Monday, 15 April 2013

நம்பிக்கை ஏன் மாறுகிறது ? காலை,மாலை,இரவினில் ஒரு மாதிரியும் பகலில் மட்டும் வேறுபடுவதேன் ?



 தமிழர்களாக இருங்கள் !!

தமிழிலேயே பேசுங்கள் !!

(தமிழர்களிடமாவது )



உலகெங்கிலும் உண்மை,அன்பு,கனிவு இதுபோன்ற 

குணங்களை மட்டுமே  தாம்  அணிந்து மகிழ்ந்திடும் 

அணிகலன்களாக எண்ணி வாழ்ந்துவரும் எனது 

உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள்அனைவருக்கும்எனதுஇதயபூர்வ வாழ்த்துக்

-கள் நிறைந்த வணக்கம்.


இன்றைய தினம் நான் தரும் கட்டுரையின் தலைப்பு 

"நம்பிக்கை" என்பதாகும்.  அந்தக் கால திரைப்படம் 

ஒன்றினில் ஒரு பாடல், " யானையின் பலம் எதிலே 

தும்பிக்கையிலே--மனிதனோட பலம்  எதிலே 

நம்பிக்கையிலே "  என்று வரிகள் வரும்.  ஆனால் 

ஒவ்வொரு மனிதனும் எனது கண்ணோட்டத்தில் 

நான் உட்பட சொல்லுகிறேன்.   என்னவென்றால் 

இரவுதூங்கும்போதுகாலையில்விழித்து எழுவோம் 

என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்

கிறோம் எனில் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து 

அல்ல அன்பர்களே !!


ஆனால் இந்தக் கலி காலத்தில் இந்த நம்பிக்கை 

என்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக பவுர்ணமி 

தாண்டி அமாவாசை நோக்கி செல்லும் சந்திரனைப் 

போலவே நாளொருமேனியும்பொழுதொரு வண்ண

மும் தேய்ந்து கொண்டுதான் உள்ளது அன்பர்களே !!


முதலில் இந்த (நம்பிக்கை) விசுவாசம்இவை எங்கே 

இருக்கிறதுஎன்று என் கிறித்துவ மதத்தினை சேர்ந்த

நண்பன் ஒருவனிடம் நான் கேட்டபோது அவன் 

சொன்ன கருத்து அங்கு எனக்கு சிரிப்பினை உண்டா-

-க்கி விட்டதுஅன்பர்களே. ஆம்அவன் சொன்ன பதில்   

இதுதான்:-  விசுவாசம் தேடினால்வேதக் கோவிலில்

போய்ப் பாரு என்றான் அவன்.

பொதுவாக இங்கே நம் மனித குலத்தினில் யாரும் 

யாரையும் அவ்வளவு சீக்கிரமாக நம்புவது என்பது 

கிடையாது.  கணவனை மனைவி நம்புவது என்பது 

கிடையவே  கிடையாது அன்பர்களே.  என்றோ ஒரு

காலத்தில் இந்தக் கணவன் ஒரு வாலிப வேகத்தில்

அவன் அப்படி இப்படி இருந்திருக்கலாம். அந்த ஒரு 

செயலுக்காகவே/அந்த ஒரு நிகழ்வுக்காகவே இந்த 

மனைவியாகப் பட்டவள் ஏதோ கணவன் கலிகால 

மன்மதன் என்று பட்டம் கட்டி அவனை எப்போதும் 

சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதே வழக்கம் என்று 

ஆருயிர் நண்பன் அர்ஜுனன் தனது மனைவி அல்லி 

பற்றி அடிக்கொருதரம் சொல்லி அதனையே 

மனமதில் எண்ணி எண்ணி என்னிடம் வேதனைப் 

படுகின்றபோதேல்லாம் நான் அவனை தேற்றி 

அவனது மன உளைச்சலுக்கு மருந்து இடும் 

விதமாக ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேசுவது 

வழக்கம் . கவலைப் படாதேடா நண்பா. என்ன 

செய்வது நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.

மனைவி  என்பவள் "மனை"தனில் நமது "வி"ருப்பம் 

என்பதனை  நிறைவேற்றிட இறைவனின் கருணை 

நிறைந்த உள்ளத்தினால் நமக்கு தந்திட்ட அன்புப் 

பரிசடா !! அதற்கு நீ நம்பிக்கை துரோகம் செய்திட 

எண்ணாதே! எப்பொழுதும். அப்படி ஒருவேளை ஒரு 

பொழுது நீ துரோகம் செய்தாலே போதுமானது.ஏன் 

என்றால்இந்தப்பூவுலகினில் நம்பியவர்களைத்தான் 

துரோகம் செய்திட முடியும் அதனாலேயே இந்தச் 

செயலுக்கு நம்பிக்கைத்துரோகம் என பெயர் வந்தது.



அத்துடன் நல்ல கணவன் என்னும் பெருமைதனை 

நீ இழந்துவிடுவதுஎன்பது உறுதி. நீ உனது வாழ்நாள்

முழுவதும் அவர்களது சந்தேகக்கண்ணில் மட்டுமே 

வாழ்ந்திட இயலும்.அச்சமயம் நீங்கள்உங்களது 

குடலை அறுத்து எடுத்து காட்டினாலும் உங்களது 

மனைவிமார்கள் அதனை வெறும் வாழை நார் 

என்றுதான் சொல்வார்கள் நண்பனே.இதனை நீ உன் 

மனதின் அடித்தளத்தில் எண்ணி இனியாகிலும் 

செயல்படு தம்பி என்று நான் சொல்வது உண்டு.  


சரி இப்பொழுது நாம் தலைப்பு சம்பந்தப்பட்ட 

விஷயம் செல்வோமா அன்பர்களே. 

அது வேறு ஒன்றும் இல்லை அன்பர்களே ! !


காலை,மாலை,இரவு நாம் உணவகங்களில் உணவு 

சாப்பிடச் செல்லும்போது நம்மை நம்பி முதலில் 

பணத்தினை பெற நினைத்திடாத அந்த உணவக 

நிறுவத்தினர்கள் ஏன்,எதற்காக,மத்தியான வேளை 

மட்டும் நம்மை நம்பிடாமல் முதலில் சாப்பாட்டுக்கு  

உரிய பணத்தினைச்செலுத்திவிட்டு அடையாள 

வில்லைபெற்றுச்செல்லச் சொல்லுகிறார்கள் எனது 

அன்பான அன்பர்களே !சிந்தியுங்கள்!!செயல்படுவீர்!! 



வேறு விசேஷம் ஒன்றும் இல்லை அன்பர்களே. 

மீண்டும் எனது அடுத்த " எண்ணச் சிறகுகள்"பகுதி 

வலை தளத்தினில் உங்கள் அனைவரையும் நான் 

சந்திக்கிறேன். அதுவரை உங்கள் அனைவருக்கும் 

அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் 

அன்பு சிந்தனையாளன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment