தமிழர்களாக இருங்கள் !!
தமிழர்களிடமாவது தமிழிலேயே
பேசுங்கள் !!
இது இன்று மிகவும் அவசியம் !!
நிரந்தரம் ஏதும் இல்லை உலகினிலே !!
உலகெங்கிலும் அன்புடனும் அமைதியுடனும்
வாழ்ந்து வரும் தமிழ்ப் பெருமக்களே. உங்கள்
அனைவரையும் வணங்கி மகிழ்ந்து நான் எனது
எழுத்துப் பணிதனை துவக்குகிறேன்.
அந்தக் காலத் திரைப்படமான மனோகராவில்
கலைஞர் அவர்களது வசனத்தில் ஒரு காட்சி !
சிவாஜியின் தாய் கண்ணாம்பாளிடம், படத்தின்
வில்லி TR.ராஜ குமாரி (வசந்த சேனை) தனது
நயவஞ்சகத்தின் மூலமாக மனோகரன் இறந்து
விட்டதாக பொய் உரைத்துவர போலிச் சாமியார்
ஒருவரை ஏற்பாடு செய்வார். அவர் கூறுவார்:-
தாயே !!உம்!! போய் விட்டான் உன் புதல்வன்
புண்ணிய லோகத்திற்கு,
கடல் இடை துரும்பம்மா மனித வாழ்வு. என்று
சொல்லிகொண்டு இருக்கும்போது மனோகரன்
உள்ளே வர ,யாரடா துரோகி இதற்கு காரணம் என
கேட்பார் சிவாஜி .
அதற்கு அந்தபோலிச்சாமியார் எல்லா
நிகழ்வுகளுக்கும்காரணம்வசந்தசேனைஎன்றுகூற,
வசந்த் சேனை. நம்மைச்சுற்றி வளைத்துவிட்ட
மலைப் பாம்பு.வாய் பிளந்து நிற்கும் ஓணான்.வட்ட
மிடும் கழுகு என்று அந்த வில்லியை அவளது
குணத்தினை திறம்பட விளக்கும் விதமாக வசனம்
எழுதி எங்களைப் போன்றவர்களை அசரவைத்த
பெருமை கலைஞர் ஒருவரையே சாரும். ஆனால்
அவரது தொலைநோக்குப் பார்வை, பின்னொரு
காலத்தில் அவர் இது போன்ற ஒரு வசந்த
சேனையை தனது வாழ்நாளில் சந்திக்கப் போவதை
அன்றேநினைவுபடுத்திஎழுதியவசனம்நினைத்தால்
நெஞ்சமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்து
கிறது. நான்அதைப்பற்றிஇப்போதுவிரிவாகசொல்ல
வரவில்லை.
சரி இப்போது தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயம்
வருவோமா.
இந்த ஆழி சூழ் உலகிலே நான் எனது இத்தனை
வயது வாழ்க்கையினில் எத்தனையோபேர்களை
சந்தித்ததன் வாயிலாக பெற்ற அனுபவங்களின்
அடிப்படையில் சொல்கிறேன்.
மிகப் பெரும் செல்வந்தர்கள்,ஆளுகை திறம்
பெற்றவர்கள்,ஆட்சிக்கட்டிலில்அமர்ந்துள்ளோர்கள்
ஏற்கனவே அமர்ந்து இருந்தவர்கள் என்று அனைத்து
விதமான மனிதர்களையும் பார்த்தவன். அந்த அடிப்-
படியில் சொல்கிறேன் அன்பர்களே !
மேலே குறிப்பிட்ட எல்லோரிடமும் ஒரு தான்
என்னும் திமிர் பிடித்த குணம் இருந்து அதன்
தாக்கத்தினால் அவர்கள் தற்போது வாழ்ந்துவரும்
இந்த வாழ்க்கை ஏதோ நிரந்தரம் போலவும் கல்ப
கோடிகாலங்கள் தாங்கள் நிரந்தரமாக இருக்கப்
போவது போல எண்ணிக் காரியம் செய்தவர்கள்
பலர் காணாமலே போய் விட்டார்கள் என்பதுதான்
உண்மை நேயர்களே. அவர்கள் இருந்த இடம் புல்
முளைத்துப் போய்விட்டது.
தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது துளி
மாறிப் போனாலும் போச்சு ..இதுதான் இங்கே
நிரந்தரம். என் தந்தை அடிக்கடி ஒரு கருத்து
சொல்லிக் கொண்டே இருப்பார். அதுதான்
மனிதன் இருப்பது பொய் !! இறப்பது மெய் !!
ஆம் நேயர்களே இந்த உண்மை தெரிந்துவிட்டால்
போதும் யாராக இருந்தாலும் அடங்கி விடுவார்கள்.
மரணம் ஒன்று மட்டுமே மனித இனத்தின் திமிரை
அடக்கவல்ல ஒரு ஆயுதம். அந்த இறப்பை
அவர்கள் மறப்பதால்தான் நிரந்தரம் என்று தங்கள்
வாழ்வினை கருதுகிறார்கள்.
எனவே நான் உங்களில் அனைவரையும் வேண்டி
விரும்பி கேட்பதெல்லாம் வாழ்வில் பொறுமை
தேவை. பொறுமை தேவை. வாழ்வில் உயரும்
வரை பொறுமை தேவை. உயர்ந்த பின்பு பணிவு
தேவை. எல்லோரையும் மதிக்கும் பண்பு தேவை.
இவைகளுடன் நீங்கள் வாழ்ந்திட வாழ்த்து கூறி
விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment