Wednesday, 8 May 2013

தமிழக காங்கிரசுக்கு அருகதை உண்டா ? கர்நாடக வெற்றியைக் கொண்டாட !!




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

    (தமிழர்களிடமாவது)                         

உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!               

அனைவருக்கும் எனது வணக்கம்.     


இன்றைய தினம் ஒருசிறப்பானஅதே 

நேரம் மிகவும் முக்கியமான அர்த்தம்  

உள்ள ஒரு தலைப்பினைத் தேர்ந்து 

எடுத்து இனிவரும் எதிர்காலத்தில் 

இங்கேதமிழகத்தில்நடைபெறஉள்ள

பாராளுமன்றதேர்தலின்போதுஎன்ன

என்ன நிகழ்வுகள் நடைபெற காத்து 

இருக்கிறது?புதிய "காதல் உறவுகள்" 

அரும்பிட வாய்ப்புகள் உள்ளதா?இது 

போன்ற கேள்விகளுக்கு விடைகள் 

காண உங்கள் அன்பன் மதுரை T.R. 

பாலு மனதில் உதித்திட்ட ஐயங்கள் 

ஒன்று சேர்ந்ததன் விளைவு மேலே 

சொல்லப்பட்டுள்ள வடிவினில்நல்ல 

தொரு கட்டுரை உங்கள் கருத்துக்கு 

நல்விருந்தாக இங்கேவடிவம்பெற்று 

பணிவுடன்  சமர்பிக்கப்பட்டுள்ளது 

என்று சொன்னால் அது மிகைஅல்ல. 


எப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் 

பேரியக்கம் ஆளும் வாய்ப்பினை 

இழந்து அகதியான கதை இன்றைய 

இளைய தலைமறை அறிந்திருக்க 

வாய்ப்புகள் நிச்சயம் இல்லை. அது 

1967ம்ஆண்டு.மொழிக்கொள்கையில் 

செய்திட்ட தவறான முடிவு, 

இயற்கை பருவ மழை பொய்த்தது, 

உணவுப் பொருட்களை சரிவர

சேர்த்து,   சேமித்து,அவைகளை  

மக்களுக்கு ஒழுங்காக விநியோகம் 

செய்திடும் ஆற்றல் இல்லாமை, 

இத்யாதி, இத்யாதி காரணங்கள் 

இவைகளுக்காக மாநில ஆளும் 

தன்மையை இழந்துநின்ற 

காங்கிரஸ் பேரியக்கம் அதன் பிறகு 

சொந்தமாக தனது  காலில் நின்று 

கடினமாக உழைத்து முன்னேறாத 

காரணத்தினால் இன்றுவரை சுமார் 

46 ஆண்டுகளாக அடுத்தவர்கள் மீது 

(திராவிட முன்னேற்றக் கழகம், 

அ.இ.அ.தி.மு.க.என மாறி மாறி ) 

நன்றாக குதிரை சவாரி செய்தே 

சுகம் கண்டதன் விளைவு,  அது 

மட்டும்இல்லாமல்இந்தலட்சணத் 

தில் உள்கட்சி கோஷ்டிப் பூசல் 

வேறு.கட்சி நன்றாக விளங்கும் 

பாருங்கள். இது போன்ற எண்ணில் 

அடங்காதவறுகள் இழைத்து விட்ட -

தன் காரணமே இங்கு ஒரு தேசிய 

கட்சி தேய்ந்துபோல நிலவாக 

தீய்ந்து போன உணவாக காய்ந்து 

போன கனியாக காட்சி அளிக்கிறது. 

உனக்கே உனது காலில் நிற்கும் வலு 

இல்லாத நொண்டியாக நிற்கிறாய் 

இந்த லட்சணத்தில் உனக்கு ஏது 

அருகதை உனது கட்சி அடுத்த 

மாநிலத்தில் அடைந்திட்ட வெற்றி -

தனைக் கொண்டாடிட? அறிவுள்ள 

என் உயிரினும் மேலான அன்புத் 

தமிழ் நெஞ்சங்களே சிந்திப்பீர். நான் 

சொல்வது சரியா ? அல்லது தவறா?

என. உங்களது அன்பான பதிலை மிக    

ஆவலோடு எதிர் பார்த்துக் காத்துக் 

கொண்டிருக்கும் உங்கள் அன்பன் 

மதுரை T.R.பாலு. வணக்கம் எனது 

இனிய அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

No comments:

Post a Comment