Saturday, 20 April 2013

பதில் சொல்லுங்கள் பாப்போம் !!




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தமிழில் மட்டுமே பேசிடுங்கள் !!

(தமிழர்களிடமாவது )


அனைவருக்கும்இனியவணக்கங்கள்!!

இன்று மிகவும் சிறியதொரு கட்டுரை 

அதுவும் குட்டிக் கேள்விகள் நிறைந்த 

ஒரு விஷயம். எத்தனை அன்பர்கள் 

இதற்கு சரியான பதில் தருகிறார்கள் 

என்று பார்ப்போமா நேயர்களே :-


வடைகளில் பலஉண்டு. உளுந்தவடை,

ஆமை வடை,ரச வடை,தயிர் வடை,

சாம்பார் வடை,மெது வடை இதுபோல 

இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் நாம் சாப்பிட முடியாத வடை 

ஒன்று உண்டு அனைவரது வீட்டிலும்.

அது எந்த வடை ? ? ?


அதுபோலவே நாம் பிறந்தது முதல் 

போவதுவரை எத்தனை எத்தனையோ 

பாட்டு.


பிறந்தவுடன் தாய் பாடிய தாலாட்டு !!

பள்ளிப் பருவத்தில் பசங்களுடன் பாடி

நாம் களித்த இசப்பாட்டு.


பருவ வயதினில் பாவையுடன் பாடிய   

காதல் ரசமுள்ள  பூங்காக்காதல்பாட்டு.


திருமணமானவுடன் அவளோடு நாம் 

முதலிரவில் கூடிக்களித்திருந்த போது

காதல்இதயங்கள்பாடிய கனவுப்பாட்டு.


குடும்பத்தலைவன் ஆனவுடன் வரவு 

அதற்குமேல்செலவுஅப்போதுநெஞ்சம் 

பாடிய புலம்பல் பாட்டு.


குழந்தைகள்திருமணத்தின்போது நாம்

நம்மைமனமதில்எண்ணிஅவர்களுக்கு

பாடிய வாழ்த்துப் பாட்டு.


நமதுகாலம் முடிந்ததும் உறவினர்கள் 

நமது உயிரில்லா உடலை சுற்றி கதறி 

அழும்போது பாடும் ஒப்பாரிப்பாட்டு.


இதுபோலகேட்கும்பாடல்கள் எத்தனை

எத்தனையோ இருந்தாலும் நம்மில் 

எவரும் கேளாத / கேட்டிட முடியாத 

பாட்டுஒன்று  உண்டு. அது எது ???


மதிய உணவின் போது முதலில் வரும்

சாதம்சாம்பார்சாதம்கடைசியில்வரும்  

சாதம் தயிர் சாதம். இந்த இரண்டுக்கும் 

இடையில் வரும் சாதம் ரசம் சாதம்.

இதில் மிளகு ரசம்,பூண்டு ரசம்,பருப்பு 

ரசம் இதுபோலஇன்னும் எத்தனையோ

ரசம்உண்டுஇங்கே.ஆனால்நாம்யாரும்   

சாப்பிடாத, சாப்பிட  முடியாத  ரசம்என 

ஒன்று உண்டு. அது எது ???


மேலேகேட்டமூன்று கேள்விகளுக்கும்

யாராலும் நிச்சயமாக பதில் சொல்லிட 

முடியாது என்று நான்அடித்து ஆணித்த 

-ரமாக கூறிடக் கடமைப் பட்டுள்ளேன்.

 பதில்யாருக்காவதுதெரிந்துஇருந்தால் 

கீழ்க்கண்டஎனதுமின்-அஞ்சல் முகவரி

மூலம் தெரிவியுங்கள்.  உண்மையில் 

எனதுவிடையும் உங்களதுபதிலும்ஒரு 

சேர ஒத்துப்போகுமே என்றால் நான் 

உங்களது அறிவுத் திறனை மெச்சி ஒரு 

பாராட்டுபத்திரம்ஒன்று நான் அனுப்பி 

வைப்பேன் அது உங்களைதேடி வரும்.


அது மட்டுமல்ல. எமக்கு நிகராக ஒரு 

அறிவுச்சுடர்மற்றொன்றுஇந்தபூமியில்

ஒளிர்விடத்துவங்குகிறதுஎன்பதையும் 

நான் அறிந்து கொள்வேன்.


உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்து 

நிற்கும் உங்கள் அன்பன் மதுரை T.R.

பாலு .  வணக்கம் நேயர்களே !!


எனது மின்-அஞ்சல் முகவரி :-


    trbalu1954@gmail.com



No comments:

Post a Comment