வேன் என்றார். ஆசானே தாங்கள் ஏன்
இன்னும் இந்த விஷயத்தில் பூடகம் பேசுகிறீர்கள்.
எனக்கு விரைவாக உண்மைதனை உரைப்பீர் என்று
நான்கேட்டவுடன் ஆசான் சொல்லத் தொடங்கினார்.
அன்புச் சீடனே எனது காலத்திற்குப்பிறகு எனது
இந்தஆசிரமத்தினையும்இந்தஆன்மீகப் பணியை
நீதானேகவனிக்கப்போகிறாய் என்று சொல்லியபின்
என்னை அருகில் அழைத்து என் காதினில் அந்த
இரகசியங்களை கூறியவுடன் அடுத்த சில மணித்
துளிகளில் அவர் இந்தப் பூவுலகில் இருந்து விடை
பெற்றுபுண்ணியலோகம் சென்று அடைந்து விட்டார்
ஆசான் கடைசியாக சொன்ன அந்த இரகசியம் வேறு
ஏதும் இல்லை.இவைகளே அவைகள் :-
1) பெண்கள் தங்க நகைகள் அணிவது கொள்வது
என்பது கட்டாயம்.ஆதலால் இந்த தங்க உலோகம்
அவர்களது மேனியை தொடும்போது ஒருபங்கு
உணர்வுகள் அவர்களைவிட்டு விடைபெறுகிறது.
அதனால் தான் இஸ்லாமிய பெருமக்கள் ஆண்கள்
தங்க நகைகள் அணிந்து கொள்வதை அனுமதிப்பது
கிடையாது. வெள்ளி உலோகத்தில் மட்டுமே பயன்
படுத்திட சொல்வது அதனால்தான்.
2) வாசனை மிகுந்த பூக்களை அவர்களது தலையில்
சூடிடும்போது இரண்டாவது பங்கு காம உணர்வுகள்
அவர்களை விட்டு விடை பெறுகிறது.
3) பட்டுச்சேலைதனைஅவர்கள்உடுத்துகின்ற போது
அந்த மூன்றாவது பங்கு காம உணர்வும் அவர்களை
விட்டு விடை பெறுகிறது.
ஆக நான்கு பஞ்சினில் மூன்று பங்கினை அவர்கள்
இழந்ததினால் தான் இரண்டு பங்கு காம உணர்வு
உள்ள ஆண்கள் அவர்களை அடக்கி ஆளமுடிகிறது
என்று எனது ஆசான் தனது வாழ்வின் இறுதி கருத்து
என்று கூறியதினை நேயர்களுக்கு தெரிவித்து இந்த
அளவினில் விடை பெறுகிறேன் அன்பர்களே !
மீண்டும்எனதுஅடுத்த"எண்ணச்சிறகுகள்"வலைதள
பதிவினில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்
அதுவரை உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
கூறி விடைபெறுகிறேன். நன்றி.
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment