Tuesday, 30 April 2013
Monday, 29 April 2013
காட்டில் வாழ்வது சுலபம் !! நாட்டில் வாழ்வது கஷ்டம் !!
வாழ்ந்திடுக தமிழர்களாக !!
பேசிடுக தமிழில் மட்டும் !!
(தமிழர்களிடமாவது)
உலகில் உள்ள எல்லா தமிழர்களும்
ஒன்றுசேர்ந்துஒற்றுமையுடன்நாடும்
வீடும் நலம் பெற ,வளம்பெற, நாம்
அனைவரும்ஒன்றுசேர்ந்துஒருமித்த
குரலில் முழங்கிடுவோம்!!
இன்றைய தினம் மேலும் சற்று வித்-
-தியாசம் நிறைந்திட்ட நல்ல தொரு
தலைப்பினில் உங்கள் அனைவரை-
யும் சந்திப்பதில் மட்டட்ற மகிழ்ச்சி
பெறுகிறேன் அன்பர்களே !!
இங்கே நமது தாயகமாம்
தமிழகத்தில் நான் இதுவரை
வாழ்ந்து,வளர்ந்து, மகிழ்ந்து, இருந்த
நான்மாடக் கூடல் நகராம் தேமதுரத்
தமிழோசை தானதெங்கும் முழங்கி
வரும் மாமதுரை நகர்தனில்
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர்
திருநாள் அன்று மதுரை மீனாக்ஷி
அம்மன் கோவிலில் வடக்கு ஆடி
வீதி, அங்கே உள்ள "திருவள்ளுவர்
கழகம்", மறைந்த எனது தந்தையார்
ஆயுட்கால உறுப்பினர். அன்று நம்
திருவள்ளுவர்திருநாள்.மாலை முது
பெரும் பேச்சாளர் அன்பு.திருக்குறள்
முனுசாமி அவர்கள் (விழா இறுதிப்
பேச்சாளர்) தமது உரைதனில் கீழே
கண்டவாறு பேசுகிறார்:-
என் அன்புள்ள பொதுமக்களே இன்று
நான் என்னபேசப் போகிறேன் என்று
சொன்னால் நாட்டினில் வாழ்வது
மிக மிக கஷ்டம்.ஆனால் காட்டினில்
வாழ்வது மிக மிகச் சுலபம்.
என்னடா இது ! சுத்த பைத்தியக்காரத்
-தனமா இருக்கு !இவருக்கு என்ன
புத்தி பேதலித்துவிட்டதா?மாத்தில்ல
பேசுகிறார்,எனஉங்களைப் போலவே
நானும் கொஞ்சம் யோசனை செய்து
பார்த்தேன்.பிறகு திருக்குறளார்
என்ன பேசுகிறார் பாருங்கள் :-
பேரன்பு கொண்ட பெரியோர்களே !!
நான் சொல்வது உங்களுக்கு சற்று
வித்தியாசமானதாகவே இருக்கும்.
காட்டினில் நமக்கு எதிரே வருவது
என்ன மிருகம் என்பதை அதனதன்
முகங்கள் நமக்கு அடையாளம்
காட்டி விடும் அன்பர்களே !!இது
புலி,இது சிங்கம்,இது கரடி,இது
மான்,இதுகொக்கு,இதுநரிஇப்படியாக
ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும்
ஒரு குணம் இருக்கும்.அதற்குத்
தகுந்தவாறு நாமும் விலகிச் சென்று
விடலாம்.ஆகவேதான்சொல்கிறேன்
அன்பர்களே !! காட்டினில் வாழ்வது
சுலபம் என்று !!
ஆனால் இதற்குநேர்மாறாக நாட்டில்
வாழ்ந்திடும் மனிதப் பதர்கள் நான்
என்னையும்சேர்த்துத்தான் சொல்லு
-கிறேன் அன்பர்களே !!
எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவே
முகங்களை இறைவன் படைத்து
விட்டதன் காரணமாக இங்கே எது
புலி,எது கரடி,எது சிங்கம்,எது
குரங்கு,எது நரி,எது நாய் என்பதனை
யாராலும் அறிந்திட முடியாது
அல்லவா? குரங்கு நம்ம பக்கத்திலே
உக்கார்ந்து இருக்கும்.கரடிகிட்டே
நாம் கைகுலுக்கி கொண்டு
இருப்போம் நரியை நம்பி நாம நம்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உளறிக் கொண்டு இருப்போம்.
சிங்கத்திடம்நாம்சிநேகிதம்கொண்டு
பழகிவருவோம்.இப்போதுசொல்லு--
-ங்கள் அன்பர்களே !! நாட்டில்
வாழ்வது கஷ்டமா இல்லையா ?
இந்தமாதிரி திருக்குறள் முனுசாமி
அவர்கள்பேசிமுடித்ததும் கைதட்டல்
விண்ணைத் துளைக்கும்.
இந்தமாதிரி இவரது பேச்சுக்கள்
எப்போதுமே சிரிப்புடனும் அதே
வேளை சிந்திக்க வைப்பதாகவும்
இருக்கும் அன்பர்களே !! இவரது
மேலே சொன்ன உரைதனை நான்
எனது சிறுவயது பிராயத்தில் கேட்டு
இருந்ததை உங்களிடம்
சொல்லுகிறேன் அன்பர்களே !! அது
போது எனக்கு வயது அநேகமாக 15
இருக்கும். ஏறத்தாழ 45 ஆண்டுகளு-
-க்கு முன்பு நான் மதுரைத்
திருவள்ளுவர்கழகத்தில் நடந்த
நல்லதோர் விழாவினில் கேட்ட ஒரு
நல்ல விஷயத்தினை நேயர்களோடு
இன்றையதினம்பகிர்ந்துகொண்டு
உள்ளேன் அன்பர்களே !! படித்துப்
பார்த்து இன்புற வேண்டுமாய்
உங்கள் அனைவரையும் வேண்டி
விரும்பிக் கேட்டுக் கொண்டு உங்கள்
அனைவரிடமும் அன்பு வணக்கம்
கூறி விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Sunday, 28 April 2013
மைதா உணவு !! மைந்தா வேண்டாம் உனக்கு !!
தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது)
உலகமெங்கும் உண்மை,வாய்மை,
பொறுமை,நேர்மை இந்த நான்கு வகை
"மை" களுடன் நீவிர் அனைவரும்
என்றாவது ஐந்தாவது "மை" யான
கள்ளுண்ணா"மை" குணம் கொண்டு
எந்நாளும்வாழ்ந்திடவேண்டும் என்ற
இந்த "ஏழை மதுரைபாலுவின்"அன்பு
வேண்டுகோளுக்கு நிச்சயம் ஓருநாள்
அன்புத்தமிழர்களேநீங்கஅனைவரும்
செவிமடுப்பீர்கள்என்றுஎண்ணி இங்கே
வள்ளுவன் வழிவந்து தமிழ்ப்பணி அது
தடைகள் ஏதுமின்றி தரணி எங்கும்
முழங்கிக் கொண்டிருக்கிறேன் என்று
சொன்னால் அதில் இருவேறு கருத்து-
-களுக்கு இடம் இல்லை அன்பர்களே !!
இன்றையதினம் உணவு சம்பந்தப்பட்ட
ஒரு விஷயத்தினை நான் கையில்
எடுத்துக் கொண்டு அந்த " மைதா "
என்ற மாவுவகை உணவு மானுடனு-
-க்கு நன்மை பயக்குமா இல்லை எனில்
தீமை அளித்திடுமா? என்ற இரு வேறு
வாதங்களை உங்கள் முன்பாக நான்
வைத்து "உங்கள் உடல் நலத்திற்காக"
இந்த கட்டுரை பார்த்து படித்த பின்பும்
கூட மைதா மாவினால் தயார் செய்ய-
-ப்பட்ட உணவு வகைகளை உண்ண-
வேண்டுமா இல்லை வேண்டாமா என
முடிவுஎடுத்து செயல் படுத்தவேண்டிய
கால கட்டத்திற்கு உங்களை வர வைப்-
-பது ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரை
எழுத வேண்டியதன் நோக்கமும் நல்ல
இலட்சியமும் கூட என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
பொதுவாகநம்மில் அநேகர் இரவில்
சாப்பிடும் சிற்றுண்டி வகைகளில் மிக
முக்கியமான இடத்தினை பிடித்துள்ள
உணவு அதன் பெயர்தான் "புரோட்டா"
இந்த உணவு செய்திட மூலப் பொருள்
"மைதா மாவு " தான். மூன்று முதல்
நான்கு மணி நேரம் வரை ஊறவைக்க-
-ப்பட்டு பின் கண்ட கண்ட எண்ணை
தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடி-
க்கப்பட்டு நன்கு வீசப்பட்டுபெரிய
அளவில் தோசைபோலஅந்த மாவை
பெரிதாக ஆக்கி பிறகு தட்டையாகத்
தட்டி தோசைக்கல்லில் பொன் நிறமாக
எண்ணை ஊற்றி பிரட்டிப் போட்டு சுடச்
சுட எடுக்கப்பட்டு குருமாவை ஊற்றி
சாப்பிடும்போது இருக்கே சுவை!!
அப்பப்பா சொல்லிடும்போதே நாவில்
உமிழ்நீர் ஊறி அதில் நாக்கு நீச்சல்
அடிக்கின்றது அன்பர்களே.
ஆனால் இந்த புரோட்டாவில்தான்
எத்தனை உடல்நலத்திற்கு கேடு
விளைவிக்கும் விஷயங்கள் புதைந்து
கிடக்கின்றது என்பது உங்களில் யார்
யாருக்கு தெரியும் ?
முதலில் இந்த மைதா மாவு எப்படி
தயாரிக்கப் படுகிறது என்பதை நாம்
பார்ப்போம். இந்த மைதா மாவின் தாய்
என்பவள் யார் என்றால் அவள் வேறு
யாரும் அல்ல அன்பர்களே. அவள்தான்
கோதுமை மாவு.இதனுடன் இரசாயன
கலவையாகப் பயன் படுத்தப் படும்
பொருளின் பெயர் தான் " பென்சாயில்
பெராக்சைடு" மேலும் மற்றும் ஒரு
இரசாயனப்பொருள் "அலோக்சான்ஸ்"
இந்த இரண்டு இரசாயப் பொருளும்
நச்சு கலந்த சிறிதுசிறிதாககெடுக்க
வல்லது.இது பசியை உடனே அடக்கும்
நமது இரைப்பை,பெருங்குடல் மற்றும்
சிறுகுடல் ஆகியவைகளை மட்டும்
பாதிப்பது இல்லை இத்தோடு உங்கள்
செரிமானசக்தியைவெகுவாககுறைத்
து அதனால் பெப்டிக் அல்சர் போன்ற
குடல்,இரைப்பை பகுதிகளில் ஆறாத
புண்களை உண்டாக்குவதால் தீராத
வயிற்று வலியுடன் நீங்கள் சுகமாக
நாட்டினில் வாழலாம் அன்பர்களே !!
வேறு எந்தக் கெடுதலும் இந்த மைதா
மாவு புரோட்டா மற்றும் பூரி ஆகியன,
செய்வது கிடையாது அன்பர்களே
இவைகளுடன் சேர்த்து இப்போது
நவீன உலக உணவு " பிட்சா" இதுவும்
புரோட்டாவின் அன்புத் தம்பி தான்.
சரி! என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இப்போது நாம் கட்டுரையின் இறுதிப்
பக்கம் வந்து விட்டோம். இந்த வார
ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த தகவல்
படி இப்போது இந்த "மைதா" விஷயம்
நீதி மன்றம் வரை சென்று விட்டது.
மதுரை உயர்நீதின் மன்ற கிளைதனில்
வழக்கறிஞர் திரு மது என்பவர்
தாக்கல்செய்துள்ளபொதுநல
மனுவில்கோதுமையில் இருந்து
மைதா மாவு தயாரிக்கஇரண்டுரசாயன
பொருட்கள்"பென்சாயில்பெராக்சைடு"
மற்றும் "ஆலோக்சான்ஸ் "ஆகிய இந்த
இரண்டு ரசாயப் பொருட்களால் இங்கு
மனித உடலில்தாக்குப்பிடிக்கமுடியா-
-த அளவு வயிற்றின் பக்கம் பல்வேறு
வியாதி,குடல் புண்,இரைப்பை நோய்
போன்றவற்றால் பாதிப்பு உண்டு என்று
அறிந்திருந்தும்மத்திய மாநில அரசுகள்
எந்த விதமான நடவடிக்கையும்
எடுத்திடாமல்,வேடிக்கைகளும்
எவ்வித தடுப்பு ஏற்பாடுகளும்
எடுத்திடாத மாநில அரசினை கண்
காணித்து மக்கள் நலம் பேண உத்திரவு
இட வேண்டுமாய் கேட்டுகொண்டது
.
விசாரணைக்கு இந்த மனுவினை
ஏற்றுகொண்ட மதுரை உயர்நீதி மன்ற
கிளை அடுத்த விசாரணையை ஜூன்
மாதம் 6ம் தேதிஒத்தி வைத்து
உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்குள்
பதில் மனுவை தாக்கல் செய்திட
மத்திய மாநில அரசுகளுக்கு
உத்திரவிட்டதுடன்,மைதா மாவு
விற்பனைக்கு ஏன் தடை செய்ய
கூடாது என்பதற்கும் விளக்கம் தர
வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது
மதுரை உயர்நீதிமன்றக் கிளை மத்திய
மாநில அரசுகளிடம் !!
சரி அன்பு நேயர்களே !! மீண்டும் எனது
"எண்ணசிறகுகள் "வலைதளத்தின்வழி
உங்கள் அனைவரையும் வேண்டி
விரும்பி கேட்டுகொள்வதெல்லாம்
தயவுசெய்து உங்களது உடல்நலம்
கருதி இன்றுமுதல் எந்த சூழலிலும்
"புரோட்டா" மற்றும் "பிட்சா" போன்ற
மைதா மாவினில் தயாரிக்கும் இது
போன்ற உணவுப் பொருட்களை நாம்
உண்ண மறுப்போம் என்ற உறுதிப்பாடு
நிறைந்த கொள்கை முடிவுதனை மேற்
கொள்வோம் என்று தீர்மானித்து அதன்
படியே வாழ்ந்து நமது உடலைப் பாது-
-காப்போம்.
" சுவரை வைத்துத்தான் நாம்
சித்திரம் வரைய முடியும் " !!
மிக்க நன்றி.வணக்கம்.
அன்புடன் மதுரை TR.பாலு.
Friday, 26 April 2013
எய்தவன் ஒருவன் !! பாய்வது வேறு ஒருவரிடமா ? என்ன நியாயம் ??
பொதுமக்களே எச்சரிக்கை தேவை
இங்கே !!
அனைவருக்கும் வணக்கம். நேற்று
காலை மணி 9.3௦ அளவில் கோவை
புறவழிச்சாலைசந்திப்பினில்உள்ள
மூன்று அடுக்கு மாடி வணிக வளாகம்
அதில் உள்ள இரண்டு தனியார் வங்கி
கிளைகள்அதனில்பணிபுரியும்பெண்
உதவியாளர்கள் மூவர் உட்படநால்வர்
திடீரென்றுஏற்பட்ட தீவிபத்தில் அங்கே
கட்டிடத்தின் உள்ளே மாட்டிகொண்டு
வெளிவரத் தெரியாது தீயினில் கருகி
கரிக்கட்டையாக இறந்து போய் இருக்-
-கிறார்கள் அன்பர்களே. அவர்களது
ஆன்மா சாந்தி அடைந்திட நாம் நமது
முகப்புத்தகக்குழுவினர் அனைவரும்
இரண்டு நிமிட மௌன அஞ்சலிதனை
செலுத்திடுவோம். சுவர்கத்தினில்
அந்த நால்வரது ஆன்மாக்களும்
சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவன்
அருள் பரிபாலிப்பாராக!!
இன்றைய தினம் அந்த தீ விபத்து பற்றி
விசாரணைநடத்துகின்றகாவல்துறை
அலுவலர்கள் கட்டிடஉரிமையாளர்கள்
மூவரில் இருவரைக் கைதுசெய்து
அவர்கள் மேல்கொலைக்குற்ற வழக்கு
பதிவு செய்திருக்கிறார்களாம்.எதற்கு?.
அனுமதிக்கப்பட்ட ஒரேஒருமேல் தள
கட்டுமான உத்திரவை மீறி மேலும்
இரண்டு தளங்கள் கட்டியதற்காக. இது
எப்படி இருக்கு நியாயம் ? முழு பூசணி
-க்காயசோத்திலேமறைக்கும்வேலை
என்பது இதுதானோ? யாரிடம் கதை
விடுகிறீர்கள். அங்கே கோவை மாநக-
ராட்சி கட்டிடக் கட்டுமானப் பிரிவு
சோதனை அலுவலர்கள், அதற்கு மேல்
ஆணை தரும் உயர் அலுவலர்கள்,
இவர்களில் யாருக்குமே விழிப்
பார்வை என்பதே இல்லாத குருடர்
இனத்தினைச் சேர்ந்தவர்களா?
என்னடா இது நாட்டிலே எங்கு பார்த்-
-தாலும் லஞ்சப்பேய்கள் தலைவிரித்து
ஆடிடும் உங்களது கொடுமைகளுக்கு
பலி ஆவது சாதாரண பச்சிளம்
பெண்கள்தானா? பதில் சொல்லுங்கள்
அய்யா?பதவியில் உள்ளவர்களே.
எங்களுக்கு தெரியும் உங்களால் பதில்
சொல்லிட இயலாது என்று.கடவுள்
என்று ஒருவர் இருக்கிறார். தகுந்த
நேரம் வரும்.பதிலும் கிடைக்கும்.அது
வரை:-
அந்தக் கால திரைப்பட பாடல் ஒன்று
நமது காதுகளில் ஒலித்துக் கொண்டு
இருக்கட்டும்.
""இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே--நம்
நாட்டிலே ""!
சத்தியம் தவறாத உத்தமர் போலவே
நடிப்பார் !!சமயம் பார்த்து பலவகை-
-யிலும் கொள்ளை அடிப்பார்.
பக்தனைப் போலவே பகல்வேஷம்
கொண்டு பாமர மக்களை மாய
வலைதனில் வீழ்த்தி அதுபோல்
இன்னும் எத்தனைகாலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!இந்த
நாட்டிலே !நம் நாட்டிலே !!
முண்டாசுக்கவி பாரதியார் என் முன்
வந்து நின்று பாடுகிறான் அய்யா :-
நெஞ்சு பொறுக்குது இல்லையே. இந்த
நிலைகெட்ட மனிதனை நினைந்து
விட்டால் ! நெஞ்சு பொறுக்குது
இல்லையே !!அஞ்சிஅஞ்சிசாவார்.
இவர்அஞ்சாதபொருள்இல்லைஅவனி
யிலே!! வஞ்சனைப் பேய்கள் என்பார்
இந்த மரத்திலேன்பார் ! அந்தக் குளத்-
-திலேன்பார்.துஞ்சி மடிகின்றாரே.
நன்றி.வணக்கம்.மதுரை T.R.பாலு.
Thursday, 25 April 2013
"திருவிளையாடல்" படம் பற்றிய சில மறைக்கப்பட்ட உண்மைகள் !!
"திருவிளையாடல்"
வாழ்ந்துவரும்உண்மைத்தமிழ்நெஞ்ச-
-ங்களே!!உங்கள் அனைவருக்கும் என்
இதயம் மலர்ந்த வணக்கம் !!
மறைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க என்
நெஞ்சம் கவர்ந்த தமிழ் திரைப்பட
உலகின் இயக்குனர்களில்நான் மிகப்
பெரிதும் போற்றி வணங்கி வருவது
தெய்வத்திரு A.P.நாகராஜன் என்பவர்
மட்டுமே என்று சொன்னால் அது
மிகை ஆகாது அன்பர்களே !!
அவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்-
படங்கள் என எத்தனையோ படங்கள்
எடுத்து இருந்தாலும் எனது நெஞ்சம்
நிறைந்த படம் "திருவிளையாடல் "
படம் மட்டுமே ! அந்தத்திரைப்படத்தில்
மறைக்கப்பட்ட சில உண்மைகளை
நான் உங்களது சீரிய சிந்தனைக்கு
இப்போது விருந்தாக தருகிறேன்.
மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள்
இந்தத் திரைபடத்தினில் பல உண்டு
என்றாலும்கூட"பாட்டும் நானே-பாவ
மும் நானே "என்றபாடல் உண்மையில்
கவிக்கோ திரு கா.மு.SHERIFF அவர்கள்
எழுதியதுதான் என்றாலும் கூடஅவரது
மதம் இறைவனுக்கு இணை வைத்துப்
பார்ப்பது,நினைப்பது,சொல்வடிவம்
கொடுப்பது மன்னிக்க முடியாதகுற்றம்
ஆகவே (தான்எழுதிய) அந்தப் பாடலை
கவியரசர் கண்ணதாசன் பெயரில் திரு
APN அந்தப் படத்தினில் அரங்கேற்றி
இருந்தார்.ஆகவே நாம் எல்லாம் இது
வரை கவியரசர்தான் அந்தப் பாடல்
புனைந்தவர் என்று எண்ணிக்கொண்டு
இருந்தோம் அல்லவா என் இனிய
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! அது
வல்ல உண்மை !!மேலேசொன்ன
அந்த "பாட்டும்நானே பாவமும் நானே"
என்றதேனினும் இனியஅந்தத்தெள்ளு
தமிழ்பாடலை இயற்றி நமக்கு அள்ளித்
தெளித்தபெருமைகவிக்கோதிருகா.மு
ஷெரிப் அவர்களையேசாரும் என்பதை
நமதுநினைவில்கொள்ளவேண்டியது
மிக மிக அவசியம் அன்பர்களே !!
அடுத்து இந்த "திருவிளையாடல்"
படத்தினில் நமக்கு உண்மையை
மறைத்து சிரிப்பாக அந்த பகுதி இடம்
பெற வேண்டும் என்ற மறைந்த A.P.N.
செய்த வரலாற்று நிகழ்வுதனை சற்று
உரு மாற்றிய பெருமையும் அவரையே
சாரும்.
படத்தினில் இடம் பெற்ற "தருமி"கதா
பாத்திரம் உண்மையில் ஒரு வறுமைக்
கோட்டிற்கு கீழே வாடிடும் ஒரு ஏழை
பிராமணனின் கதையே அல்ல.
உண்மைத் திருவிளையாடல் புராணத்-
-தில் "தருமிக்கு பொற்கிழி வழங்கும்"
சம்பவம் எப்படி உருவாக்கப்பட்டு
இருந்தது என்றால் அந்த தருமிக்கு
அவனது மனதில் நீண்ட நாட்களாக
ஒரு ஆசை. அவன் ஒரு மிகச் சிறந்த
சிவ பக்தனும் கூட. தாய் மீனாக்ஷி
அம்மனை அவளது கர்ப்பக்ரகத்தினுள்
சென்று அவளுக்கு அபிஷேகம்,மற்றும்
ஆராதனை,பூஜை,புனஸ்காரங்கள்
செய்து தனது பிறவி மோட்ச கதி பெற
வேண்டும் என்பதே அந்த தருமியின்
ஆசை. ஆனால்தருமியோஒரு கட்டை
பிரம்மச்சாரி. கிரகச்சாரிகள் மட்டுமே
(அதாவதுதிருமணமானஇல்லறத்தில்
ஈடுபட்டவர்கள்மட்டுமே) அங்கேஉள்ள
அம்மனின் கருவறையினுள்வரை
சென்று அம்மனுக்கு மேலேசொன்ன
அபிஷேக,ஆராதனை செய்திடும்
தகுதி படைத்தவர்கள். சரி பேசாமல்
திருமணம் செய்துகொண்டு தருமி
அம்மனை வழிபட வேண்டியதுதானே
என்று நீங்கள் நினைப்பது போல
வரலாற்றினை புனைபவர்களது புத்தி
தனில் உரைக்காமல் இல்லை.
இப்போது உள்ளதுபோல அந்தக் கால
நடைமுறைகள் கிடையாது. ஒரு
பெண்ணை ஆண் திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்று ஆசைப்
பட்டார் என்றால் அந்த பெண்ணைப்
பெற்றுவளர்த்துஆளாக்கிநல்ல பருவப்
பெண்ணாக இந்த ஆண் மகன் ருசித்து
உண்ணும் கனியாக ஆக்கித் தந்த அந்த
பெண்ணைப் பெற்றோர்களுக்கு இந்த
மணம்செய்யநினைத்திடும் மணமகன்
பொற்காசுகள் உள்ள பணப் பைகள்
கொடுத்தால்மட்டுமேஅவனுக்கு பெண்
கொடுப்பார்கள். இஸ்லாமியர்கள்
சமூக அமைப்பினில் இன்றும் பெயர்
அளவில் கடைப் பிடிக்கப்பட்டு வரும்
"மஹர்" பணம் போல.
ஆனால் இவனோ மிக பரம ஏழை.
எப்போது இவன் பணம் சேர்க்க! மணம்
முடிக்க! அம்மனை வணங்கி வழிபட?
அதனால்தான் சிவபெருமானிடம்
அந்தத்தருமிதனதுமனம்உருகவேண்டி
அந்த வேண்டுகோளினை சிவன் ஏற்று
தருமிக்கு பொற்காசுகள் கிடைத்திட
வழிவகுக்கும் விதமாகவே பாண்டிய
மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு
இயற்கை மணம் உண்டா அல்லது
செயற்கை மணம்தான் அவர்களால்
ஏற்றப்படுகிறதா என்ற சந்தேகத்தினை
மன்னனுக்கு ஏற்படுத்தி (ரொம்ப முக்கி
யம் இந்த சந்தேகம் இதுபோல வேலை
இல்லாத அரசர்கள் பலர் அந்தக்
காலத்தும் வாழ்ந்துதான் உள்ளனர்.
தற்போது வேலை ஏதும் இல்லாத
அமைச்சுகள் பல போலவே ) அதை
தீர்த்து வைப்போருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்க
வைத்தது இவை எல்லாம் உண்மைத்
திருவிளையாடல் புராணத்தில் உள்ள
சம்பவங்கள் அன்பர்களே!இதில்
நமக்குநகைச்சுவைஉணர்வினைஏற்ப
டுத்திஅந்த பெருமைமிகுந்ததருமியின்
உள்ள உணர்வுகளை சிறுமைப் படுத்தி
ய அந்தப் பெருமையும் மறைந்த APN
அவர்களையே சாரும்.
"திருவிளையாடல்"திரைப்படத்தில்
மறைக்கப்பட்ட சில உண்மைகளுள்
இதுவும் ஒன்று என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
இத்தனைநேரம் எனது இந்த மிக நீண்ட
கட்டுரைதனை பொறுமையுடன்
படித்து இரசித்த உங்களது பெரிய
உள்ளத்திற்கு எனது நன்றி கலந்த
வணக்கங்களைச் சமர்ப்பித்து விடை
பெறுகிறேன் எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
வாழ்வோம் நாம் அனைவரும்!!
வளமுடன் !! நற்பண்புடன் !!
அன்புடன்.மதுரை. T.R.பாலு.
மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி ?
தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழிலேயே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது )
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் எனது
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது சிரம்
தாழ்ந்த கரம் குவிந்த அன்பு நிறைந்த
வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.
இன்றைய தினம் நம்மில் திருமணம்
முடித்து கால்கட்டு போடப்பட்ட ஆண்
வர்கத்தினரை தினசரி வாட்டி வதைத்-
-திடும் ஒரு சிக்கலான சிரமமான நம்
எல்லோரது பிரச்சனைகளுக்கும் ஒரு
ஒட்டுமொத்த தீர்வு காண்பது எப்படி
என்று நம்மில் நிறையப் பேர்களது
வாழ்வினில் ஒளிஏற்றிடும் நல்லதோர்
புது முயற்சியாக நான் அதிகாலை
வேளையில் சிந்தித்து இருந்தனால்
எனது அறிவுக்கு எட்டிய சில விஷயங்- -
களைஉங்களுடன்பகிர்ந்துகொண்டால்
அதுஉங்களுக்கும்பேருதவியாகஅமை-
-ந்திடும் என்றகாரணத்தால்நான்இன்று
எனது " எண்ணச் சிறகுகள் " அதன்
மூலமாக உங்களுடன் விவாதிப்பதில்
பெரும்மனமகிழ்ச்சிஅடைகிறேன்.
பொதுவாக தமிழில் ஒரு முது மொழி
ஒன்று உண்டு.அது என்னவென்றால்
மோகம் முப்பது நாள் !! ஆசை அறுபது
நாள்!! ஆக மொத்தம் தொண்ணூறு
நாள்என்று. இதற்குஉண்மைப் பொருள்
என்னவென்றால் திருமணமான 3
மாதத்தோடு சரி.உனது மோகம் ஆசை
எல்லாம்வேரோடும்வேரடிமண்ணோ-
டும் சாம்பல் ஆகி அத்தோடு முடிந்து
விடுகிறதுஎன்றுசொல்லுவதற்காகவே
அதன்பின்இந்தமனைவிஎன்பவளிடம்
இந்தப் புருஷன் படும் பாடு உள்ளதே
அப்பப்பா !என்னால் அதை வார்த்தை
யில்சொல்ல முடியவில்லை.நின்றால்
குற்றம். அமர்ந்தால் பெரும்குற்றம்.
இதுபோல.இன்னும் பலபல. சரி பின்
எப்படித்தான் இந்த மனைவி என்னும்
அம்மையாரிடம் நாம் நல்லபெயர்
வாங்குவது என்று நம்மில் அநேகர்
தவித்திடும் தவிப்பு. அதனை சரி
செய்திடவேஇந்தகட்டுரை உங்களுக்கு
பலஅறியபெரிய முன் யோசனைகளை
உங்களுக்கு சொல்கிறது அன்பர்களே !!
யோசனைஎண்1) உங்களுக்கு மனமாற
பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ
சும்மா மனைவியைப் புகழ்வதுபோல
நடிக்கக்கற்றுக் கொள். அதிலும் இரவுப்
பொழுது எனில் நல்லா வெளுத்து
வாங்கு உனது நடிப்புத் திறனுடன்.
நல்ல பெயர் மனைவியிடம் தானாக
உன்னைத் தேடி வரும் அன்பரே !!
சங்ககால பாடல் ஒன்றினில்"புகழ்ச்சி"
எவ்வாறு நடந்தால் நலம்பயக்கும் என
தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது
அன்பர்களே. பாடலைப் பார்ப்போம்:-
நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே
புகழ்தல்!!
ஆசானை எவ்விடத்தும் அப்படியே !!
பாச மனையாளைப் பஞ்சணையில் !!
மைந்தர்தம்மை நெஞ்சில் !!
வினைஆளை வேலை முடிவில் !!
என்று மிகத் தெளிவாக வருங்கால
சமுதாயம் எப்படி எல்லாம் விழிப்பு
உணர்வோடு வாழ்ந்திடவேண்டும்
என்று அருமையாக ஒரு வரைமுறைப்
படுத்தி எழுதப் பட்ட மேலேசொன்ன
பாடலில் தான் எத்தனை எத்தனைக்
கருத்துசெறிவுகள்அதனைஉள்அடக்கி
எழுதப் பட்டுள்ளது பார்த்தீர்களா என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!இந்தப்
பாடலின் 3 ஆவது வரிதான் நமது
கட்டுரைக்கு மிக முக்கியமான வாதம்
ஆதலால் அதற்கு மட்டும் நான் இங்கே
விளக்கம் தருகிறேன் அன்பர்களே.
கற்பனை நாடகம் !!
அது முன் இரவு நேரம் மணி சுமார் 11
ஆகி இருக்கும். கணவர் திரு கந்தனும்
மனைவி மங்களமும் உணவுமுடித்து
அருகருகேபடுத்துஉறங்குவதற்குமுன்
நடைபெறும்உரையாடல்.இதுவும் ஒரு
கற்பனையே !!
கந்தன்:- ஏண்டி!மங்களம். இன்னைக்கு
வச்ச மீன் கொழம்பு அடடா என்ன ருசி
என்ன ருசி. அவ்வளவையும் நான்
ஒருத்தன்மட்டுமேசாப்பிட்டு விடலாம்
போல இருக்கே. எம்மா! கண்ணு!நீயா
வச்ச.சொல்லுடா தங்கம்.
மங்களம்:என்ன கரிசனம்!!அப்படியே
பொங்கி வழியுது. நான்தான் வச்சேன்.
கந்தன் :- ஏன்டாகண்ணு!!கோச்சுக்கிரே.
ருசியாஇருந்ததாலேதானே கேட்டேன்.
மங்களம் :- ஏன் அதை சாப்பிடும்போது
கேட்டா என்னவாம்?
கந்தன்:- ஏய்! மக்கு!! அம்மா பக்கத்லே
இருந்தாங்கள்ளே. என்னாட இது நாம
முப்பதுவருஷமா இதே மீன் குழம்பு
வச்சு தந்து இருக்கேன். அப்பல்லாம்
இல்லாத ருசி இந்த முட்டாப் பய மவ-
-னுக்கு இப்ப வருதோ அப்படின்னு
நினைசுக்கிடுவா இல்ல!! தங்கம். உம்!
அதனாலதாண்டாசெல்லம்! என்னால்
சொல்ல முடியலைடா. தப்பா நீ அதை
எடுத்துக்காதடா. என் வைரம்.என்ன
சரியா !!
மங்களம்:- நிஜம்மாவா மச்சான் நீ
சொல்றது ?
கந்தன்:- அட!ஆம புள்ளே !! சத்தியமா
சொல்றேண்டா என் தங்கமே.
மங்களம்:- எனக்கு இப்ப ரொம்ப மனசு
சந்தோஷமா இருக்கு மாமு.
கந்தன்:- அப்படியா! சரி!சரி!விளக்கை
அணைச்சுட்டுவந்துபக்கத்துலேதூங்கு
இரவு முடிகிறது.பொழுது விடிகிறது.
கொக்கரக்கோ என்ற சேவலின் கூவல்
ஒலியுடன்.
மறுநாள் காலை மணி 7
கந்தன்:- அடியேய் ! மூதேவி! மங்களம்
ஏண்டி உன் மனசுலேநீஎன்னாடி நினை-
ச்சுக்கிட்டுஇருக்கே. உம்! மணி 7ஆவுது
இன்னும் காபியைக் காணலே!
மங்களம்:- அட ஏன் மச்சான் இப்படி
கத்துறே.மாமு நேத்து தங்கம்,வைரம்,
செல்லம்அப்டின்னுஎல்லாம்என்னைப்
பேசினியே மாமு. இப்ப என்ன ஆச்சு
மாமு உனக்கு?
கந்தன்:- அட மூதேவி! அது ராத்திரிடி!
இதுபகல்!இப்பதெரியுதா வித்தியாசம்
போடி!போடி!போய் வேலையைப்பார்டி
வந்துட்டாளுக.கொஞ்சுறதுக்கு.
இது தான் உலகம்.இதுபோலத்தான் 1௦௦
ஆண்களில்99பேர்கள் நடந்துகொள்கின்
றனர் அன்பர்களே ! (1௦௦வது நபர் நான் )
இங்கே நான் எதற்காக இந்த ஓரங்க
நாடக பாணியில் இரவுப் புகழ்ச்சி
பற்றிஉங்களிடம்விரிவாகச்சொன்னே
ன் எனில் இன்றைய தினம்உலகமே
காரியம்முடியும்வரை காலைப்பிடி
முடிந்தபின்னேகவுத்துஅடிஎன்றே
சுழன்றுகொண்டு உள்ளது அன்பர்களே.
சரி இறுதியாக நாம் இப்போது கட்டுரை
முடிவுக்கு வருகிறோம்.
மனைவியிடம்நல்லபெயர்வாங்குவது
எப்படி?
மனைவிகுடும்பத்துஉறவுகள் யாரோ
அவர்களிடம்மிகவும்அன்புஉள்ளவராக
இயல்பாக நடிக்கவேண்டும். மிக மிக
முக்கியமாகமச்சுனன்கிட்டே.மனைவி
தங்கை கொளுந்தியாளிடம்.இதுவே
குறிப்பு எண் ஒன்று.
குறிப்பு எண் இரண்டு:- மனைவி எது
கேட்டாலும்.என்ன சொன்னாலும்
நீங்கள் அதற்காக உணர்ச்சி வசப்படாத
வண்ணம் முகத்தை சிரிப்பாகவே
வைத்துக் கொண்டு இந்த 3 மந்திரத்தை
தினமும் சொன்னாலே போதுமானது.
1) ஆமா ! ஆமா!
2) அதெல்லாம் சரிதான் !!
3) நீ சொன்ன மாதிரி !!
இது போதுங்க. எப்ப பார்த்தாலும் நீங்க
உங்க மனைவிகிட்டே நல்ல பெயர்
மட்டுமே வாங்கு வீங்க. சத்தியம்.இது
சத்தியம்.உண்மை.உண்மை.
என்னாங்க.நீங்களும் இதுபோலவே
பேசி காரியத்தை கச்சிதமாய் முடிங்க.
என்ன நான் சொல்றது.அப்பநான் போய்
வரவா?
நன்றி! வணக்கம் !!
அன்புடன்.மதுரை T.R.பாலு.
Subscribe to:
Posts (Atom)