Thursday, 4 April 2013

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் !!!

நம்பிக்கை துரோகம் !! 


அன்புள்ள எனது உலகமெல்லாம் வாழ்ந்து வரும் 

இனிய தமிழ் நெஞ்சங்களே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது அன்பு 

மிகுந்த வணக்கங்கள். அதனை நான் உங்கள் 

எல்லோரது பொற்கமல பாதங்களிலும் வைத்து 

வணங்கி மகிழ்கிறேன். நிற்க !!


இன்றைய தினம் உங்கள் அனைவரின் சீரிய 

சிந்தனைக்கு விருந்தாக நான் படைக்க இருக்கும் 

விஷயம்தான் கட்டுரையின் தலைப்பாக இங்கே 

தரப்பட்டு உள்ளது.


புரட்சி நடிகர் MGR அவர்களும் அபிநய சரஸ்வதி 

என்று அந்தக் காலத்தில் நாங்கள் எல்லோரும் 

செல்லமாக அழைத்து மகிழ்ந்த கன்னடத்து 

பைங்கிளி B.சரோஜா தேவி அவர்களும் இணைந்து 

நடித்து மிகப் பெரும் பொருட்செலவில் தயார் 

செய்யப்பட்ட வண்ணக் காவியமாம் "பறக்கும் 

பாவை " என்ற திரைப் படத்தில் கதாநாயகியாக 

நடித்த சரோஜாதேவி தாம் ஏமாற்றப்பட்டோம்/நம்பி 

மோசம் போய்விட்டோம் என்ற சூழலில் பாடும் ஒரு 

பாட்டுத்தான் இங்கே கட்டுரைக்கு முக்கிய 

தலைப்பாக தரப் பட்டுள்ளது. யாரைத்தான் 

நம்புவதோ பேதை நெஞ்சம் என்று.


அது என்ன தலை எழுத்தோ தெரியவில்லை.  நம் 

தமிழ் சினிமா உலகில் தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் 

பேசுகின்ற நடிகைகளுக்கு என்றும் முக்கிய இடம் 

கொடுத்திட்டதாக வரலாறு என்பது கிடையவே 

கிடையாது.


அந்தக்காலந்தொட்டுஇன்றுவரைகேரளம்,ஆந்திரம்,

கர்நாடகம் இல்லை என்றால் பாலிவுட் இது போன்ற 

இடத்தில பிறந்த நடிகைகள் தான் என்றும் இங்கே 

நடித்து பெரும் புகழும் பணமும் சம்பாதித்து சென்று 

உள்ளார்கள்.  உதாரணம் ஏராளம்.ஏராளம். 

அந்தகாலத்தில் சாவித்திரி,பத்மினி,KRவிஜயா,

ஜமுனா,பண்டரிபாய்,ராஜசுலோச்சனா,இதுபோல 

பட்டியல் நீளம் அடங்காது.


அதனால் தான் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 

தனது பராசக்தி திரைப்படத்தில் ஒரு 

உணர்ச்சிமிகுவசனம் ஒன்று எழுதி இருந்தார். 

அது "வானகமே வையகமே வந்தாரை வாழ 

வைக்கும் தாயகமே,தமிழகமே  நீ சொந்த 

நாட்டுக்காரனைசுரண்டஆரம்பித்தது எப்போது."என.



மேற்சொன்ன முன்னாள்  மாநில மங்கையர்கள் 

நடிகைகள்  அவர்களுக்காவது சொந்தக்குரலில் 

பேசி நடித்திடவாவது தெரிந்திருந்தது. 



ஆனால்இந்தக்காலத்தில் நடிக்க வரும் பிற மாநிலத்  

தினைச் சேர்ந்த நடிகைகள் அவர்கள் யாராக 

இருப்பினும் முதலில் சொந்த குரலில் பேசத் 

தெரியாது. அதிலும் குறிப்பாக தமிழ்பேசத் 

தெரியாது என்பதே உண்மை.  எல்லாமே டப்பிங் 

குரல்  தான். 


ஏன் நான் இங்கே உள்ள அனைத்து தமிழ் திரைப்பட 

இயக்குனர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் 

அனைவரயும் கேட்கிறேன்.இங்கே தமிழ்பேசும் 

அழகு மங்கையர்களுக்கு நடிகையர்களுக்குப்  

பஞ்சமா இல்லை அவர்களை வைத்து படம் 

பண்ணினால் போணி ஆகாது என்ற உள் உணர்வா? 


எப்படியோ தொலைந்து போங்கள்.

ஆனால் நீங்கள் செய்வது நம் தமிழ் இனத்திற்கு 

செய்திடும் மன்னிக்கமுயடியாத துரோகம் அய்யா.  

அதை மட்டும் எந்நாளும் நினைவினில் வைத்துக் 

கொள்ளுங்கள்.சரி அதை விட்டு விடுவோம்.


கலைஞர் அவர்கள் கைவண்ணத்தில் வெளிவந்த 

"பூமாலை" திரைப்படத்தில் இசைச் சித்தர் மறைந்த 

சிதம்பரம் S. ஜெயராமன்  தனது வெண்கலக்குரலில் 

கணீரென்று பாடிய பாடல் ஒன்று வரும்:- 



கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா!

இரு  காலடியில் கன்னிமலர் கசங்கியே 

உலர்ந்ததம்மா!!  இரு காலடியில் கன்னி மலர் 

கசங்கியே உலர்ந்ததம்மா. பெண்ணே உன்கதி 

இதுதானா? உன் பெண்மைஆண்மைக்கு பலிதானா ? 

உலகே உனக்கு சுமைதானா? உன் உடலே உனக்கு 

பகை தானா? என்ற கேள்விக் கணைகளோடு 

 அந்த பாடல் துவங்கும்.  


ஏன்இதைச்சொல்கிறேன்என்றால்பெண் 

ஒருத்தியின்துணை ஏதும் இல்லாமல் எந்த ஆணும் 

இன்பம் பெறமுடியாது. ஆனால் அதே சமயம் 

அப்படி பெறும்போது அதற்கு என்று சில உண்மை/

நேர்மை  நிறைந்த வழி முறைகள் உள்ளன. அவை 

மாறுபடும் போது இதுவே நிலைமை. சரி  

இப்போது தலைப்பிற்கு நாம் வருவோம். 


சுகம் பெறுவது என்பது இரு பாலருக்கும் பொது.  

ஆனால் பழியும்,பாவமும் என்பது அன்று முதல் 

இன்றுவரை பெண்களுக்கு மட்டுமே.

இது  ஏன் எதற்காக என்று கேட்டால் நமது 

புராணங்களும் சரி இதிகாச காவியங்களும் சரி 

இங்கே பெண்களைத்தான் அவர்களை மட்டும்தான் 

கற்பு நெறியோடு வாழ்ந்திடவேண்டும் என்று 

சொல்லி/எழுதி உள்ளார்களே தவிர ஆண்களை 

எந்த இடத்தும் அந்த கருத்தை வலியுறுத்திக் 

கூறியதாக நான் அறிந்திலேன். 


காரணம் என்னவென்றால் பெண் என்பவள் ஒரு 

பானை முழுதும் நிறைவாக உள்ள பரிசுத்தமான 

பால்போன்றகுணத்தையும்மனதையும்உடையவள்.


அதில் ஒரேஒரு சொட்டு மாற்று குணம்கொண்ட நீர் 

கலந்து விட்டால் பானை முழுவதும் உள்ள பால் 

கெட்டுவிடுவது போலவே பெண்களும் கெட்டுவிடக்  

கூடாது எனும் கருத்தின் அடிப்படையில் சொல்லப் 

பட்டிருக்கலாம். நான் சொல்வதெல்லாம் எங்கள் 

காலத்துப் பெண்களையும் அவர்கள் வாழ்ந்த வழி 

முறைகளைப்பற்றியும் சொன்ன கருத்து.



அருள் கூர்ந்து இதனை இந்தக் காலத்து 

நங்கையர்கள் படித்து உணர்ந்து வாழ்வில் முன் 

எச்சரிக்கையோடு நீங்கள் வாழாமல் இருந்தால் 

கன்னடத்துப் பைங்கிளி போல் "யாரைத்தான் 

நம்புவதோ பேதை நெஞ்சம்--அம்மம்மா பூமியிலே 

யாவும் வஞ்சம். உறவெல்லாம் முள் ஆகும் 

உணர்வெல்லாம் கல் ஆகும் "என்று பாட்டு 

படித்துக்கொண்டு வீதியில் வலம் 

வரவேண்டியதுதான்.வேறு வழி இல்லை. அல்லது 

பூமாலை படத்தில் வருவதுபோல பெண்ணே 

உன்கதி இதுதானா என்று பாட இன்னொரு 

சிதம்பரம் S.ஜெயராமன் வரவேண்டி இருக்கும்.


பூம்புகார் எனும் திரைப் படத்தில் K.P.சுந்தராம்பாள் 

ஒரு பாடல் பாடி இருப்பார்.


" துடுப்புகள் இல்லாப் படகு அலைகள்

அடிக்கின்ற திசை எல்லாம் போகும்.

தீமையைத் தடுப்பவரில்லா வாழ்வும் 

அந்த படகின் நிலைபோல ஆகும்.

புயல் வரும் முன் காப்பவன்தான் அறிவாளி.

அது வந்த பின்னே தவிப்பவன் தான்  ஏமாளி" 


என்று அப்பாடல் வரிகள் வரும். அதுபோல நீங்கள் 

எல்லோரும்சுதாரித்துவாழ்ந்திடுவீர் இந்தக்கால 

இளமங்கையர்களே !!என்று வேண்டி விரும்பிக் 

கேட்டுக்கொண்டு மிக நல்லதொரு கருத்தினைப் 

பதிவு செய்திட்ட மனத் திருப்தியுடன் உங்கள் 

அனைவரிடமும் அன்பு வணக்கம் கூறி விடை 

பெறுகிறேன். 


 நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை TR.பாலு.  
  
  
தமிழனாக இருங்கள் !        தமிழிலேயே பேசுங்கள் !!

                         இது இன்று மிகமிக அவசியம்.

No comments:

Post a Comment