Friday, 19 April 2013

பணம் மட்டும்தானா வாழ்க்கை ?



 தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

(தமிழர்களிடமாவது )

தமிழிலேயே பேசுங்கள் !!


 அன்புள்ள உலகினில் வாழ்ந்து வரும் இனிமை,

புதுமை,நேர்மை,உண்மைஇதுபோன்ற எண்ணங்கள் 

மட்டுமேதங்களதுவாழ்வின்லட்சியங்கள்என்பதை  

நினைவினில்கொண்டுவலம்வரும் அன்னைத் 

தமிழின் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


முதலில் உங்கள் அனைவருக்கும் எனது 

நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை 

பணிவன்புடன் காணிக்கையாகச் செலுத்துகிறேன்.


இன்றைய தினம் எனது "எண்ணச் சிறகுகள்" வலை 

தளத்தினில் உங்கள் அனைவரையும்சந்தித்து பின் 

சிந்திக்கவைத்திடநான்தேர்ந்து எடுத்துள்ள தலைப்பு 


" பணம் மட்டும் தானா வாழ்க்கை ?"


ஆம்.நேயர்களே. யுகங்கள் மாறிடும்போது மனங்கள் 

மாறுகின்றன. மதங்கள் மாறிடும்போது குணங்கள் 

மாறுகின்றன. சிந்தனைகள் மாறிடும்போது கூடவே 

செயல்களும் மாறுகின்றன என்று எனது தந்தையார் 

கூறுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.


அந்தக் கருத்துக்களுக்கு ஏற்பவே இன்றைய தினம் 

நாட்டினில் நிகழ்ந்திடும் ஒவ்வொரு நிகழ்வுகளும் 

அமைந்து வருகிறது என்று சொன்னால்அது மிகைப்

படுத்தப்பட்ட சொல் அல்ல.


நான் ஏன் இந்தக் கருத்தினை இங்கே இவ்வளவு 

அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் 

வீட்டுக்கு வீடு இதே நடைமுறைதான் இதேசெயல்-

பாடுதான் பின்பற்றப் பட்டுவருகிறது அன்பர்களே !!


மாதம் முதல்தேதி கணவன் மாதம் முப்பதுநாளும் 

நாயாய் பேயாய் அலைந்து திரிந்து உழைத்து அந்த 

உழைப்பின்பயனாகசம்பளபணம்பெற்றுக்கொண்டு 

வீட்டினுள் நுழைந்திடும்போது நூற்றுக்கு எண்பது

விழுக்காடுகளுக்கு மேல் மனைவிமார்கள் அவர் 

கையில் அந்த பண உறை இருக்கிறதா அல்லது 

அவர் பையில் இருக்கிறதா என்று அலைபாயும் 

கண்களைத்தான் என்னால் காணமுடிகிறது.நான் 

யாரையும் குற்றம் சுமத்துவதாக யாரும் எண்ணிட

வேண்டாம்.  உலகின் நிலை பற்றி சொல்கிறேன்.

அவ்வளவே.  சரி மனைவி தான் இப்படி என்றால் 

பிள்ளைகள் எப்படி என்று பார்த்தால் அவர்கள் 

இதற்கு மேலாக ஒரு படி சென்று,மனைவியாவது 

மயக்குகின்ற அவளது கண்களில் கணவனை 

அளந்துபார்த்தாள். பிள்ளைகளோ அப்பா அப்பா 

என்ன வாங்கிகிட்டு வந்திருக்கிறீங்க என்று வாய் 

நிறைந்து கேட்கின்றன. அதில் தவறு இல்லை.

அவர்களுக்கு வாங்கிவர அப்பாவை விட்டால்வேறு 

யார் இருக்கிறார்கள்?  உற்றார்,உறவினர்,நண்பர்கள் 

என்று நம்மைச் சுற்றி உள்ள அனைத்து  சமூக 

உறவுகளும் நம்மை எந்தக் கண்ணோட்டதில்  உற்று 

நோக்குகிறார்கள் எனில் பையில் உள்ள பணத்தின் 

மதிப்பை வைத்துத்தான் அந்த பணத்தை மட்டுமே 

எடைபோட்டு பார்த்திடும் பாழாய்ப்போன சமூக 

வலையினில்தான்இன்றையதினம் நாம் ஒவ்வொரு

குடிமகனும் இங்கே வாழ்ந்துவரும் சூழ்நிலையை 

இந்த காகிதத் தாள் மட்டுமே நமக்கு தந்து  உள்ளது 

அன்பர்களே.

நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் பேசிடும் 

போது சொல்லுவேன்:-

     " இல்லானை இல்லாளும் வேண்டாள் "

        ஈன்றெடுத்த தாய் வேண்டாள் 

    "  செல்லாது அவன் வாய்ச்சொல் "

என்றமுதுமொழிக்குஏற்பவே உலகம் சுழன்று வந்து 

கொண்டு இருக்கிறது. சரி குடும்பத்தலைவர் அவர் 

பணியில் இருந்து வயது ஆனதின் காரணமாக 

ஓய்வு பெறும்போது பையன்களின் கைகளை எதிர் 

பார்த்து அவர் வாழ்ந்திடும் வாழ்க்கை இருக்கிறதே 

அப்பப்பா.  அந்த வேதனைகளை வார்த்தையில் 

வடித்திட இயலாது.


பொதுவாக இந்த உலகினில்மரங்கள் அனைத்திலும் 

வேறுஎதற்கும்இல்லாத சிறப்பு இந்த தென்னை மரம் 

ஒன்றிற்கு மட்டுமே உள்ளது. அது என்னவென்றால் 

இதைமட்டுமே நாம் " தென்னம்பிள்ளை " என்று 

அழைத்திடுவோம். ஏன் அப்படி இதற்கு மட்டும் இந்த 

தனி அடைமொழிஎன்றால், அரும்பாடுபட்டு மிகமிக 

கஷ்டப்பட்டு தினசரி அந்த மரத்தின் தேவையான 

தண்ணீர், மதாமாதம் உரம் வைத்து இரண்டு மாதம் 

ஒருமுறை மரத்தை சீர் செய்து பூச்சி தாக்குதல் 

வந்தால் அதற்குமருந்துதெளித்து இவ்வளவு சிரமப்

பட்டு வளர்த்துவிட்டால் போதுமானது.  வளர்த்த 

அந்த மனிதரை இந்த தென்னைமரம் என்றும் 

மறக்காமல் "அவருக்கு அவரது வாழ்நாள்" முழுவ-

தும் பட்ட நன்றிகடன் செலுத்தும் வண்ணம் 

விளைபொருட்கள் அனைத்தையும் வாரிவாரி 

வழங்கிடும்ஒரேமரமாகஇந்ததென்னை இருப்பதால் 

அதற்கு "பிள்ளை" என்ற சிறப்பு அடைமொழிதனை 

நமது முன்னோர்கள் வழங்கி இருக்கிறர்கள்.


கிட்டத்தட்ட இதே நடைமுறைதான் ஒவ்வொரு 

தகப்பன்மார்களுக்கும் தத்தமது பிள்ளைகளை 

வளர்திடும்போது,அவர்களது அன்றாடதேவைகளை 

கவனித்து வாங்கித்தந்து அவனது உடல்நிலையில் 

என்ன நோய் தாக்கம் இருந்தாலும் அப்பனாகப்பட்ட

அந்தப்பாவி மகனை மருத்துவர் வசம் கூட்டிச்

சென்று,மருந்து மாத்திரை வாங்கித்தந்து சீரும் 

சிறப்புமாக வளர்த்து அவன் சம்பாதிக்கும் தருணம்

வரும்வரை அவனை கண்ணின் இமைபோலகாத்து

வளர்த்த பின் இந்த அப்பன்காரன் அவனது இறுதிக் 

காலம்வரை இந்த பிள்ளை அவனது தகப்பனை 

கவனித்து வாழ வைத்திடல் ஒவ்வொரு மகனின் 

தலையாய் கடமை.  


ஆனால் இன்று நூறு மகன்களில் ஒரு ஐந்து 

அல்லது ஆறு நபர்கள் மட்டுமே தமது தாய்,தந்தை 

இவர்களது மனம்கோணாமல் மனைவியின் இரவு 

நச்சரிப்புகளையும் தாண்டி சேவைபுரியும் மனதோடு 

உள்ளவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் 

செய்கிறார்கள்.  நான் அவர்களைப் பற்றிச் சொல்ல 

வரவில்லை. அனால் எஞ்சிய தொனூற்று ஐந்து 

விழுக்காடுகளும் பொதுவாக என்ன நினைகிறார்கள் 

என்றால்:-

என்னடி. இந்தப் பெருசோட ஒரே பேஜாரா இருக்கு.

கிழம் சீக்கிரம் மண்டையைப்போட்டால் ஒரு 

மொட்டையைபோட்டுவிட்டு தலை முழுகலாம் 

என்றால் இன்னும் நேரம் வராம நம்ம உசிர இல்ல 

எடுத்துகிட்டுஇருக்கு என்று அவரவர்களது மனைவி

-மார்களிடம் புலம்பிடும் கணவர்களது 

உள்ளத்தேவைகள் அப்போது மட்டுமே இப்படிப் 

புலம்பிடும் புருஷர்களுக்கு மட்டுமே மனைவிகள்  

தீர்ப்பதாக  எனக்குவரும்தகவல்கள்அவ்வப்போது 

சொல்லிக்கொண்டுதான் உள்ளது அன்பர்களே. 


இதற்கு என்ன காரணம் எனில் மகனுக்கு திருமணம் 

செய்துவைக்கிறோம்.ஆனால்தென்னைமரத்திற்கு 

அதுபோல நாம் திருமணம் செய்து வைப்பதில்லை. 

ஒருவேளை அப்படி ஒரு நிகழ்வு நடைபெறும் 

என்றால் தென்னையும் இங்கே  அப்பன்மார்களைப்  

பார்த்துப்  போடா வெண்ணை  என்றுசொல்லிடுமோ 

என்னவோ நான் அறியேன் பராபரமே !!


நன்றி !வணக்கம் !!

அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment