Friday, 5 April 2013

மனிதனால் பதில் கூற முடியாதது எது ? எது ?

தமிழனாக இருங்கள் !!              தமிழர்களிடமாவது 

                                                      தமிழிலேயே பேசுங்கள் !!


                     இது இப்போது மிக அவசியம் !!



உலகமெங்கிலும் அன்புடனும் நல்ல பண்புடனும் 

வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் 

கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய வணக்கங்கள்.


இன்றைய தினம் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள 

இருப்பது மனிதனால் பதில் கூற இயலாத பல்வேறு 

விஷயங்களை பற்றிய ஒரு சிறு கருத்து ஆய்வுடன் 

கூடிய ஒரு சிந்தனைப் பெட்டகம் என்றும் கூடச் 

சொல்லலாம். 


இந்த விஷயங்களுள் பெரும்பாலானவை அறிவு 

பூர்வமாக நம்மை சிந்திக்க வைப்பவைகளாக 

இருக்கலாம்.  


சில வேடிக்கை கலந்த நகைச்சுவையின்

வெளிப்பாடாகவும் இருக்கலாம். அவைகளில் உள்ள   

முக்கியகருத்துகளைமட்டும்நேயர்கள் எடுத்துக் 

கொள்ள வேண்டும்.  


குற்றங்களை மன்னித்து குணங்களை மட்டும் 

கொள்ளும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.


1)   மனிதனின் கண் இமைகள் ஒரு நாள் முழுவதும் 

எத்தனைமுறை சிமிட்டப் படுகிறது ?

2)  மனிதன் தூங்கும்போது எப்படி துவக்குகிறானோ 

அந்த வடிவம் மாறிடாமல் (Position of Bedding )தூங்க 

முடியுமா ? 

3)  கண்ணாடியின்உதவியிலாமல்அவனது முதுகை  

பின்புறப் பகுதிகளை பார்த்திட முடியுமா ?

4)  மனித உடலில் உள்ள மொத்த நரம்புகளின் 

நீளத்தினை அளந்திட முடியுமா?

5)  மனிதன் தனது கண்களை திறந்து கொண்டே 

உறங்கிட முடியுமா ?

6)  மனிதன் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை 

தனது நாசிகள் வழியாக மூச்சினை உள்வாங்கி 

வெளியிடுகிறான் என்று எண்ணிச் சொல்ல 

முடியுமா ?

7)  மனிதனின் சிரசில் (தலையில்) உள்ள மொத்த 

முடிகளின் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லிட 

முடியுமா ?

8)  மனிதனின் தாத்தாவோட தாத்தாவின் பெயரை 

நினைவில் வைத்து கேட்கும் போது பதில் சொல்ல 

முடியுமா ?

9)  மனிதன் தினமும் காலையில் உண்ணும் 

சிற்றுண்டிப்பொருட்களானஇட்லி,தோசை,வடை,

சட்னி,சாம்பார்,பொங்கல்,இது போன்ற இத்யாதி 

இத்யாதி உணவுப் பொருட்களை கண்டு பிடித்தவர் 

பெயர்களை வரிசையாக கூற முடியுமா ?

முடியாது.முடியாது,முடியவே முடியாது.


ஆளை விடுறா சாமிகளா அப்படின்னு 

சொல்றீங்களா !  


சரி. இன்னைக்கு உங்களை இதுக்கு மேல பிளேடு 

போட முடியலை. 


எனக்கும் தலைக்கு மேல வேலை கிடக்கு.

அதை வேற நான்தான் செஞ்சு முடிக்கணும்.


அதனால போயிட்டு நாளைக்கு வேற புது 

பிளேடோட உங்கள் அனைவரையும் நான் 

சந்திக்கிறேன்.


அதுவரை உங்கள் அனைவருக்கும் அன்பு 

வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் 

அன்பு மதுரை TR.பாலு.  வணக்கம் நேயர்களே!!

No comments:

Post a Comment