தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழிலேயே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது )
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் எனது
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது சிரம்
தாழ்ந்த கரம் குவிந்த அன்பு நிறைந்த
வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.
இன்றைய தினம் நம்மில் திருமணம்
முடித்து கால்கட்டு போடப்பட்ட ஆண்
வர்கத்தினரை தினசரி வாட்டி வதைத்-
-திடும் ஒரு சிக்கலான சிரமமான நம்
எல்லோரது பிரச்சனைகளுக்கும் ஒரு
ஒட்டுமொத்த தீர்வு காண்பது எப்படி
என்று நம்மில் நிறையப் பேர்களது
வாழ்வினில் ஒளிஏற்றிடும் நல்லதோர்
புது முயற்சியாக நான் அதிகாலை
வேளையில் சிந்தித்து இருந்தனால்
எனது அறிவுக்கு எட்டிய சில விஷயங்- -
களைஉங்களுடன்பகிர்ந்துகொண்டால்
அதுஉங்களுக்கும்பேருதவியாகஅமை-
-ந்திடும் என்றகாரணத்தால்நான்இன்று
எனது " எண்ணச் சிறகுகள் " அதன்
மூலமாக உங்களுடன் விவாதிப்பதில்
பெரும்மனமகிழ்ச்சிஅடைகிறேன்.
பொதுவாக தமிழில் ஒரு முது மொழி
ஒன்று உண்டு.அது என்னவென்றால்
மோகம் முப்பது நாள் !! ஆசை அறுபது
நாள்!! ஆக மொத்தம் தொண்ணூறு
நாள்என்று. இதற்குஉண்மைப் பொருள்
என்னவென்றால் திருமணமான 3
மாதத்தோடு சரி.உனது மோகம் ஆசை
எல்லாம்வேரோடும்வேரடிமண்ணோ-
டும் சாம்பல் ஆகி அத்தோடு முடிந்து
விடுகிறதுஎன்றுசொல்லுவதற்காகவே
அதன்பின்இந்தமனைவிஎன்பவளிடம்
இந்தப் புருஷன் படும் பாடு உள்ளதே
அப்பப்பா !என்னால் அதை வார்த்தை
யில்சொல்ல முடியவில்லை.நின்றால்
குற்றம். அமர்ந்தால் பெரும்குற்றம்.
இதுபோல.இன்னும் பலபல. சரி பின்
எப்படித்தான் இந்த மனைவி என்னும்
அம்மையாரிடம் நாம் நல்லபெயர்
வாங்குவது என்று நம்மில் அநேகர்
தவித்திடும் தவிப்பு. அதனை சரி
செய்திடவேஇந்தகட்டுரை உங்களுக்கு
பலஅறியபெரிய முன் யோசனைகளை
உங்களுக்கு சொல்கிறது அன்பர்களே !!
யோசனைஎண்1) உங்களுக்கு மனமாற
பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ
சும்மா மனைவியைப் புகழ்வதுபோல
நடிக்கக்கற்றுக் கொள். அதிலும் இரவுப்
பொழுது எனில் நல்லா வெளுத்து
வாங்கு உனது நடிப்புத் திறனுடன்.
நல்ல பெயர் மனைவியிடம் தானாக
உன்னைத் தேடி வரும் அன்பரே !!
சங்ககால பாடல் ஒன்றினில்"புகழ்ச்சி"
எவ்வாறு நடந்தால் நலம்பயக்கும் என
தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது
அன்பர்களே. பாடலைப் பார்ப்போம்:-
நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே
புகழ்தல்!!
ஆசானை எவ்விடத்தும் அப்படியே !!
பாச மனையாளைப் பஞ்சணையில் !!
மைந்தர்தம்மை நெஞ்சில் !!
வினைஆளை வேலை முடிவில் !!
என்று மிகத் தெளிவாக வருங்கால
சமுதாயம் எப்படி எல்லாம் விழிப்பு
உணர்வோடு வாழ்ந்திடவேண்டும்
என்று அருமையாக ஒரு வரைமுறைப்
படுத்தி எழுதப் பட்ட மேலேசொன்ன
பாடலில் தான் எத்தனை எத்தனைக்
கருத்துசெறிவுகள்அதனைஉள்அடக்கி
எழுதப் பட்டுள்ளது பார்த்தீர்களா என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!இந்தப்
பாடலின் 3 ஆவது வரிதான் நமது
கட்டுரைக்கு மிக முக்கியமான வாதம்
ஆதலால் அதற்கு மட்டும் நான் இங்கே
விளக்கம் தருகிறேன் அன்பர்களே.
கற்பனை நாடகம் !!
அது முன் இரவு நேரம் மணி சுமார் 11
ஆகி இருக்கும். கணவர் திரு கந்தனும்
மனைவி மங்களமும் உணவுமுடித்து
அருகருகேபடுத்துஉறங்குவதற்குமுன்
நடைபெறும்உரையாடல்.இதுவும் ஒரு
கற்பனையே !!
கந்தன்:- ஏண்டி!மங்களம். இன்னைக்கு
வச்ச மீன் கொழம்பு அடடா என்ன ருசி
என்ன ருசி. அவ்வளவையும் நான்
ஒருத்தன்மட்டுமேசாப்பிட்டு விடலாம்
போல இருக்கே. எம்மா! கண்ணு!நீயா
வச்ச.சொல்லுடா தங்கம்.
மங்களம்:என்ன கரிசனம்!!அப்படியே
பொங்கி வழியுது. நான்தான் வச்சேன்.
கந்தன் :- ஏன்டாகண்ணு!!கோச்சுக்கிரே.
ருசியாஇருந்ததாலேதானே கேட்டேன்.
மங்களம் :- ஏன் அதை சாப்பிடும்போது
கேட்டா என்னவாம்?
கந்தன்:- ஏய்! மக்கு!! அம்மா பக்கத்லே
இருந்தாங்கள்ளே. என்னாட இது நாம
முப்பதுவருஷமா இதே மீன் குழம்பு
வச்சு தந்து இருக்கேன். அப்பல்லாம்
இல்லாத ருசி இந்த முட்டாப் பய மவ-
-னுக்கு இப்ப வருதோ அப்படின்னு
நினைசுக்கிடுவா இல்ல!! தங்கம். உம்!
அதனாலதாண்டாசெல்லம்! என்னால்
சொல்ல முடியலைடா. தப்பா நீ அதை
எடுத்துக்காதடா. என் வைரம்.என்ன
சரியா !!
மங்களம்:- நிஜம்மாவா மச்சான் நீ
சொல்றது ?
கந்தன்:- அட!ஆம புள்ளே !! சத்தியமா
சொல்றேண்டா என் தங்கமே.
மங்களம்:- எனக்கு இப்ப ரொம்ப மனசு
சந்தோஷமா இருக்கு மாமு.
கந்தன்:- அப்படியா! சரி!சரி!விளக்கை
அணைச்சுட்டுவந்துபக்கத்துலேதூங்கு
இரவு முடிகிறது.பொழுது விடிகிறது.
கொக்கரக்கோ என்ற சேவலின் கூவல்
ஒலியுடன்.
மறுநாள் காலை மணி 7
கந்தன்:- அடியேய் ! மூதேவி! மங்களம்
ஏண்டி உன் மனசுலேநீஎன்னாடி நினை-
ச்சுக்கிட்டுஇருக்கே. உம்! மணி 7ஆவுது
இன்னும் காபியைக் காணலே!
மங்களம்:- அட ஏன் மச்சான் இப்படி
கத்துறே.மாமு நேத்து தங்கம்,வைரம்,
செல்லம்அப்டின்னுஎல்லாம்என்னைப்
பேசினியே மாமு. இப்ப என்ன ஆச்சு
மாமு உனக்கு?
கந்தன்:- அட மூதேவி! அது ராத்திரிடி!
இதுபகல்!இப்பதெரியுதா வித்தியாசம்
போடி!போடி!போய் வேலையைப்பார்டி
வந்துட்டாளுக.கொஞ்சுறதுக்கு.
இது தான் உலகம்.இதுபோலத்தான் 1௦௦
ஆண்களில்99பேர்கள் நடந்துகொள்கின்
றனர் அன்பர்களே ! (1௦௦வது நபர் நான் )
இங்கே நான் எதற்காக இந்த ஓரங்க
நாடக பாணியில் இரவுப் புகழ்ச்சி
பற்றிஉங்களிடம்விரிவாகச்சொன்னே
ன் எனில் இன்றைய தினம்உலகமே
காரியம்முடியும்வரை காலைப்பிடி
முடிந்தபின்னேகவுத்துஅடிஎன்றே
சுழன்றுகொண்டு உள்ளது அன்பர்களே.
சரி இறுதியாக நாம் இப்போது கட்டுரை
முடிவுக்கு வருகிறோம்.
மனைவியிடம்நல்லபெயர்வாங்குவது
எப்படி?
மனைவிகுடும்பத்துஉறவுகள் யாரோ
அவர்களிடம்மிகவும்அன்புஉள்ளவராக
இயல்பாக நடிக்கவேண்டும். மிக மிக
முக்கியமாகமச்சுனன்கிட்டே.மனைவி
தங்கை கொளுந்தியாளிடம்.இதுவே
குறிப்பு எண் ஒன்று.
குறிப்பு எண் இரண்டு:- மனைவி எது
கேட்டாலும்.என்ன சொன்னாலும்
நீங்கள் அதற்காக உணர்ச்சி வசப்படாத
வண்ணம் முகத்தை சிரிப்பாகவே
வைத்துக் கொண்டு இந்த 3 மந்திரத்தை
தினமும் சொன்னாலே போதுமானது.
1) ஆமா ! ஆமா!
2) அதெல்லாம் சரிதான் !!
3) நீ சொன்ன மாதிரி !!
இது போதுங்க. எப்ப பார்த்தாலும் நீங்க
உங்க மனைவிகிட்டே நல்ல பெயர்
மட்டுமே வாங்கு வீங்க. சத்தியம்.இது
சத்தியம்.உண்மை.உண்மை.
என்னாங்க.நீங்களும் இதுபோலவே
பேசி காரியத்தை கச்சிதமாய் முடிங்க.
என்ன நான் சொல்றது.அப்பநான் போய்
வரவா?
நன்றி! வணக்கம் !!
அன்புடன்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment