தமிழர்களாக இருங்கள் !!
தமிழிலேயே பேசுங்கள் !!
அன்பு மிகுந்த உலகுவாழ் தமிழ் இனத்தின் பெருமை
வாய்ந்த என் இதயம்கனிந்த தமிழ்ப் பெரியோர்களே!
முதலில் உங்கள் அனைவருக்கும் எனது தலை
தாழ்ந்த வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன்.
இன்றையதினம்சற்று மாறுபட்ட ஒரு தலைப்பினில்
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக மிக மன
மகிழ்ச்சி அடைகிறேன்.
அது ஒரு மிகவும் பிரசித்திபெற்ற மாநிலம் ஆகும்.
என்தந்தையார்அடிக்கடிஒருசொற்பதம் ஒன்றினைச்
சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அழ அழச்
சொல்வார் நம்மவர். சிரிக்க சிரிக்கப் பேசுவோர்
பிறர் என்று. அந்த சொல்லுக்கேற்று அந்த மாநில
மக்களும் கடந்த நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கும்
மேலாக அந்த மொத்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்
தந்த தேசிய கட்சிதனை புறந்தள்ளி அந்த மதிப்புமிகு
சுதந்திரம் தர மறுத்த ஆங்கிலேய அரசாங்கத்திற்கு
குடைபிடித்த அவர்களை அந்த ஆங்கிலேயர்களுக்கு
அவர்கள் " தேவைகளை " முற்றிலும் பூர்த்தி செய்து
அதன் பயனாக தங்கள் சொந்தசொத்துகளை அதிகம்
சேர்த்துகொண்ட அநீதியையே கட்சியின் பெயராகக்
கொண்டவர்களின்வழித்தோன்றல்களையே தங்கள்
மாநிலத்தின்ஆளும்கட்சியாகவைத்துஅழகு பார்த்து
இரசித்த மகா புத்திசாலிகள் வாழ்ந்திட்ட நாடு.
நாட்டுக்கு நல்லது செய்திடும் உண்மையானவர்கள்
யார்? ஆட்சிக்கு வந்ததன் பயனாக தங்கள் சொந்தக்
குடும்பத்திற்கு மட்டுமே நல்லது செய்திடும் உத்தம
குணம்கொண்டவர்கள்யார்என்பதனை அருமையாக
தெரிந்து அவர்களுக்கே ஆட்சி செய்திடும் வாய்ப்பு
தந்து அழகு பார்ப்பவர்கள். சரி இப்போது தலைப்பு
சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வருவோம்.
அப்படிப்பட்ட உத்தம இன ஆட்சியில் இடம் பெற்ற
அமைச்சர் ஒருவர் அவர் இல்லாளை இழந்தவர்.
அதனாலேயே தனது உணவுத் தேவைகளை
கவனித்துக்கொள்ள நன்கு நளபாகம் சமைத்திடத்
தெரிந்த ஒரு (மடையரை)சமையல்காரரை தென்
மாவட்டத்தில் இருந்து தலைநகர் அழைத்துவந்து
பணியமர்த்தி நன்கு உணவு சாப்பிட்டுக்கொண்டு
இருந்தார். தினமும் ஒருவகை சாப்பாடு. அப்படி
என்றால் ஒரு துவரம்,ஒரு அவியல்,ஒரு கூட்டு,
ஒரு பச்சடி,சாம்பார்,இரசம்,வத்தக்குழம்பு,பின்
பாயாசம்,வடை, தயிர்,வாழைப்பழம்.இதன் பெயரே
ஒரு வகை என்பது அன்பர்களே. அப்படி இருக்கும்
போது திடீரென்று இரவோடு இரவாக அவரது
மந்திரி பதவி பறிக்கப்பட்டவுடன் மிகவும் மனம்
நொந்துபோன அவர் போட்டுக் கொடுப்பவர்களைத்
தானே கட்சியின் தலைமை நம்புகிறார்கள் என்ற
மனவேதனையோடு சமையல்காரன் சங்கரனை
அழைத்தார்.
அப்பா சங்கரா !! எனது பதவியைப் பாவிகள் பறித்து
விட்டனர். எனவே இனிமேல் எனக்குவரும்படி மிகக்
குறைந்துவிடும்.அதனால்நீஇன்றுமுதல் ஒருவகை
சமையல்நிறுத்திவிடு.எனக்குப்பதவி போனதாலே.
இன்று முதல் ரசம்,ஒரு துவரம் இது போன்ற
குறைந்தசெலவுபிடிக்கும்சமையல் செய்தாலே அது
எனக்குப் போதுமானது என்று சொல்ல சமையல்
சங்கரனும் சரிங்க எஜமான்.நீங்க என்ன சொல்லு
தீகளோ அதனை மட்டுமே நான் உங்களுக்கு
சமைத்து போடுகிறேன் என்று சொல்லி அதுபோல
மிகவும் சிக்கன சமையல் செய்து தந்தான். ஒரு
மாதம் கழிந்தது.ஒருநாள் டேய்!சங்கரா !! அடபோடா
செவிட்டுப்பயலே!நான்வெளியேபோயிட்டு வாரேன்
நீவீட்டுக்கதவை தாளிட்டுக்கொள் என்று கூறிவிட்டு
முன்னாள் மந்திரி வெளியில் செல்ல சரிங்க என்று
சொன்ன சங்கரன் அதனை மறந்தான். தாழ்ப்பாள்
போடாமல் கதவு இருந்தது.
வெளியில் போயிட்டு வீடு திரும்பிய முன்னாள்
மந்திரி என்னடா இது கதவைத் தாள் போடாமல்
இப்படி பொறுப்பு இல்லாமல் சமையல் சங்கரன்
இருக்கிறானே என்று மனதுக்குள் வெம்பிகொண்டு
வீட்டினுள் நுழைந்து சமையல் அறைதனை எட்டிப்
பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரது
உதிரத்தை உறையவைத்தது. அப்படி என்னதான்
முன்னாள் மந்திரி கண்டார் ?
சமையல்கார சங்கரன் தலைவாழை இலைபோட்டு
ஒருவகை கரி சமைத்து அப்பளத்தில் துவங்கி
துவரம்,கூட்டு,அவியல்,பச்சடி,சாம்பார்,இரசம்,
வத்தக்குழம்பு,பாயாசம்,வடை,இத்யாதி இத்யாதி
என வெளுத்து வாங்கிகொண்டு திருப்தியாக
உணவு உண்டுகொண்டு இருந்தான் சங்கரன்.
அட பாவி ! என்னடா ! இப்படி துரோகம் செய்து
விட்டாயே என்று கேட்டதற்கு சமையல் சங்கரன்
சொன்ன பதில் அப்படியே முன்னாள் மந்திரியை
வாய் அடைத்துவிட்டது அன்பர்களே ! அப்படி அவன்
என்னாதான் சொன்னான். அறிய ஆவல் அதிகம்
உள்ளதா? அவன் கேட்டான் மந்திரியை பார்த்து:-
என்னாங்க முதலாளி சாப்பாடு சாப்பிடுவது ஒரு
துரோகமா சொல்லுங்க முதலாளி என்றான்.
அதற்கு மந்திரி எலேய் அது துரோகம் இல்லைடா
ஆனால் பதவி போச்சு வெறும் ரசம் துவையல்
போதுன்னு சொன்னேனேடா என்னடா இப்படி
வச்சு வாயிலே திணிச்சுக்கிட்டு இருக்கே.
அதற்கு சங்கரன் நிதானமாக பதில் சொன்னான்.
முதலாளி உங்களுக்கு வேணும்னா மந்திரி பதவி
போய் இருக்கலாம். அதனாலே நீங்க பத்திய
சாப்பாடு சாப்பிடலாம். எனக்கு எங்கே முதலாளி
பதவி போச்சு ? என்னோட சமையல்காரன் என்னும்
பதவி இன்னும் எனக்கு நீடிச்சுக்கிட்டு தானே அய்யா
இருக்கு என்றானே பார்க்கலாம். நமது முன்னாள்
மந்திரியால் ஒன்றும்பேசமுடியவில்லை.எழுந்து
போய்விட்டார்.
இதுதாங்க உலகம். இது எப்படி இருக்கு ?
மீண்டும் அடுத்த எண்ணச் சிறகுகள் பதிவினில்
சந்திப்போம்.அதுவரை நன்றி.வணக்கம்.
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment