வாழ்ந்திடுக தமிழர்களாக !!
பேசிடுக தமிழில் மட்டும் !!
(தமிழர்களிடமாவது)
உலகில் உள்ள எல்லா தமிழர்களும்
ஒன்றுசேர்ந்துஒற்றுமையுடன்நாடும்
வீடும் நலம் பெற ,வளம்பெற, நாம்
அனைவரும்ஒன்றுசேர்ந்துஒருமித்த
குரலில் முழங்கிடுவோம்!!
இன்றைய தினம் மேலும் சற்று வித்-
-தியாசம் நிறைந்திட்ட நல்ல தொரு
தலைப்பினில் உங்கள் அனைவரை-
யும் சந்திப்பதில் மட்டட்ற மகிழ்ச்சி
பெறுகிறேன் அன்பர்களே !!
இங்கே நமது தாயகமாம்
தமிழகத்தில் நான் இதுவரை
வாழ்ந்து,வளர்ந்து, மகிழ்ந்து, இருந்த
நான்மாடக் கூடல் நகராம் தேமதுரத்
தமிழோசை தானதெங்கும் முழங்கி
வரும் மாமதுரை நகர்தனில்
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர்
திருநாள் அன்று மதுரை மீனாக்ஷி
அம்மன் கோவிலில் வடக்கு ஆடி
வீதி, அங்கே உள்ள "திருவள்ளுவர்
கழகம்", மறைந்த எனது தந்தையார்
ஆயுட்கால உறுப்பினர். அன்று நம்
திருவள்ளுவர்திருநாள்.மாலை முது
பெரும் பேச்சாளர் அன்பு.திருக்குறள்
முனுசாமி அவர்கள் (விழா இறுதிப்
பேச்சாளர்) தமது உரைதனில் கீழே
கண்டவாறு பேசுகிறார்:-
என் அன்புள்ள பொதுமக்களே இன்று
நான் என்னபேசப் போகிறேன் என்று
சொன்னால் நாட்டினில் வாழ்வது
மிக மிக கஷ்டம்.ஆனால் காட்டினில்
வாழ்வது மிக மிகச் சுலபம்.
என்னடா இது ! சுத்த பைத்தியக்காரத்
-தனமா இருக்கு !இவருக்கு என்ன
புத்தி பேதலித்துவிட்டதா?மாத்தில்ல
பேசுகிறார்,எனஉங்களைப் போலவே
நானும் கொஞ்சம் யோசனை செய்து
பார்த்தேன்.பிறகு திருக்குறளார்
என்ன பேசுகிறார் பாருங்கள் :-
பேரன்பு கொண்ட பெரியோர்களே !!
நான் சொல்வது உங்களுக்கு சற்று
வித்தியாசமானதாகவே இருக்கும்.
காட்டினில் நமக்கு எதிரே வருவது
என்ன மிருகம் என்பதை அதனதன்
முகங்கள் நமக்கு அடையாளம்
காட்டி விடும் அன்பர்களே !!இது
புலி,இது சிங்கம்,இது கரடி,இது
மான்,இதுகொக்கு,இதுநரிஇப்படியாக
ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும்
ஒரு குணம் இருக்கும்.அதற்குத்
தகுந்தவாறு நாமும் விலகிச் சென்று
விடலாம்.ஆகவேதான்சொல்கிறேன்
அன்பர்களே !! காட்டினில் வாழ்வது
சுலபம் என்று !!
ஆனால் இதற்குநேர்மாறாக நாட்டில்
வாழ்ந்திடும் மனிதப் பதர்கள் நான்
என்னையும்சேர்த்துத்தான் சொல்லு
-கிறேன் அன்பர்களே !!
எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவே
முகங்களை இறைவன் படைத்து
விட்டதன் காரணமாக இங்கே எது
புலி,எது கரடி,எது சிங்கம்,எது
குரங்கு,எது நரி,எது நாய் என்பதனை
யாராலும் அறிந்திட முடியாது
அல்லவா? குரங்கு நம்ம பக்கத்திலே
உக்கார்ந்து இருக்கும்.கரடிகிட்டே
நாம் கைகுலுக்கி கொண்டு
இருப்போம் நரியை நம்பி நாம நம்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உளறிக் கொண்டு இருப்போம்.
சிங்கத்திடம்நாம்சிநேகிதம்கொண்டு
பழகிவருவோம்.இப்போதுசொல்லு--
-ங்கள் அன்பர்களே !! நாட்டில்
வாழ்வது கஷ்டமா இல்லையா ?
இந்தமாதிரி திருக்குறள் முனுசாமி
அவர்கள்பேசிமுடித்ததும் கைதட்டல்
விண்ணைத் துளைக்கும்.
இந்தமாதிரி இவரது பேச்சுக்கள்
எப்போதுமே சிரிப்புடனும் அதே
வேளை சிந்திக்க வைப்பதாகவும்
இருக்கும் அன்பர்களே !! இவரது
மேலே சொன்ன உரைதனை நான்
எனது சிறுவயது பிராயத்தில் கேட்டு
இருந்ததை உங்களிடம்
சொல்லுகிறேன் அன்பர்களே !! அது
போது எனக்கு வயது அநேகமாக 15
இருக்கும். ஏறத்தாழ 45 ஆண்டுகளு-
-க்கு முன்பு நான் மதுரைத்
திருவள்ளுவர்கழகத்தில் நடந்த
நல்லதோர் விழாவினில் கேட்ட ஒரு
நல்ல விஷயத்தினை நேயர்களோடு
இன்றையதினம்பகிர்ந்துகொண்டு
உள்ளேன் அன்பர்களே !! படித்துப்
பார்த்து இன்புற வேண்டுமாய்
உங்கள் அனைவரையும் வேண்டி
விரும்பிக் கேட்டுக் கொண்டு உங்கள்
அனைவரிடமும் அன்பு வணக்கம்
கூறி விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment