Thursday, 25 April 2013

"திருவிளையாடல்" படம் பற்றிய சில மறைக்கப்பட்ட உண்மைகள் !!

"திருவிளையாடல்" 




என் அன்புள்ளதமிழ்கூறுநல்உலகினில் 

வாழ்ந்துவரும்உண்மைத்தமிழ்நெஞ்ச-

-ங்களே!!உங்கள் அனைவருக்கும் என் 

இதயம் மலர்ந்த வணக்கம் !!


மறைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க என்

நெஞ்சம் கவர்ந்த தமிழ் திரைப்பட

உலகின் இயக்குனர்களில்நான் மிகப்

பெரிதும் போற்றி வணங்கி வருவது 

தெய்வத்திரு A.P.நாகராஜன் என்பவர் 

மட்டுமே என்று சொன்னால் அது 

மிகை ஆகாது அன்பர்களே !!


அவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க  திரைப்-

படங்கள் என எத்தனையோ படங்கள் 

எடுத்து இருந்தாலும் எனது நெஞ்சம் 

நிறைந்த படம் "திருவிளையாடல் "

படம் மட்டுமே ! அந்தத்திரைப்படத்தில் 

மறைக்கப்பட்ட சில உண்மைகளை 

நான் உங்களது சீரிய சிந்தனைக்கு 

இப்போது விருந்தாக தருகிறேன்.


மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள் 

இந்தத் திரைபடத்தினில் பல உண்டு 

என்றாலும்கூட"பாட்டும்   நானே-பாவ

மும் நானே "என்றபாடல் உண்மையில் 

கவிக்கோ திரு கா.மு.SHERIFF அவர்கள்

எழுதியதுதான் என்றாலும் கூடஅவரது 

மதம் இறைவனுக்கு இணை வைத்துப்

பார்ப்பது,நினைப்பது,சொல்வடிவம் 

கொடுப்பது மன்னிக்க முடியாதகுற்றம் 

ஆகவே (தான்எழுதிய) அந்தப் பாடலை 

கவியரசர் கண்ணதாசன் பெயரில் திரு

APN அந்தப் படத்தினில் அரங்கேற்றி 

இருந்தார்.ஆகவே நாம் எல்லாம் இது 

வரை கவியரசர்தான்  அந்தப் பாடல் 

புனைந்தவர் என்று எண்ணிக்கொண்டு 

இருந்தோம்  அல்லவா என்  இனிய 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! அது 

வல்ல உண்மை !!மேலேசொன்ன 

அந்த "பாட்டும்நானே பாவமும் நானே"

 என்றதேனினும் இனியஅந்தத்தெள்ளு 

தமிழ்பாடலை இயற்றி நமக்கு அள்ளித்

தெளித்தபெருமைகவிக்கோதிருகா.மு

ஷெரிப் அவர்களையேசாரும் என்பதை

நமதுநினைவில்கொள்ளவேண்டியது

மிக மிக அவசியம் அன்பர்களே !!


அடுத்து  இந்த "திருவிளையாடல்"

படத்தினில் நமக்கு உண்மையை 

மறைத்து சிரிப்பாக அந்த பகுதி இடம் 

பெற வேண்டும் என்ற மறைந்த A.P.N.

செய்த வரலாற்று நிகழ்வுதனை சற்று

உரு மாற்றிய பெருமையும் அவரையே 

சாரும்.


படத்தினில் இடம் பெற்ற "தருமி"கதா 

பாத்திரம் உண்மையில் ஒரு வறுமைக் 

கோட்டிற்கு கீழே வாடிடும் ஒரு ஏழை 

பிராமணனின் கதையே அல்ல.


உண்மைத் திருவிளையாடல் புராணத்-

-தில் "தருமிக்கு பொற்கிழி வழங்கும்"

சம்பவம் எப்படி உருவாக்கப்பட்டு 

இருந்தது என்றால் அந்த தருமிக்கு 

அவனது மனதில் நீண்ட நாட்களாக 

ஒரு ஆசை. அவன் ஒரு மிகச் சிறந்த 

சிவ பக்தனும் கூட. தாய் மீனாக்ஷி 

அம்மனை அவளது கர்ப்பக்ரகத்தினுள் 

சென்று அவளுக்கு அபிஷேகம்,மற்றும் 

ஆராதனை,பூஜை,புனஸ்காரங்கள் 

செய்து தனது பிறவி மோட்ச கதி பெற 

வேண்டும் என்பதே அந்த தருமியின் 

ஆசை.  ஆனால்தருமியோஒரு கட்டை 

பிரம்மச்சாரி. கிரகச்சாரிகள் மட்டுமே 

(அதாவதுதிருமணமானஇல்லறத்தில் 

ஈடுபட்டவர்கள்மட்டுமே) அங்கேஉள்ள 

அம்மனின் கருவறையினுள்வரை

சென்று அம்மனுக்கு மேலேசொன்ன 

அபிஷேக,ஆராதனை செய்திடும் 

தகுதி படைத்தவர்கள். சரி பேசாமல் 

திருமணம் செய்துகொண்டு தருமி 

அம்மனை வழிபட வேண்டியதுதானே 

என்று நீங்கள் நினைப்பது போல

வரலாற்றினை  புனைபவர்களது புத்தி

தனில் உரைக்காமல் இல்லை. 


இப்போது உள்ளதுபோல அந்தக் கால

நடைமுறைகள் கிடையாது. ஒரு 

பெண்ணை ஆண் திருமணம் செய்து 

கொள்ள வேண்டும் என்று ஆசைப் 

பட்டார் என்றால் அந்த பெண்ணைப் 

பெற்றுவளர்த்துஆளாக்கிநல்ல பருவப்

பெண்ணாக இந்த ஆண் மகன் ருசித்து 

உண்ணும் கனியாக ஆக்கித் தந்த அந்த 

பெண்ணைப் பெற்றோர்களுக்கு இந்த 

மணம்செய்யநினைத்திடும் மணமகன்

பொற்காசுகள்  உள்ள பணப் பைகள் 

கொடுத்தால்மட்டுமேஅவனுக்கு பெண் 

கொடுப்பார்கள். இஸ்லாமியர்கள் 

சமூக அமைப்பினில் இன்றும் பெயர் 

அளவில் கடைப் பிடிக்கப்பட்டு வரும்  

"மஹர்" பணம் போல.


ஆனால் இவனோ மிக பரம ஏழை. 

எப்போது இவன் பணம் சேர்க்க! மணம் 

முடிக்க! அம்மனை வணங்கி வழிபட?


அதனால்தான் சிவபெருமானிடம் 

அந்தத்தருமிதனதுமனம்உருகவேண்டி 

அந்த வேண்டுகோளினை சிவன் ஏற்று

தருமிக்கு பொற்காசுகள் கிடைத்திட 

வழிவகுக்கும் விதமாகவே பாண்டிய 

மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு 

இயற்கை மணம் உண்டா அல்லது 

செயற்கை மணம்தான் அவர்களால் 

ஏற்றப்படுகிறதா என்ற சந்தேகத்தினை 

மன்னனுக்கு ஏற்படுத்தி (ரொம்ப முக்கி

யம் இந்த சந்தேகம் இதுபோல வேலை 

இல்லாத அரசர்கள் பலர் அந்தக் 

காலத்தும் வாழ்ந்துதான் உள்ளனர்.

தற்போது வேலை ஏதும் இல்லாத 

அமைச்சுகள் பல போலவே ) அதை 

தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் 

பொற்காசுகள் பரிசு என்று  அறிவிக்க 

வைத்தது இவை எல்லாம் உண்மைத் 

திருவிளையாடல் புராணத்தில் உள்ள 

சம்பவங்கள் அன்பர்களே!இதில் 

நமக்குநகைச்சுவைஉணர்வினைஏற்ப

டுத்திஅந்த பெருமைமிகுந்ததருமியின்  

உள்ள உணர்வுகளை சிறுமைப் படுத்தி  

ய  அந்தப் பெருமையும்  மறைந்த APN

அவர்களையே சாரும். 


"திருவிளையாடல்"திரைப்படத்தில் 

மறைக்கப்பட்ட சில உண்மைகளுள் 

இதுவும் ஒன்று என் அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே !!


இத்தனைநேரம் எனது இந்த மிக நீண்ட 

கட்டுரைதனை பொறுமையுடன் 

படித்து இரசித்த உங்களது பெரிய 

உள்ளத்திற்கு எனது நன்றி கலந்த  

வணக்கங்களைச் சமர்ப்பித்து விடை 

பெறுகிறேன் எனது அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே !!


வாழ்வோம் நாம் அனைவரும்!!

வளமுடன் !! நற்பண்புடன் !!


அன்புடன்.மதுரை. T.R.பாலு.




No comments:

Post a Comment