நடிகர் திரு.கமலஹாசன் அவர்களது பெயர் காரணம் தெரியுமோ ??
தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழ்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கில மொழி கலப்பு இன்றி )
( தமிழர்களிடமாவது )
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
எனது உயிரினும் மேலாக நான்
போற்றி வணங்கி வரும் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவர்க்கும் எனது
உளப்பூர்வமான நன்றியையும்
வணக்கத்தையும் உங்களது பொற்
கமல பாதங்களில் வைத்து வணங்கு
கிறேன் அன்புத் தமிழ் உள்ளங்களே !!
இன்று உங்கள் அன்புக்கு பாத்திரம்
ஆன மதுரை T.R. பாலு மீண்டும்
ஒரு வித்தியாசமான யாரும் எவரும்
அறிந்திடாத ஒரு விஷயத்தினை
உங்கள் அனைவரது கவனத்திற்கு
இந்த "எண்ணச் சிறகுகள் " வலை
தள பக்கத்தில் விருந்தாகப் படைப்ப
தில் நான் உள்ளபடியே மிகவும்
பெருமைப் படுகிறேன்.
மறைந்த "நடிகர்திலகம்" சிவாஜி
கணேசன், அவருக்கு பிறகு அவரின்
நடிப்பு ஆற்றலில் உணர்சிகளை
வெளியிடும் பாவங்களில் சுமார் 6௦
விழுக்காடுகளுக்கு மேலாக நல்ல
மதிப்பெண் வாங்கிய, வாங்குகிற,
இனியும்வாங்கப்போகும் திறமையும்
தகுதியும் படைத்திட்ட ஒரே ஒரு
நடிப்புலக மேதை என்றபட்டத்தினை
பெருகின்ற ஆற்றலும் வல்லமையும்
உள்ளவர் ஒருவர் உண்டு என்று
சொன்னால் அது நான் நிச்சயமாகச்
சொல்வேன்.
அவர் வேறு யாரும் அல்ல.அது நமது
கமல் ஹாசன் அவர்கள் மட்டுமே !!
இராமநாதபுர மாவட்டம் பரமக்குடி
- நகர் வாழ்ந்த மறைந்த சுதந்திரப்
போராட்ட தியாகி செம்மல் சீனிவாச
ஐய்யங்கார் பெற்றெடுத்த தவப்
புதல்வர்கள் 3 பேரில் கடைசி புத்திர
பாக்கியமே நமது கமல்ஹாசன்
எனில் அது மிகையாகாது.
"பெயர் காரணம் "
அது வெள்ளையர்கள் நம்மை
அடக்கி ஆண்ட காலம். கமல்
அவர்களின் தந்தையும் அவரது சக
தோழர்களுள் ஒருவரான மர்ஹூம்
யாகூப் ஹசனும் சுதந்திரப்
போராட்ட நிகழ்வுகளில் கலந்து
கொண்டு சிறைசென்ற காலம் அது.
எதிர்பாராதவிதமாகசிறைச்சாலை-
-யில் யாகூப் ஹசன் உயிர் பிரிகிறது
உயிர்த்தோழன் பிரிந்திட்ட துயரம்
தாங்காத சீனிவாச ஐயங்கார்
அக்கணமே ஒரு முடிவு எடுத்தார்.
அதுவரை அவருக்கு குழந்தைப்பேறு
கிட்டவில்லை. சபதம் ஒன்று அவர்
செய்தார். எத்தனை பிள்ளைகள்
தமக்கு பிறந்திட்டாலும் அவர்கட்கு
மறைந்த உயிர்நண்பன் பெயரையும்
சேர்த்துவைப்பதுஎன்று.குழந்தைகள்
பிறந்தன. ஆருயிர் நண்பன் யாகூப்
ஹசனின் பெயரில் ஒரு சிறு மாற்றம்
ஹசன் என்பதனைச் சற்று மாற்றி
ஹாசன் என வைத்துகொண்டு மூத்த
பையனுக்கு சாரு ஹாசன் எனவும்
இரண்டாவது பையனுக்கு சந்திர
ஹாசன் எனவும் நமது கமல் அவர்க-
-ளின் பெயருக்கு பின்னால் ஹாசன்
என்பதனைச் சேர்த்து கமலஹாசன்
எனவும் பெயர்வைத்து மறைந்த
நண்பனுக்கு தமது இதய அஞ்சலி
செய்து மகிழ்வுற்றார் மறைந்த
பரமக்குடி சீனிவாச ஐயங்கார்.
அவர் வழி வந்த அவரது புதல்வர்-
-களும் தந்தையின் அடிச்சுவட்டைப்
பின் பற்றி சாருஹாசன் தமது மகள்
பெயரில் ஹாசன் சேர்த்து சுகாசினி
எனவும் கமலஹாசன் அவர்கள்
தமது மகளுக்கு ஸ்ருதிஹாசன்
எனவும் பெயரிட்டு தந்தைக்கு
பெரும் பேரையும் பெருமையையும்
சேர்த்து மகிழ்ந்தனர்.
அடடா !!
இது அல்லவோ மகன் தந்தைக்கு
ஆற்றும் உதவி என்பது !!
வாழ்க !!
பரமக்குடி சீனிவாச ஐயங்காரது
"நட்பின் பெருமையை" இந்த உலகம்
அறிந்திடச் செய்த விசுவாசம் !!
வளர்க !!
அவரது வாரிசுகளின் தந்தை
தனை மறக்காத நன்றி உணர்வுகள்!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment