Sunday, 28 April 2013

மைதா உணவு !! மைந்தா வேண்டாம் உனக்கு !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!

             (தமிழர்களிடமாவது)



உலகமெங்கும் உண்மை,வாய்மை,

பொறுமை,நேர்மை இந்த நான்கு வகை 

"மை" களுடன் நீவிர் அனைவரும் 

என்றாவது ஐந்தாவது "மை" யான 

கள்ளுண்ணா"மை"  குணம் கொண்டு 

எந்நாளும்வாழ்ந்திடவேண்டும் என்ற

இந்த "ஏழை மதுரைபாலுவின்"அன்பு 

வேண்டுகோளுக்கு நிச்சயம் ஓருநாள் 

அன்புத்தமிழர்களேநீங்கஅனைவரும்

செவிமடுப்பீர்கள்என்றுஎண்ணி இங்கே   

வள்ளுவன் வழிவந்து தமிழ்ப்பணி அது

தடைகள் ஏதுமின்றி தரணி எங்கும் 

முழங்கிக் கொண்டிருக்கிறேன் என்று 

சொன்னால் அதில் இருவேறு கருத்து-

-களுக்கு இடம் இல்லை அன்பர்களே !!


இன்றையதினம் உணவு சம்பந்தப்பட்ட

ஒரு விஷயத்தினை நான் கையில் 

எடுத்துக் கொண்டு அந்த " மைதா " 

என்ற மாவுவகை உணவு மானுடனு-

-க்கு நன்மை பயக்குமா இல்லை எனில் 

தீமை அளித்திடுமா? என்ற இரு வேறு 

வாதங்களை உங்கள் முன்பாக நான் 

வைத்து "உங்கள் உடல் நலத்திற்காக" 

இந்த கட்டுரை பார்த்து படித்த பின்பும் 

கூட மைதா மாவினால் தயார் செய்ய-

-ப்பட்ட உணவு வகைகளை  உண்ண-

வேண்டுமா இல்லை வேண்டாமா என 

முடிவுஎடுத்து செயல் படுத்தவேண்டிய 

கால கட்டத்திற்கு உங்களை வர வைப்-

-பது ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரை 

எழுத வேண்டியதன் நோக்கமும் நல்ல 

இலட்சியமும் கூட என் அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே !!


பொதுவாகநம்மில் அநேகர் இரவில்

சாப்பிடும் சிற்றுண்டி வகைகளில் மிக 

முக்கியமான இடத்தினை பிடித்துள்ள 

உணவு அதன் பெயர்தான் "புரோட்டா"

இந்த உணவு செய்திட மூலப் பொருள் 

"மைதா மாவு " தான். மூன்று முதல் 

நான்கு மணி நேரம் வரை ஊறவைக்க-

-ப்பட்டு பின் கண்ட கண்ட எண்ணை  

தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடி-

க்கப்பட்டு நன்கு வீசப்பட்டுபெரிய 

அளவில் தோசைபோலஅந்த மாவை 

பெரிதாக ஆக்கி பிறகு தட்டையாகத் 

தட்டி தோசைக்கல்லில் பொன் நிறமாக 

எண்ணை ஊற்றி பிரட்டிப் போட்டு சுடச்

சுட எடுக்கப்பட்டு குருமாவை ஊற்றி 

சாப்பிடும்போது இருக்கே சுவை!!

அப்பப்பா சொல்லிடும்போதே நாவில் 

உமிழ்நீர் ஊறி அதில் நாக்கு நீச்சல் 

அடிக்கின்றது அன்பர்களே.  


ஆனால் இந்த புரோட்டாவில்தான் 

எத்தனை உடல்நலத்திற்கு கேடு 

விளைவிக்கும் விஷயங்கள் புதைந்து 

கிடக்கின்றது என்பது உங்களில் யார் 

யாருக்கு தெரியும் ?


முதலில் இந்த மைதா மாவு எப்படி 

தயாரிக்கப் படுகிறது என்பதை நாம் 

பார்ப்போம். இந்த மைதா மாவின் தாய் 

என்பவள் யார் என்றால் அவள் வேறு 

யாரும் அல்ல அன்பர்களே. அவள்தான் 

கோதுமை மாவு.இதனுடன் இரசாயன

கலவையாகப் பயன் படுத்தப் படும் 

பொருளின் பெயர் தான் " பென்சாயில் 

பெராக்சைடு" மேலும் மற்றும் ஒரு 

இரசாயனப்பொருள் "அலோக்சான்ஸ்"

இந்த இரண்டு இரசாயப் பொருளும் 

நச்சு கலந்த சிறிதுசிறிதாககெடுக்க

வல்லது.இது பசியை உடனே அடக்கும் 

நமது இரைப்பை,பெருங்குடல் மற்றும் 

சிறுகுடல் ஆகியவைகளை மட்டும் 

பாதிப்பது இல்லை இத்தோடு உங்கள் 

செரிமானசக்தியைவெகுவாககுறைத்

து அதனால் பெப்டிக் அல்சர் போன்ற 

குடல்,இரைப்பை பகுதிகளில் ஆறாத 

புண்களை உண்டாக்குவதால் தீராத 

வயிற்று வலியுடன் நீங்கள் சுகமாக 

நாட்டினில் வாழலாம் அன்பர்களே !!

வேறு எந்தக் கெடுதலும் இந்த மைதா 

மாவு புரோட்டா மற்றும் பூரி ஆகியன,

செய்வது கிடையாது அன்பர்களே 

இவைகளுடன் சேர்த்து இப்போது 

நவீன உலக உணவு " பிட்சா" இதுவும் 

புரோட்டாவின் அன்புத் தம்பி தான்.

சரி! என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

இப்போது நாம் கட்டுரையின் இறுதிப் 

பக்கம் வந்து விட்டோம். இந்த வார 

ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த தகவல் 

படி இப்போது இந்த "மைதா" விஷயம் 

நீதி மன்றம் வரை சென்று விட்டது.

மதுரை உயர்நீதின் மன்ற கிளைதனில் 

வழக்கறிஞர் திரு மது என்பவர் 

தாக்கல்செய்துள்ளபொதுநல 

மனுவில்கோதுமையில் இருந்து 

மைதா மாவு தயாரிக்கஇரண்டுரசாயன 

பொருட்கள்"பென்சாயில்பெராக்சைடு" 

மற்றும் "ஆலோக்சான்ஸ் "ஆகிய இந்த 

இரண்டு ரசாயப் பொருட்களால் இங்கு 

மனித உடலில்தாக்குப்பிடிக்கமுடியா-

-த அளவு வயிற்றின் பக்கம் பல்வேறு 

வியாதி,குடல் புண்,இரைப்பை நோய் 

போன்றவற்றால் பாதிப்பு உண்டு என்று 

அறிந்திருந்தும்மத்திய மாநில அரசுகள் 

எந்த விதமான நடவடிக்கையும் 

எடுத்திடாமல்,வேடிக்கைகளும் 

எவ்வித தடுப்பு ஏற்பாடுகளும் 

எடுத்திடாத மாநில அரசினை கண்

காணித்து மக்கள் நலம் பேண உத்திரவு 

இட வேண்டுமாய் கேட்டுகொண்டது

விசாரணைக்கு இந்த மனுவினை 

ஏற்றுகொண்ட மதுரை உயர்நீதி மன்ற 

கிளை அடுத்த விசாரணையை   ஜூன் 

மாதம் 6ம் தேதிஒத்தி வைத்து 

உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்குள் 

பதில் மனுவை தாக்கல் செய்திட 

மத்திய மாநில அரசுகளுக்கு 

உத்திரவிட்டதுடன்,மைதா மாவு 

விற்பனைக்கு ஏன் தடை செய்ய 

கூடாது என்பதற்கும் விளக்கம் தர 

வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது 

மதுரை உயர்நீதிமன்றக் கிளை மத்திய 

மாநில அரசுகளிடம் !!


சரி அன்பு நேயர்களே !! மீண்டும் எனது 

"எண்ணசிறகுகள் "வலைதளத்தின்வழி 

உங்கள் அனைவரையும் வேண்டி 

விரும்பி கேட்டுகொள்வதெல்லாம் 

தயவுசெய்து உங்களது உடல்நலம் 

கருதி இன்றுமுதல் எந்த சூழலிலும் 

"புரோட்டா" மற்றும் "பிட்சா" போன்ற 

மைதா மாவினில் தயாரிக்கும் இது 

போன்ற  உணவுப்  பொருட்களை  நாம்

உண்ண மறுப்போம் என்ற உறுதிப்பாடு 

நிறைந்த கொள்கை  முடிவுதனை மேற்

கொள்வோம் என்று தீர்மானித்து அதன் 

படியே வாழ்ந்து நமது உடலைப் பாது-

-காப்போம்.


       "  சுவரை வைத்துத்தான் நாம் 

          சித்திரம் வரைய முடியும் " !!


மிக்க நன்றி.வணக்கம்.

அன்புடன் மதுரை TR.பாலு.





                                                                       












No comments:

Post a Comment