Friday, 3 May 2013

கலைவாணர் N.S. கிருஷ்ணன் நினைவு அலைகள் !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தனித் தமிழில் மட்டுமே பேசிடுக !!

( தமிழர்களிடம் )



அன்புமிக்க உலகத் தமிழர்களே!!

உங்கள் அனைவருக்கும் எனது 

நெஞ்சார்ந்த வணக்கங்கள்!! 


 இன்றைய தினம் ஒரு நல்ல மனம் 

கொண்ட, அந்தக்கால நகைச்சுவை 

உணர்வுகளைத் தருவதில் நம்மை 

சிரிக்கவைப்பதுடன், சிந்திக்கவும் 

வைத்திட்ட, ஒரு உண்மை சிரிப்பு 

நடிகரும், இளகிய மனம் கொண்ட, 

தன்னைத் தேடிவந்த யாரையும் 

என்றும் வெறும் கையுடன் அனுப்ப-

மனம்இல்லாத,உண்மைக்கொடை-

யாளி, பண்புஉள்ளமனிதர், இத்தனை 

சிறப்புகளையும்  தன்வசம்  கொண்ட 

கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்க 

ளைப்பற்றி, ஆண்டு முழுவதும் நாம் 

பேசிக்கொண்டே இருக்கலாம். அவர் 

திரைப்படங்களில்தமது பாடல்களை 

தாமே கூடுமானவரை எழுதிடும் நல் 

ஆற்றல் படைத்தவர். தாமே பாடும் 

ஆற்றலும்கொண்டஉண்மைக்கலை 

-வாணர்  இவர் மட்டுமே !! எனவே    

இந்தக் " கலைவாணர் "  என்ற நல்ல 

பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே  

உரித்தானது. இதில் சின்னக்  கலை--  

வாணர் அப்படி இப்படி எல்லாம் 

பட்டம் போட்டுக்கொள்வது எல்லாம் 

சுத்த " பம்மாத்து "வேலை.


இருந்த போதிலும் ஒருசில சம்பவங் 

களை நான் இங்கே குறிப்பிட்டே ஆக 

வேண்டி உள்ளது அன்பர்களே !!   


67ல் N.S.கிருஷ்ணன் என்று ஒரு படம்

அதில் கோவிலில் ஊழியம் செய்யும் 

நாராயண அய்யங்கார் வேடம் இட்டு 

கலைவாணர் மிகத்திறம்பட நடித்த 

போது அந்த குலத்தவர்கள் எப்படி

எல்லாம்இச்சமூகத்தில்என்னென்ன 

திரைமறைவு அநியாயங்களையும் 

அக்கிரமங்களையும்செய்துகொண்டு

வாழ்ந்து வருகிறார்கள்  என்பதை 

அப்படியே தோலுரித்து நமக்கு காட்டி 

இருப்பார்கள். ஆற்றின் கரையில் 

இருந்து "சந்தியாவந்தனம்" செய்து 

கொண்டு கலைவாணர் அந்த 

நாராயணஅய்யங்கார்வேடம்இட்டு

நடித்துக்கொண்டுஇருக்கும்போது

அங்குஉள்ளதாழ்த்தப்பட்ட பிரிவைச் 

சேர்ந்த துணி வெளுக்கும் பெண் 

ஒருத்திமேல்மையல்கொண்டுஅய்ய

-ங்கார் அவளைப் பார்த்து சிரிப்பதும் 

கண்ணடித்துக் கேலி செய்வதுமாய் 

இருக்கும் நாராயண அய்யங்கார் 

அவளை வீட்டுக்கு வரச் சொல்லி 

பின்வாசல் வழியே வந்த அவளிடம் 

நைசாகப் பேசி நீ இன்று இரவு 

எப்படியாவது என்வீட்டுக்கு வர 

வேண்டும் என்று கையை பிடிக்க 

எத்தனிக்கும்போது உங்க மனைவி 

இருப்பாங்களே(T.A.மதுரம்)என்று  

அவள் கேட்டதற்கு அதை நான் 

பார்த்துக்கறேன்  அவளோடு இன்று 

சண்டையை போட்டு அவ அப்பன் 

வீட்டுக்கு நான் அனுப்பிடுவேன் என 

நாராயண அய்யங்கார் வேடம் 

போட்ட N.S.K. அவர்கள் சொல்வார்.

சொன்னமாதிரியே T.A.மதுரத்திடம் 

அன்று இரவு சண்டையைப் போட்டு 

வீட்டை விட்டு வெளியில் போகச் 

செய்திடுவார் N.S.K.  உடனே மதுரம் 

வீட்டை விட்டு வெளியில் வரும் 

போது சந்து முனையில் அந்த துணி 

வெளுக்கும் பெண்மணி, மதுரம் 

அவர்களிடம், என்னாங்க அம்மா 

நம்ம சாமி ஆற்றங்கரையில் என் 

கையைபிடித்து இழுத்து இரவு வேறு 

என்னை உங்க வீட்டு பின் கதவை 

தட்டி உள்ளே வரச்சொல்லி 

இருக்காரு. அப்புறம் உங்களை 

எப்படியாச்சும் சண்டையைப்போட்டு 

உங்க அப்பாரு  வீட்டுக்கு அனுப்பி 

வைச்சுடுவேன் என்று வேறு  சாமி 

சொல்றாரு அம்மா. சாமிக்கு என்ன 

கிறுக்கு கிறுக்கு பிடிச்சுபோச்சா? என 

வினவுவாள் அந்த துணி வெளுக்கும்  

அந்தபெண்.உடனேமதுரம்ஆமாண்டி

நீ சொல்றதுதான் சரி. இங்கேவா என 

சொல்லிட்டு அவ காதுலே ரகசியம்

 பேசுவாள்.  இரவு நேரம் வரும். N.S.K. 

வீட்டின் பின் பக்க கதவு தட்டப்படும் 

ஓசை கேட்கும். உடனே நாராயண 

அய்யங்கார்ஓடோடிவந்துகதவைத்

திறந்து இருட்டில் நின்றுகொண்டு 

உள்ள அந்த துணிவெளுக்கும் பெண் 

அவளின் கையைப் பிடித்து இழுத்து 

கொண்டு அவசரம்அவசரமாஉள்ளே 

வாஎனஅழைத்துகொண்டுபோவார்.

தலையில் முக்காடு போட்டுள்ள 

அந்த துணி வெளுக்கும் பெண்ணோ 

மிகவும் பயந்த குரலில் சாமி உங்க 

பொஞ்சாதியை நினைச்சா எனக்கு 

ரொம்பவும் பயமா இருக்கு சாமி, என 

சொல்வாள்.அதற்கு N.S.கிருஷ்ணன் 

அவ கிடக்கிறா கழுதை. நீ வாடி என் 

வசந்தமே!!என்று முக்காடு இட்ட 

அந்த பெண்ணை பின்பக்கமாக கட்டி

அணைத்தபடியே என் கண்ணே !!

எனக்கு சொர்க்கமே தெரிகிறது !!

உனக்கு தெரிகிறதா என்று கேட்பார்.  

அந்தபெண்முன்புறம்திரும்பிசாமி 

சொர்க்கம்தெரியலைஎனசொல்வள் 

அப்போது தான் N.S.K. அந்த முக்காடு 

போட்ட அப்பெண்ணின் திருமுகம் 

தனைப் பார்ப்பார். அது வேறு யாரும் 

அல்ல. நம் நாராயண அய்யங்காரின் 

தர்ம பத்தினி T.A. மதுரம் அம்மையார் 

அவர்களே !! எப்படி இருந்திருக்கும் 

கலைவாணரது நிலையும் அவரது 

முகமும்? நீங்களே உங்களது மனக் 

கண்களில் யூகித்துக் கொள்ளுங்கள் 

அன்பர்களே !!


இது போல் இன்னும் எத்தனை 

எத்தனையோ சம்பவங்கள் சிரிப்பு 

நிகழ்வுகள். எழுதிக்கொண்டே நான் 

போகலாம். அதற்கு என் ஆயுள் 

போதாது என்ற காரணத்தினால் 

நான் இத்துடன்நிறுத்திக்

கொள்கிறேன்அன்பர்களே !!


நாளைய தினம்  ஞாயிறு (௦5-05-2013) 

மாலை 4 மணிக்கு முத்தமிழ் அறிஞர் 

தமிழ்  இனத்தின்  தன்னிகரில்லாத் 

தலைவர், தமிழ்த்தாய் பெற்றெடுத்த 

தவப் புதல்வன்,அனைத்து அரசியல் 

களம் கண்ட முதுபெரும் தலைவர், 

முடிவு எடுக்க முடியாத நிலைகள் 

பலவற்றிலும் அதனை முடித்திடும் 

ஆற்றல்கொண்டசாணக்கியன், 

மறைந்த  முத்துவேலர் கண்டெடுத்த 

நல்ல முத்து, முன்னாள் தமிழக 

முதல்வர், எந்நாளும் தமிழக மக்கள் 

மனந்தனை கவர்ந்த இதயவேந்தன் 

கலைஞர் கருணாநிதி அவர்களின் 

கை வண்ணத்தில்உருவான "பணம்" 

என்றபெயரில்அந்தநாளில்உருவான

திரைக்காவியம்காணதவறாதீர்கள்.


அதில் மறைந்த நடிகர் திலகம் 

சிவாஜி, ,நாட்டியபேரொளி பத்மினி,  

N.S.கிருஷ்ணன் ஹிட்லர் மீசை 

வைத்து சிறப்புடன் நடித்த பல்வேறு 

காட்சிகள்மற்றும், எங்கே தேடுவேன் 

பணத்தை எங்கே தேடுவேன் எனும் 

காலத்தால் அழிந்திடாத பாடல்கள் 

நிறைந்த படத்தினை கலைஞர் 

தொலைகாட்சியில் காணத் தவறா--

தீர்கள் என்றுவேண்டிவிரும்பிகேட்டு 

இதுவரை பொறுமையுடன் இந்த   

மெகா கட்டுரைதனை படித்து 

இரசித்த உங்கள் அனைவருக்கும் 

எனது இதய பூர்வ நன்றிபலவற்றை 

காணிக்கையாக்கி விடை பெறுவது 

உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு. 

வணக்கம் நேயர்களே !!

No comments:

Post a Comment