Wednesday, 3 April 2013

நன்றிகள் நிறைந்த அன்புக் காணிக்கை !!

காத்திருந்த கண்களுக்கு நன்றி !!


உலகமெங்கும் வாழ்ந்து வரும் பாசமும் 

நேசமும் ஒருங்கே இணைந்துள்ள எனது அன்புத் 

தமிழ் நெஞ்சங்களே !!


முதலில் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் 

கனிந்த நன்றிகளை உங்கள் அனைவரின் 

பொற்கமல பாதங்களில் வைத்து பணிகின்றேன்.



கடந்த 28-03-2013 அன்று எனது மற்றுமொரு வலை 

தளமான "தினம் ஒரு குறள் " எனும் பக்கத்தில் நான் 

உங்களில் அனைவருக்கும் விடுத்த 

வேண்டுகோளின் பயனாக எனது இடது கண் 

அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலம் அடைந்து 

இன்றுமறுஆய்வும்முடித்து மருத்துவர்தம் மேலான 

ஆலோசனைப் படி இனிமுதற்கொண்டு நான் எனது 

மடிக் கணினி மூலமாக இணைய தளத்தினில் 

எழுத்துப் பணியினைத் தொடர்ந்திடலாம் என்ற 

செய்தியினைக் கேட்டவுடன் எனது உள்ளம் 

அடைந்த ஆனந்தமும் மகிழ்ச்சியும் அப்பப்பா !! 

என்னால் வார்த்தைகளுக்குள் அந்த உணர்வுகளை 

அடைத்திட இயலாது என் அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே !!


அப்போது நான் பெற்ற உணர்வு இருக்கிறதே அது 

நான் கீழே குறிப்பிடும் அனைத்துச் 

சம்பவங்களின்போதும் சம்பந்தப்பட்டவர்கள் பெற்ற 

மகிழ்ச்சியைவிட நான் பெற்ற ஆனந்தத்தின் அளவு 

மிக மிக அதிகமானது.


ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த குயில் 

அந்த கூண்டின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் எந்த 

அளவு மகிழ்வுடன் தனது இரு சிறகுகளையும் 

வேகமுற அசைத்திட்டு வெளிக் கிளம்பிடுமே 

அதனை விட 


சீறிப்பாய்ந்திடும் சிங்கம் அதன் கட்டுகளை 

அவிழ்த்துக்கொண்டுகூண்டினை விட்டு 

வெளிஏறும்போதுஎந்த அளவு மகிழ்வு நிறைந்த 

சீற்றத்துடனும்வேட்கையுடனும்புறப்படுமோ 

அதனைவிட 


பத்து தினங்களுக்கும் மேலாக பிரித்து 

வைக்கப்பட்டிருந்த பச்சிளம் கன்று தனது தாய்ப் 

பசுவினை தூரத்தே காணும்போது எப்படித் துள்ளிக் 

குதித்துப்பாசமுடன் தாவி ஓடிடுமோ அதனைவிட


பலநாட்கள் அன்ன ஆகாரம் ஏதுமின்றி பரிதவித்த 

யாசகர்/வழிப் போக்கர் ஒருவர் முன்பாக அறுசுவை 

உணவுநிறைந்த வாழைஇலை தனைக் கண்டால் 

அவர் நாவுஎப்படிமகிழ்ச்சிஅடையுமோ அதைவிட 



முப்பது நாட்களுக்கும் மேலாக குடும்பத் தலைவன் 

அலுவலக வேலையாக வட/ தென் இந்திய பயணம் 

முடித்து நள்ளிரவு குழந்தைகள் உறங்கிட வீடு 

திரும்பும்போது மணவாளர்தம் கைநிறை மணக்கும் 

மதுரை மல்லிகைப் பூவும் நெல்லை அல்வாவும் 

பனாரஸ் பட்டுச் சேலையும் ஒருசேரக் கண்ட 

மனைவி அவள் மனம் எந்த அளவு இன்பத்திலும் 

மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதித்திடுமோ அதைவிட 


எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! இன்று எனது 

உள்ளம் மேற்சொன்ன எல்லாவற்றிலும் விட ஒரு 

படி அதிகமாகவே ஆனந்தக் கூத்தாடுகிறது என்று 

சொன்னால் அது மிகை அல்ல.  ஏறத்தாழ ஏழு 

தினங்களுக்கும் மேலாக எனது உள்ளத்தில்,எனது 

சிந்தனையில் ஊற்றெடுத்து ததும்பி நிற்கும் தமிழ் 

அமுதக்கருத்துக்களை,கட்டுரைகளை,கவிதை 

அருவிகளை தினம் ஒரு திருக்குறள் விளக்கங்களை   

நான் உங்கள் அனைவருக்கும் நாளை முதல் நாள் 

தவறாமல் எந்த நாளும் வாரி வழங்கிடுவது ஒன்றே 

இனி எனது முழுமுதல்கடமையாக இருக்கும் என்று 

உறுதி கூறுகிறேன்.


மீண்டும் உங்கள் அனைவரிடமும் நன்றி பாராட்டி 

வணக்கம் கூறி விடைபெறுகிறேன். 


நாளை சந்திப்போம்,பிறகு சிந்திப்போம்  நேயர்களே!

இப்படிக்கு மதுரை T.R.பாலு.



No comments:

Post a Comment